Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: ரயில் பயணங்களில் ( உண்மை சம்பவம் )

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0

    Smile ரயில் பயணங்களில் ( உண்மை சம்பவம் )

    ரயில் பயணங்களில் ( உண்மை சம்பவம் )

    இரு வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நானும் எனது நண்பரும் சென்னை செல்ல இரயிலில் டிக்கட் பதிவு செய்தோம். எனக்கு நடக்க இயலாது ஆகையால் கன்செஸன். மூன்றாம் வகுப்பு ஏசி. அதென்னவோ தொயவில்லை. கன்செஸன் என்றால் சன்னலோரம் தான் இடம் கிடைக்கும்.விபரம் தொயாமல் போர்வை, காற்று தலைகாணி எல்லாம் எடுத்து சென்றேன். ஆனால் அங்கு இதெல்லாம் கொடுத்தனர். முதன் முதலில் ஏசியில் பயணம் அல்லவா ? தொய வில்லை. சா இரவு உணவு அருந்தலாம் என்று பார்த்தால், கைகழுவ இயலவில்லை. கழிவரை சென்று கழுவி வந்தால், மீண்டும் கையை கீழே வைக்க வேண்டும். அதனால் இயலவில்லை. வாழைப்பழமும் பாலும் சாப்பிட்டு விட்டு படுத்தாகி விட்டது. ஒரு மணி. இயற்கை உபாதை அழைக்க, மெதுவாக தவழ்ந்து கழிவறை சென்றேன். அங்கே....எப்படி கையை கீழே வைப்பது..? சுத்தப்படுத்தாமல் உண்மையான நரகத்தினை அங்கு கண்டேன். வருத்ததுடன் படுக்கைக்கு திரும்பி வந்து, இயற்கை உபாதையை கழிக்க இயலாமல் தூங்கவும் இயலாமல் நான் பட்ட பாடு எனக்கு தான் தொயும். விடிகாலை... சென்னை வந்தாகி விட்டது. இரயில் நின்ற பிளாட்பாரத்திலிருந்து வெளியில் செல்ல வேண்டும். எப்படி.. தவழ முடியுமா ? இயலாது. போர்டரை அழைத்து ஒரு நாற்காலி கிடைக்குமா என்றார் என் நண்பர். அது எங்கோ இருக்கும். எனக்கு தொயாது என்றார். இந்த களேபரத்திலும் குளிர் காற்றை அனுபவித்து கொண்டு இருந்தேன். என்ன செய்வது ? என்னை போல இருப்போருக்கு கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டியதுதான். சுற்றுலாவது ஒன்னாவது ? எங்கே செல்ல இயலும். ஒரு வழியாக என்ன கேட்கிறீங்க என்றார் நண்பர். அம்பது ரூவாய் கேட்க , எங்கோ இருந்த நாற்காலி சடக்கென்று என் முன்னே வந்தது. நமக்கு அதில் உட்கார்ந்து அனுபவம் இல்லையாதலால், போர்டான் திட்டினை வாங்கி கொண்டு எழும்பூர் இரயில் நிலையத்தின் வாசலில் இறக்கப்பட்டேன். அடுத்து ஆட்டோ. பேரம். நூறு ரூபாய்க்கு படிந்தார். இரவு நேரம். மீண்டும் இரயில் நிலையம். எனது நண்பர் நாற்காலியினை எங்காவது பிடித்து வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார். பத்து மணிக்கும் இரயில். ஏழு மணி அளவில் எழும்பூர் நிலயத்தின் படியில் அமர்ந்தேன். மணி ஒன்பது இருபது. ஒரு ஓட்டை நாற்காலியினை வேர்க்க விரு விருக்க கொண்டு வந்தார் நண்பர்.

    ஸ்டேசன் மாஸ்டாடம் நாற்காலி வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். தருகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாற்காலியினை கொடுத்து இருக்கிறார். அதற்க்குள் போர்டர் வந்து எதுக்கு நாற்காலியினை எடுக்கின்றீர்கள் என்று எடுக்க விடாமல் தடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் டெபுட்டி ஸ்டேசன் மாஸ்டர் உயர்திரு பாஸ்கர் நண்பாடம் இந்த நாற்காலி வி ஐ பிக்கு மட்டும் தான் தருவோம் என்று சொல்லி எடுத்த நாற்காலியினை பிடுங்கி உள்ளே வைத்து விட்டார். அந்த சமயத்தில் வந்த ஒரு போர்டர் அந்த நாற்காலியினை எடுத்து சென்று விட்டாராம். அதற்கு பாஸ்கர் சார் ஒன்றும் சொல்ல வில்லையாம். நண்பருக்கு என்ன செய்வது என்று தடுமாற்றம். அப்போது அங்கு வந்த விஜயகுமார் என்ற ஸ்டேசன் சிக்னல் இன்சார்ஜ் ஒரு ஓட்டை நாற்காலியினை தந்து இருக்கிறார். கால் ஒடிந்த நாற்காலி கால் இல்லாதவருக்கு. என்னை போலவே அந்த நாற்காலியும் ஊனமுற்றது. அதில் என்னை அமர வைத்து, நண்பர் இரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு தள்ளி சென்றார். நண்பர் வியர்வையில் குளித்து இருந்தார். நாற்காலியின் சக்கரம் சுழலாமல் சண்டித்தனம் செய்தது. தள்ளி வரும் போது பாதையில் விலகாமல் இருந்த ஒருவான் மீது இலேசாக இடித்து விட அவர் சண்டைக்கு வந்து விட்டார். அவாடம் மன்னிப்பு கேட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தார் எனது நண்பர் இரு ஊனமுற்றவர்களுடன்.

    வி ஐ பி க்கு மட்டும் தான் பணம் கட்டுகிறாரா ? வி ஐ பிக்கு மட்டும் தான் நல்ல நாற்காலியா ? எனக்கும் அவருக்கும் ஒரே ரத்தம் தானே. எங்களுக்கு உதவதானே அரசாங்க பணியாளர்கள் இருக்கின்றார்கள். அரசியல் சட்டத்தில் வி ஐ பிக்கு ஒரு நடை முறையும் எனக்கும் ஒரு நடை முறையும் பின் பற்ற வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கின்றதா ? ( எனக்கு தொயவில்லை,அப்படி ஏதேனும் இருக்கின்றதா ?). இப்படி என்னனவோ கேள்விகள் மனதினுள். என்ன செய்ய இயலும் என்னால். எளியோரை வாதிப்பது வலியோருக்கு வாடிக்கையா ? கால்கள் ஊனமாக பிறந்தது குற்றமா ? அப்படி குற்றமெனில் அரசாங்கமே எங்களை கருணை கொலை செய்து விடலாம் அல்லவா ? உயிரோடு வைத்து வேதனை செய்து கொல்லாமல் கொல்லுவதுதான் அரசாங்கத்துக்கு வாடிக்கையா ? அரசு அதிகாகளே, என்னை போன்றோரை பார்த்தால் கொஞ்சம் விஷம் கொடுத்து விடுங்களேன். புண்ணியமாக போகும். கலெகடர் அலுவலகத்தில் கணிபொறி பணி காலி இடம் இருப்பதாக கேள்விப்பட்டு மனு கொடுக்க சென்று இருந்த போது, அங்கிருந்த அதிகாகள் அப்படி ஏதும் இல்லை என மறுத்து விட்டனர். ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்க வருமாறு அறிவிப்பு செய்தனர். நண்பருடன் சென்ற போது, போட்டோ எடுக்க பணம், அப்புறம் ஆறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அரசு மருத்துவ மனையில் கைஎழுத்து வாங்கினால் தான் அட்டை செல்லும் என் கின்றனர். அந்த மருத்துவர் அந்த சமயத்தில் அங்கு இருந்தால், வீண் அழைச்சல் இல்லை. இப்படி எங்கு சென்றாலும் கஸ்டப்படுத்தபடும் , உதாசீனபடுத்த படும் ஊனமுற்றவர் என்ன பாவம் செய்தார்கள்.


    அதனால் தான் சொல்லுகிறேன் எனது அருமை நண்பர்களே....

    பாவத்தின் சுமைகளை சுமந்து கொண்டு, அரசால் புறக்கணிக்கப்பட்ட, எதையும் அனுபவித்து பார்க்க முடியாத, வேதனையிலும் வெந்து கொண்டு, என்று சாவு வரும் என்று காத்துகொண்டு இருக்கும் உள்ளங்கள் தவழ்ந்து வரும் போது, பாதையில் குறுக்கிடாமல் சற்று விலகி வழி விட்டால், எனது இந்த கட்டுரைக்கு ஒரு அர்த்தம் உண்டு.. என்ன செய்வீர்களா ???

    அன்புடன்,
    தங்கவேல்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நண்பரே! உங்கள் வேதனை மனம் கணக்க வைககிறது.. காலிருப்பவனாலேயே ஈடுகொடுக்கமுடியாது அரசாங்க ஊழியர்களின் அலைக்கழிப்பை.. இதில் உங்களைப்போன்றவர்கள் என்னதான் செய்யமுடியும்.. இலஞ்சம் வாங்கி ஊழியம் செய்யும் உத்தமர்கள், குறைந்தபட்சம் உங்கள் போன்றவர்களுக்காவது தன் கடமையை செய்து செய்யும் பாவத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ளக்கூடாதா...

    நண்பரே! ஏன் தெரியுமா இறைவன் சிலருக்கு ஊனத்தை படைத்திருக்கிறார்? காரணம் தன்னைப்போலவே எதையும் தாங்கும் மனவலிமையும், திட மனதும் அந்த சிலருக்கு மட்டுமே இருப்பதனால்தான்..

    இனி எங்காவது ஊனமுற்றவர்களை சந்திக்க நேர்ந்தால் மனம் இன்னும் கொஞ்சம் கனக்கும்..

    வருத்தம் வேண்டாம் தோழரே, காலம் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது..

    உங்களுக்காக, நண்பர் மனோஜ் அவர்கள் ஏற்படுத்தின ஒரு ஊக்கப்படுத்தும் திரியின் சுட்டி கீழே உள்ளது.

