Results 1 to 9 of 9

Thread: என் காவியக் காதலன் கண்ணன் பகுதி 2

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0

    என் காவியக் காதலன் கண்ணன் பகுதி 2

    (கண்ணன் வருகை)

    எழில் பொங்கும் துவாரகாவைத்
    தொட்டுப் பார்க்கிறது
    தூறலின் அணுக்கள்.
    எட்டி நின்று கோகுலத்தின்
    நெஞ்சைத் தடவிப் பார்க்கிறது
    முகிலனின் தூதுவன்.

    அத்துவானம் துப்பிய
    வர்ணக்கலவையில்
    காணாமல் போயிருந்த
    காதல் வில்
    நீ எழுப்பிய அம்பில்
    நாணம் கக்கியது.


    கொய்து போட்ட மலர்களின்
    அரும்புகளைக் கையில் ஏந்தி
    என் நெஞ்சறிந்த நீ
    வரும் நேரம் காத்து நிற்கிறேன்.
    நிகரற்ற உன் சந்தன மார்பில்
    சிரம் தாழ்ந்து உறங்கத்தான்.


    எழுதப்பட்ட கவிகளை
    நிரல்படுத்தி, அந்தரத்தில்
    தொங்கும் ஆதவனின் சுடரெடுத்து
    பேழையில் பொறித்து
    நீ வரும் நேரத்தில்
    உனக்குக் கொடுக்கவேண்டுமே!.


    செவியறைகளில்
    தாளங்கள் கேட்கின்றன
    அதோ!
    களவாடன் வருகிறான்.
    வா கண்ணா.!!
    கோபியர் யாவரும் நானே
    ஆகையால் என் நெஞ்சே
    உன் துயிலிடம்.
    நீ வந்தாய் இந்த குயிலிடம்..
    நாணம் மீறிப் போய்
    முத்தம் கேட்கிறேன்.
    பிராணம் இடம்பெறாது கொடுத்துவிடு.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    இந்த பகுதியும் அருமை
    நான் ரசித்த வரிகள்
    கொய்து போட்ட மலர்களின்
    அரும்புகளைக் கையில் ஏந்தி
    என் நெஞ்சறிந்த நீ
    வரும் நேரம் காத்து நிற்கிறேன்.
    நிகரற்ற உன் சந்தன மார்பில்
    சிரம் தாழ்ந்து உறங்கத்தான்.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by likesunrisebaby View Post
    (கண்ணன் வருகை)


    கோபியர் யாவரும் நானே

    நாணம் மீறிப் போய்
    முத்தம் கேட்கிறேன்.
    .
    கண்ணனை நினைத்தால்
    சன்ரைஸ்பேபிக்கு கவிதை பொத்துகிட்டு வருமோ
    இன்னொரு மீராவாக அவதரித்தாயோ
    பேபி கோபியர் கண்ணன் மீது வைத்திருந்தது
    பக்தி காதல், அதில் நானத்துக்கும் இடமில்லையே
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மனோஜ் View Post
    இந்த பகுதியும் அருமை
    நான் ரசித்த வரிகள்

    நன்ற்றி மனோஜ் அண்ணா
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  5. #5
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    கண்ணனை நினைத்தால்
    சன்ரைஸ்பேபிக்கு கவிதை பொத்துகிட்டு வருமோ
    இன்னொரு மீராவாக அவதரித்தாயோ
    பேபி கோபியர் கண்ணன் மீது வைத்திருந்தது
    பக்தி காதல், அதில் நானத்துக்கும் இடமில்லையே
    நன்றி லொல்லுவாத்தியார் அவர்களே! கண்ணன் என்றாலே கவிதை நிறைய எழுதுவேன்.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    கோபியர் யாவரும் நானே
    ஆகையால் என் நெஞ்சே
    உன் துயிலிடம்.
    நீ வந்தாய் இந்த குயிலிடம்..
    வாலியின்... சொல்விளையாட்டு போல் உள்ளது பிச்சி... அருமை...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஷீநிசி அண்ண. கவிதை பற்றி ஒன்னுமே சொல்லலியே?
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    கண்ணனுடன் காதலாகி கரைந்துவிட்ட பிச்சிக்கு இந்த ரோஜாவின் வந்தனம். பிச்சியின் வாசனையை நுகர்ந்தேன். கவிதை அருமை என்று ஒரிரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்ள மனம் இல்லை. பிறகு சமயம் கிடைக்கும் போது விவரித்து தனிமடலில் அனுப்புகிறேன்.
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  9. #9
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ரோஜாவின்ராஜா அவர்களே
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •