தாமரை செல்வன் கவிதைகள் தொடர்ச்சி
நினைக்குமடி ஊர்
ரோஜாக்களைப் பறித்து
மந்திரிகளை வரவேற்க
யானைகளின் கால்களில்
சிதறவிடும் ஊர்..
பூக்கள் நசுங்கின
நாமும் நசுங்கினோம்
யானையும் மணியோசையும்
மந்திரிகளின் அடிபொடிகளும்
முடிந்தவரை காலி செய்ய
ஊர் மட்டும் மயானமாய்
அன்று
நினைக்குமடி ஊர்..
உவமைகளைப் பாருங்கள்... இருந்தாலும் சற்று விளங்கவில்லை எனக்கு. விளக்கினால் நலம்... ஆனால் கவிதை வெகு சூப்பர்... வாழ்த்துக்கள்
வாழ்வதெப்படி
நூல் எழுதியவர்
பணம் சம்பாதித்தார்
வாழ்ந்து விட்டார்
ஹி ஹி... அருமை அருமை... பணம் சம்பாதிக்க என்ன வழியென்று யோசித்து அதை யோசித்ததோடு நில்லாமல் யோசித்ததை புத்தகமாய் போட்டு...... (சே ஒன்னு சொல்ல மிக எளிதான வழி கவிதை என்பது தெரிகிறதா?) சூப்பர் கவிதை..
மரியாதை
கம்பீரமாய் வெளியில்
தலை நிமிர்ந்து சென்றார்
கிணற்றடியில்
அவள் அழ
அந்த கிணற்று நீர்
உப்பானது.
சே!! அண்ணாவிடம் செயிக்க இன்னொருவர் பிறக்கனும்... கிணற்றில் கண்ணீர் பட்டு உப்பாகிறதாம்... என்னே ஒரு கற்பனை..
ஆயுள் தண்டனை அல்ல
ஆயில் தண்டனை..
ஆயுசு முழுதும்
நியாய விலைக் கடையில்
எண்ணை வாங்க
கியூவில் நிற்கக் கடவது..
இதைப்பற்றி ஷீ-நிசி சொல்லியிருக்கிறார்.. நிமிடத்தில் எப்படி இப்படி ஒரு கவிதை வந்தது? ம்ம்ம்... குறையேதுமில்லை கண்ணா...
அறுக்க வேண்டுமாம்
எழுதச் சொன்னார்கள்
கவிதை
என்னை
ஹி ஹி. சிரித்தே விட்டேன்.. அறுப்பதற்குத்தானா கவிதை?
தொலைந்துவிட்டது
எனத் தேடிய இதயம்
என் அருகிலே
என்னை
இதயமில்லாதவன் என
திட்டிக்கொண்டே
சூப்பரப்பு... தொலைந்துப்போய் தேடிக்கொண்டிருந்தால் அந்த இதயம் அருகில்.... ஹ் ஹி இதயமில்லாதவன் என்று திட்டிக் கொண்டு... சான்ஸே இல்லை.. உங்களை அடிக்க ஆள் இல்லை...
குணப்பட்டுத்து
உன்பார்வை துளைத்த காயத்தை
நீயே குணப்படுத்து
உதடுகளால்
உன் எச்சில் மருந்திட்டு
எச்சிலுக்கு எவ்வளவு பவர்!! உண்மையைத்தான் சொல்கிறேன்.. அனுபவிக்காமல்....
பத்திரமா கண்மணி
பார்த்துக் கொள் உடம்பை
பத்திரத்தில் கையொப்பம் இடவேண்டும்
அது வரை
பத்திரம்
ஹி ஹி ரகம்..
மற்றவர்களுடையதும், செல்வன் கவிதைகள் மற்றவைகளும் பின்னர் விமர்சிக்கப் படும்...
Bookmarks