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8054
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    பல மனிதர்களின் இப்போக்கு மன வருத்தத்தையே அளிக்கிறது. தமிழ் மன்ற உறுப்பினர்கள் தம்மை சுற்றி இருக்கும் இயலாதவர்களுக்கு உதவிகள் அளித்து கனிவுடன் நடத்துவோம். எமது கண்ணெதிரில் இவ்வகை அரக்கத்தனங்கள் நடந்தால் தட்டிக் கேட்போம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. நடைமுறையில் இன்று இலஞ்சம் மிகவும் பெருகிவிட்டதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அது போகட்டும் என்றால் மனிதனுக்கு மட்டுமே இருக்கிறதென்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளும் மனிதாபிமானமும் எங்கோ அதல பாதாளத்தில் விழுந்து இறந்து கொண்டிருக்கிறது. மனிதன் மனிதத்தை இழந்துக் கொண்டிருக்கிறான்.

    ஆயினும் செல்வர் சொன்னது போல் நம் மன்றத்தினர் அனைவரும் மற்றவருக்கு முடிந்தவரையில் உதவுவோம் என உறுதிமொழி எடுப்போம்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    மனிதனே மனிதனை மதிப்பதில்லை.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    இலஞ்சத்திற்கு கண்கள் இல்லை..இதயம் இல்லை..ஈரம் இல்லை..

    வருந்தவேண்டாம் நண்பரே... ஈனப்பிறவிகளை புறந்தள்ளிவிட்டு உங்கள் நடையினைத் தொடருங்கள்...
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  7. #7
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2007
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் அனுபவங்களை படித்தபின் மனசில் பாரம்..உடல் ஊனமுற்றவர்களுக்கு அடிப்படை மனிதாபிமானம் காட்டாத கல் நெஞ்சர்களும் இருக்கிறார்களே..இவர்கள் எல்லாம் எப்போதுதான் மாறுவார்களோ..
    ஆதவனுக்கு கீழே அனைத்தும் சாத்தியமே

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தங்களின் செய்தி மிகவும் மனதை பாதித்தது.

    இந்தியாவில் ஏன் இந்த கொடுமை.....

    நான் சென்ற பல வெளிநாடுகளில் முதல் முன்னுரிமை... உடல் ஊனமுற்றவர்களுக்கு தான்.

    நாற்காலி கொடுக்காமல் அலைய வைத்த ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு என்று தான் நல்ல புத்தி வருமோ.

    லல்லூ பிரசாத், இணை மந்திரிகளுக்கு கடிதம் அனுப்பலாம். குப்பைக்கு அனுப்பாமல் இருக்கனும்..

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    உண்மையில் நண்பரே இப்படி பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்றும் என்மனம் என்னை தட்டி எழுப்பி கொண்டுருக்ம் எனது முக்கிய வாழ்வின் நோக்கம் ஆனாதைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவுவதே
    விரைவில் அதன் வழி பிறக்கும் என்று இறைவனில் என்னுகிறோன்
    என்னால் முடிந்ததை செய்ய....
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கொள்ளை அடிக்கவே தோண்றியது அரசு
    அதில் ஊழியம் செய்யும் நபர் மட்டும் என்ன
    உத்தமனாகவா இருக்க முடியும்.

    இவர்களை திருத்த முடியாது
    முடிந்தால் துஷ்ட்டனை கண்டால்
    தூர விலகு என்று வாழ வேண்டும்

    அனைவரும் ஒரு சபதம் எடுப்போம்
    பாவ கறையும் சாபமும் நிறைந்த அரசு வேலை தேட கூடாது
    அரசு வேலையிலிருக்கும் குடும்பத்தில் பெண் எடுப்பது கொடுப்பது வேண்டாம்
    அந்த பாவம் நம் சந்ததியரை சேர வேண்டாம்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    அனைவரும் ஒரு சபதம் எடுப்போம்
    பாவ கறையும் சாபமும் நிறைந்த அரசு வேலை தேட கூடாது
    அரசு வேலையிலிருக்கும் குடும்பத்தில் பெண் எடுப்பது கொடுப்பது வேண்டாம்
    அந்த பாவம் நம் சந்ததியரை சேர வேண்டாம்
    ஆஹா இது ஒரு புதுக்கொள்கையாக இருக்கே....
    அரசு ஊழியர் அனைவரும் கெட்டவர்கள் இல்லையே..

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    அரசு ஊழியர் அனைவரும் கெட்டவர்கள் இல்லையே..
    அரசு என்பது பொதுமக்களின்
    உழைப்பை வரி என்ற பெயரில் அளவுக்கு மீறி
    சுரண்டி அதை கனக்கு எழுதியே
    ஆடம்பரமாக கொண்டாடும் ஒரு கொள்ளை கூட்டம்
    எந்த வரியும் இன்முகமாக கொடுபதில்லை
    வயிரு எரிந்து தரபட்ட வரியில் தான்
    அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள்
    அந்த ஒரு பாவமே போதும் நான் எடுத்த சபதத்துக்கு
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •