Page 2 of 59 FirstFirst 1 2 3 4 5 6 12 52 ... LastLast
Results 13 to 24 of 700

Thread: கவிச்சமர் - விமர்சனம்.

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    கவிதைக்கு வேறெதுவும் தேவையில்லை
    கண்களை மூடினேன்
    உன் திருமுகம்
    கவிதையாய்
    கவிதைக்கு
    கவிதையே
    நீ எப்பொழுதும் எனக்கு கவிதையே, உன் அன்பு கவிதை, உன் பாசம் கவிதை...அனைத்தும் கவிதையே..எல்லாம் அண்ணிக்குதானே!!!!



    Quote Originally Posted by murthykmd View Post
    கவிதை எழுத
    காதலிக்க வேண்டுமாம்!
    நானும்
    காதலிக்கிறேன்
    என் கவிதையை!
    சூப்பர்ங்கோய். நச்சுனு இருக்கு ...நல்ல சிந்தனை. பலே



    Quote Originally Posted by ஆதவா View Post
    கவிதையே எழுதி எழுதி
    காதல் தொலைத்துவிட்டேன்
    இப்போது
    காதல் எழுதி எழுதி
    எல்லாமே தொலைத்துவிட்டேன்.
    இதான் காதலின் முடிவுரையோ...அருமையாக இருக்குலே


    Quote Originally Posted by stselvan View Post
    தொலைத்துவிட்டேன்
    மனம் முதலில்
    மதி பிறகு
    நிம்மதி இறுதியாக
    அண்ணா,
    மனம் என்பது அந்த இருமனம் இணைந்த திருமணம்தனே!! ஹி ஹி வாழ்த்துக்கள்!!!!!!! எங்கே நிம்மதி அங்கே அண்ணாக்கு ஒரு இடம் வேணும்...



    Quote Originally Posted by ஆதவா View Post
    இறுதியாக எழுதப்பட்ட
    இரு கவிதைகள்
    நம் மடியில் உறங்குகின்றன
    பால் மனம் மாறாமல்
    இது குழந்தைகளா!!! சபாஷ்.



    Quote Originally Posted by murthykmd View Post
    இறுதியாகவும், உறுதியாகவும்
    சொன்னாள்,
    என்னை மறந்துவிடு என்று!
    இதயம் பறிபோனதென்னவோ
    எனக்குதான்!
    காதலில் இதயம் பறிப்போவது சகஜமப்போ.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    மாறாமல் இருந்து விடு
    நீயாவது
    மாறுவது
    உன்னாலாவது
    மாறிப் போகட்டும்
    சொல் விளையாட்டு தூள் அண்ணா.


    Quote Originally Posted by ஆதவா View Post
    போகட்டும் உன்னோடு
    இக்கவிதையின் துளிகள்...

    நீ அருகிலிருக்கும் தருணங்களில்
    எழுதி வடித்தது இவைகள்.
    நீ பிரிந்த நாள் முதல்
    கவிதை வரைவதற்கும்
    தூரிகைகள் சஞ்சலப்படுகிறதே!!
    அட என்ன அருமையான சிந்தனை!!!!! பலே


    Quote Originally Posted by stselvan View Post
    சஞ்சலப்படுகிறதே
    இளமனது
    இவள் மனது
    இதயத்தில்
    ஒரு தராசு
    பாசமும் காதலும்
    தட்டுக்கள் உயர்ந்து இறங்க
    உணவிறங்கவில்லை
    யாரின் இதயமும் இரங்கவில்லை
    கடைசியில் சாதித்தாள்
    அவளுக்கு ஆயிரம்
    இரங்கல் கவிதைகள்
    யாரின் இதயமும் இரங்கவில்லை

    கடைசி நாலு வரி பிரமாதம்



    Quote Originally Posted by ஆதவா View Post
    கவிதைகள் புலப்படுகிறது
    கண்களின் மொழிமாற்றத்தில்
    காதல் புலப்படுகிறது
    இதயத்தின் ஒலிமாற்றத்தில்
    காமம் புலப்படுகிறது
    தேகத்தின் சுகமாற்றத்தில்
    சோகம் புலப்படுகிறது
    இவையனைத்தின் பரிமாற்றத்தில்
    மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு, மொழிமாற்றத்தில், ஒலிமாற்றத்தில், சுகமாற்றத்தில், பரிமாற்றத்தில்............தூள்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    பரிமாற்றத்தில் தடுமாற்றம்
    இதயம் பரிமாறி
    இதயத்தில் இளைப்பாறி
    இதையும் அதையும்
    இடம்மாற்றி
    காதல்
    நல்லா இருக்குலே, இப்படிதான் காதல் ஆரம்பிக்குதா??


    Quote Originally Posted by ஆதவா View Post
    காதல்
    என்னை நோகடிக்கிறது
    இந்த பாழாய்ப் போன
    கவிதைகளை எழுதச் சொல்லி
    ஹி ஹி ஹி மீண்டும் ஒரு உண்மை.



    Quote Originally Posted by stselvan View Post
    சொல்லிச் சென்றவளே
    சொல்லாமல் மயங்கும்
    இதயம் புரியுமா உனக்கு

    புகை வண்டியில் சன்னலோரத்தில்
    எட்டிப் பார்த்து
    கையசைக்கையில்
    ஆடிப் போனது என் மனது
    அடுத்த கோடை விடுமுறை வரை
    நினைவுகளைச் சுமந்து
    பிளாட்பார பெஞ்சுகளில்
    என் மனக் கீறல்கள்
    பதியப் படும்
    உன் பெயராக
    காதலின் பிரிவு மாபெரும் துயரமாம்....கல்யாணத்திற்க்கு பின் 3 மாதம் அம்மா வீட்டில் டேரா அடிச்சாலும் சந்தோஷமாம். (ஹி ஹி இடிக்குதா அண்ணா)


    Quote Originally Posted by ஆதவா View Post
    உன் பெயர் அந்த பட்டியலில்
    கண்டபோது துடித்துப் போனது
    உன்னைக் காதலித்த உள்ளம்.
    எப்படி?
    ஏன்?
    எனக்குத் தெரியாத வஞ்சம்.
    பாதகத்தில் ஒரு கலையாக...
    உன்னால் இழுத்துவரப்பட்டு
    காவல் அறையில்
    எனக்கான கேள்வி கேட்கப்பட்டது
    " அந்த பிராஸ்டியூட் உன் காதலியா?"
    அட ஆதவா,
    இந்த கவிதையை படித்து ஆடிவிட்டேன்.....உன் சிந்தனையே தனிதான்.... வாழ்த்துக்கள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    காதலியா மனைவியா
    நீ
    நான் இன்னும்
    மகிழ்ச்சியாய் இருக்கிறேனே
    கொடுத்து வச்ச மகாராசாதான். உண்மை காதல் என்றும் நிலைக்கும். அருமையான வரிகள்.


    Quote Originally Posted by மனோஜ் View Post
    இருக்கிறேனே என்று நீ நினைப்பாய்
    உண்மையில் நான் இல்லை உன்
    இதயம் தான் இங்கு இருக்கிறது
    பெண்னே நீ சென்றால் நான்
    இங்கில்லை இறைவனிடம்
    காதல் தோற்றால் இறைவனின் சன்னிதிதான் சரணேன்றால்.......வெகுவிரைவில் அங்கு!!!!


    Quote Originally Posted by ஓவியா View Post

    இறைவனிடம் கேட்டு கேட்டு
    சலித்து விட்டது என் முகவரியை

    இனி ஒருமுறை அவன்
    இல்லை என்று சொன்னால்
    கல்லறை மட்டுமே கதி.....இது நிஜம்.
    சும்மா சும்மாதான்.



    Quote Originally Posted by sinnavan View Post
    இது நிஜமானால்
    உம் அன்பை விட்டு
    பிரியும் நெஞ்சங்கள் பல..
    இதுவே கனவானால்
    உம் அன்பில் திளைக்கும்
    நெஞ்சங்கள் பல...
    நல்ல ஊக்க மருந்து போல் அழகிய கவிதை . நன்றி சின்னவன்.


    Quote Originally Posted by ஆதவா View Post
    நெஞ்சங்கள் மறுக்கிறது
    கண்கள் அதைக் கண்டு
    அலறுகிறது
    என்ன செய்வேன் காதலியே
    உன் ஒருத்திக்காக
    என் இளமை வீண்படுவதா?
    அப்ப காத்திருக்க முடியாமல், காதலை கொன்று வேறு துணையை தேடுவது ஞாயமா கண்ணு???
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    வீண்படுவதா தடத்தோள்கள்
    வீண்படுவதா உரமேறிய கைகள்
    வீண்படுவதா வீரநெஞ்சம்
    வீண்படுவதா வெற்றித் திருமுகம்
    வா தலைவா
    வெற்றிக்க் கொடிகட்ட
    ;;;
    ;;;
    ''''
    என் கட்சியில்
    கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்
    அரசியல் கவிதை அற்புதம். அந்த வீண்படுவதா ஒரு வார்தையை எப்படி கையாண்டு இருகின்றீர்கள்...பலே செல்வா.


    Quote Originally Posted by ஆதவா View Post
    மாட்டேனென்கிறார்கள்
    சிலர் மணம் முடிக்க..
    அவர்களுக்குத் தெரிவதுண்டா
    தாம்பத்தியம் அறுசுவையுணவு
    பிரம்மச்சரியம் கடும்நோன்பு
    ஆமாம் ஆதவா,
    முயலுக்கு 5 காலுனு சொல்லி நழுவறாங்களே!!!
    அங்கே கேட்டா தாம்பத்தியம் ரணம், பிரம்மச்சரியம் நிம்மதினு சொல்லறாங்க...என்ன பண்ண????



    Quote Originally Posted by stselvan View Post
    கடும் நோன்பு
    விரத வீரியம்
    இல்லாவிட்டால்
    காதல் இவ்வளவு
    தெய்வீகமா?
    இதுவுஞ்சரிதான். நல்ல கருத்து அண்ணா..



    Quote Originally Posted by ஆதவா View Post
    தெய்வீகமா காதல்
    என்று சந்தேகப்படுகிறாய்
    தெய்வம் தான் காதல்
    என்று சந்தோசப் படுகிறேன்
    எது உண்மை?
    மிகவும் அருமையான கவி வரிகள். சபாஷ். உண்மையிலே தெய்வம் தான் காதல்.....



    Quote Originally Posted by stselvan View Post
    உண்மை
    உன்மேல் காதல் உண்மை

    பி.கு:
    பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்த்த
    நன்மை பயக்கும் எனின்.
    ஹி ஹி ஹி



    Quote Originally Posted by ஆதவா View Post
    நான் என்செய்ய
    நுதலும் செவிகளும்
    நோண்டிய ஓர்புறமும்
    துஞ்சலைத் துலைத்துவிட்டு
    நெஞ்சதிடம் கரைத்தனவே
    வில்லுமோர் விழிகள்
    சொல்லுமோர் பாக்களில்

    ஊன் தவிர்க்கக் கண்டேன்
    உளமாறச் சொன்னேன்.
    நிந்தனை ஏதுமில்லை
    நிந்தனையே நினைக்குமடி
    மிகவும் அபாரம் இந்த கவிதை, வர்ணமிட்ட வரிகள் பிரமாதம். இரண்டு மூரை படித்துதான் பாத்தி விளங்கியது. நன்றி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் செலவழித்து பாதிக்கும் மேற்பட்ட கவிதைகளுக்குப் பின்னூட்டமிட்ட ஓவியா அவர்களை எப்படி நின்று பாராட்ட?! வணங்குகிறேன் சகோதரி. உம் பணி தொடர்க.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1
    மன்னிகவும் தவறான இடத்தில் பதித்துவிட்டேன்.
    அதனால் நீக்குகின்றேன்
    Last edited by vijayan_t; 13-05-2007 at 01:33 AM.
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........


  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    தாமரை செல்வன் கவிதைகள்

    பாவி யாகிப் போனேன் - நீ
    பாராது போனதாலே
    காவி யாகிப் போகும் - ஆடை
    கந்தலான மனமே
    ஆவி யிருகி அழுது - கண்ணீர்
    ஆறாகி வருமே
    தேவி எந்தன் ராகம் - உனைத்
    தேடித்தேடி அழுமே!


    அழகிய எதுகைகள். அழகிய கருத்தடங்கிய காதல் கவி.. செல்வன் அண்ணாவின் வேகத்தில் விளைந்த முத்து.

    பூட்டியதால் உன்னை இதயத்தில்
    பூத்ததே ஒரு காதல் பூ
    இருட்டிலும் மலரும்
    இனிமையாய் மணக்கும்
    உன் நினைவுகள்
    கண்கள் மூடி
    இதயம் திறந்து
    சிந்திக்கிறேன்
    பூட்டிய மனதில்
    முட்டிப் போராடிய நீ
    திறந்த இதயத்தில்
    அமர்ந்துவிட்டாய்


    மீண்டும் செல்வன் அண்ணாவின் கைங்கர்யம். பூட்டிய மனதில் முட்டமுடியாது திறந்த மனதில் அமர்ந்துகொல்லும்(ள்) காதலி... சபாஷ்

    காதலியிடம் என்ன கண்டாய்
    அம்மா குமுறினாள்
    அப்பா அடிக்க வந்தார்
    அக்காவும் அண்ணனும் பொருமித்
    தீர்த்தனர்
    ஆமாம்
    யார் இவர்கள்?


    காதலுக்கு முன் யார் இவர்கள் எல்லாம்/??? வேகத்தில் இப்படி எழுதமுடியுமா என்ற ஆச்சரியம்


    எதிரியாய் யாரோ
    என் திரியில் வருவாரோ
    உதிரியாய் இருந்தாலும்
    உறுதியாய் இருப்பாரோ
    கதிரும் பதரும்
    கல்லும் புல்லும்
    எதுவும் புரிபடாமல்
    ஆயிரம் கவிதைகள்
    தெளிக்கப்படுமோ


    நிமிட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை. அந்த நொடிக்குள் அடங்கிய கருத்து.. நீங்கள் சொன்னதுபோலத்தான் எதிரியாய் அல்ல எதிராக நானே இருந்தேன்.... ஹி ஹி பிரமாதம்

    வசனமாம் என் கவிதை
    வசவுகள் வந்தன
    விமர்சனமாக
    விஷமாக
    விமர்சனங்கள் போகட்டும்
    விசனங்கள் வேகட்டும்
    சொந்த சனங்கள்
    சொல்வதென்ன
    காதலா காவியமா?


    சிலர் சொல்வார்கள், இந்த கவிதை வசன நடையில் இருக்கிறது என்று... இருக்கட்டுமே.. அது கவிதை இல்லையா?.. அண்ணாவின் நொடிக்கவிதை மிகுந்த அர்த்தம் பொதிந்ததாகவே இருக்கிறது

    கவிதைக்கு வேறெதுவும் தேவையில்லை
    கண்களை மூடினேன்
    உன் திருமுகம்
    கவிதையாய்
    கவிதைக்கு
    கவிதையே


    மீண்டுமொரு காதல் கவிதை மிக அழகாய்.. கவிதை வரிகள் சூப்பர்... தொடர்க செல்வரே!

    தொலைத்துவிட்டேன்
    மனம் முதலில்
    மதி பிறகு
    நிம்மதி இறுதியாக


    நான்கு வரி நச்.. எல்லாம் நடப்பது காதலினாலே! ஆனால் காதல் என்ற வார்த்தை வராமல் எழுதப்பட்டதுதான் கவியின் சிறப்பே!

    மாறாமல் இருந்து விடு
    நீயாவது
    மாறுவது
    உன்னாலாவது
    மாறிப் போகட்டும்


    அழகிய தத்துவம்.. நீ மாறாமல் இரு. உன்னால் மாறுவது மாறட்டும்.. தூள்...

    சஞ்சலப்படுகிறதே
    இளமனது
    இவள் மனது
    இதயத்தில்
    ஒரு தராசு
    பாசமும் காதலும்
    தட்டுக்கள் உயர்ந்து இறங்க
    உணவிறங்கவில்லை
    யாரின் இதயமும் இரங்கவில்லை
    கடைசியில் சாதித்தாள்
    அவளுக்கு ஆயிரம்
    இரங்கல் கவிதைகள்


    காதலோடு போராடும் பெண்... எந்த ஒரு விஷயத்திலுமே பெண்தானே அடிபடுகிறாள். நல்ல கருத்து.. இந்தமாதிரியான விசயங்களில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்... பாசம் மிரட்டும், காதல் கட்டிப் போடும்...

    பரிமாற்றத்தில் தடுமாற்றம்
    இதயம் பரிமாறி
    இதயத்தில் இளைப்பாறி
    இதையும் அதையும்
    இடம்மாற்றி
    காதல்


    வார்த்தைகளை எப்படி அமைக்கவேண்டும் என்பதில் பாடம் கற்றூக் கொள்ளவேண்டும் போல.... அட போடவைக்கிறது.

    சொல்லிச் சென்றவளே
    சொல்லாமல் மயங்கும்
    இதயம் புரியுமா உனக்கு
    புகை வண்டியில் சன்னலோரத்தில்
    எட்டிப் பார்த்து
    கையசைக்கையில்
    ஆடிப் போனது என் மனது
    அடுத்த கோடை விடுமுறை வரை
    நினைவுகளைச் சுமந்து
    பிளாட்பார பெஞ்சுகளில்
    என் மனக் கீறல்கள்
    பதியப் படும்
    உன் பெயராக


    அழகிய உவமை.. நிகழ்வைப் போன்றதொரு உவமை.. இந்த கவிதையை விமர்சித்தாலே போதும். ஆற்றல் விளங்கிவிடும்

    காதலியா மனைவியா
    நீ
    நான் இன்னும்
    மகிழ்ச்சியாய் இருக்கிறேனே


    இரண்டுமில்லை அவளொரு தெய்வம் என்று சொல்லாமல் சொல்கிறார்...

    வீண்படுவதா தடத்தோள்கள்
    வீண்படுவதா உரமேறிய கைகள்
    வீண்படுவதா வீரநெஞ்சம்
    வீண்படுவதா வெற்றித் திருமுகம்
    வா தலைவா
    வெற்றிக்க் கொடிகட்ட
    ;;;
    ;;;
    ''''

    என் கட்சியில்
    கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்


    சமூக நோட்டத்தில் சமரில் ஒரு கவிதை இந்த சம்மரில்... ஹி ஹி.. அந்த கேப் தேவைன்னு சிலமுறை படிச்சதும் புரிஞ்சுபோச்சு.. கலக்குங்க தலை.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    தாமரை செல்வன் கவிதைகள் தொடர்ச்சி

    நினைக்குமடி ஊர்
    ரோஜாக்களைப் பறித்து
    மந்திரிகளை வரவேற்க
    யானைகளின் கால்களில்
    சிதறவிடும் ஊர்..
    பூக்கள் நசுங்கின
    நாமும் நசுங்கினோம்
    யானையும் மணியோசையும்
    மந்திரிகளின் அடிபொடிகளும்
    முடிந்தவரை காலி செய்ய
    ஊர் மட்டும் மயானமாய்
    அன்று
    நினைக்குமடி ஊர்..


    உவமைகளைப் பாருங்கள்... இருந்தாலும் சற்று விளங்கவில்லை எனக்கு. விளக்கினால் நலம்... ஆனால் கவிதை வெகு சூப்பர்... வாழ்த்துக்கள்

    வாழ்வதெப்படி
    நூல் எழுதியவர்
    பணம் சம்பாதித்தார்
    வாழ்ந்து விட்டார்

    ஹி ஹி... அருமை அருமை... பணம் சம்பாதிக்க என்ன வழியென்று யோசித்து அதை யோசித்ததோடு நில்லாமல் யோசித்ததை புத்தகமாய் போட்டு...... (சே ஒன்னு சொல்ல மிக எளிதான வழி கவிதை என்பது தெரிகிறதா?) சூப்பர் கவிதை..

    மரியாதை
    கம்பீரமாய் வெளியில்
    தலை நிமிர்ந்து சென்றார்

    கிணற்றடியில்
    அவள் அழ
    அந்த கிணற்று நீர்
    உப்பானது.


    சே!! அண்ணாவிடம் செயிக்க இன்னொருவர் பிறக்கனும்... கிணற்றில் கண்ணீர் பட்டு உப்பாகிறதாம்... என்னே ஒரு கற்பனை..

    ஆயுள் தண்டனை அல்ல
    ஆயில் தண்டனை..
    ஆயுசு முழுதும்
    நியாய விலைக் கடையில்
    எண்ணை வாங்க
    கியூவில் நிற்கக் கடவது..


    இதைப்பற்றி ஷீ-நிசி சொல்லியிருக்கிறார்.. நிமிடத்தில் எப்படி இப்படி ஒரு கவிதை வந்தது? ம்ம்ம்... குறையேதுமில்லை கண்ணா...

    அறுக்க வேண்டுமாம்
    எழுதச் சொன்னார்கள்
    கவிதை
    என்னை


    ஹி ஹி. சிரித்தே விட்டேன்.. அறுப்பதற்குத்தானா கவிதை?

    தொலைந்துவிட்டது
    எனத் தேடிய இதயம்
    என் அருகிலே
    என்னை
    இதயமில்லாதவன் என
    திட்டிக்கொண்டே


    சூப்பரப்பு... தொலைந்துப்போய் தேடிக்கொண்டிருந்தால் அந்த இதயம் அருகில்.... ஹ் ஹி இதயமில்லாதவன் என்று திட்டிக் கொண்டு... சான்ஸே இல்லை.. உங்களை அடிக்க ஆள் இல்லை...

    குணப்பட்டுத்து
    உன்பார்வை துளைத்த காயத்தை
    நீயே குணப்படுத்து
    உதடுகளால்
    உன் எச்சில் மருந்திட்டு


    எச்சிலுக்கு எவ்வளவு பவர்!! உண்மையைத்தான் சொல்கிறேன்.. அனுபவிக்காமல்....

    பத்திரமா கண்மணி
    பார்த்துக் கொள் உடம்பை
    பத்திரத்தில் கையொப்பம் இடவேண்டும்
    அது வரை
    பத்திரம்


    ஹி ஹி ரகம்..

    மற்றவர்களுடையதும், செல்வன் கவிதைகள் மற்றவைகளும் பின்னர் விமர்சிக்கப் படும்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    இந்த கவிதையை ஆரம்பித்த பெருமை மட்டுமே என்னைச்சாரும் , அதை சிறப்பாக கொண்டு சொல்லும் உங்களுக்கே முழு பெருமையும் சேரும் ஆரம்பித்து 36 மணித்தியாலத்திற்க்குள் 300பின்னூட்டஙக்ளை அக்டந்து விட்டது 300 கவைதைகளுக்கு மேல் எழுதப்பட்டது, உண்மையாகவே இப்படிப்பட்ட கவிதகளில் தான் ஒரு கவிஞனின் முழு திறனையும் அறிய முடியும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழகான கவி வடிப்பது இலகுவான காரியமன்று, எல்லா கவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் கை வண்ணத்தை காட்டுங்கள் மன்றத்தில்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  11. #23
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    ஒவ்வொரு கவிதைக்கும் பின்னூட்டமிட்ட ஓவியாவின் பணியை என்னவென்று பாராட்டுவது. முதலில் அவர்க்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய............... நன்றி சொல்லியாக வேண்டியது நமது கடமையல்லவா. பிறகு ஆதவனின் கவிதை பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

    உங்கள் பணி சிறப்பாக தொடர எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி ஆதவா, ஓவியா.

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கவிச் சமரில் வெல்ல முடியாத போராளியாக சொல்லெனும் கணைகளுடன் வெற்றி சங்கொலிக்கும் செல்வன் அண்ணாவைச் சமாளிக்கவே முடியுதில்லையே.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 2 of 59 FirstFirst 1 2 3 4 5 6 12 52 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •