Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: நான் கவிஞனல்ல..

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0

    நான் கவிஞனல்ல..

    மன்றத்தின் கவிதைக்காதலர்களே...

    எனக்கு தெரிந்தவரை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை
    யதார்த்தத்தை செப்பனிடும் ஓர் ஓவியனாகவே என்னை எண்ணிக்கொள்கிறேன்...

    ஏனெனில் கவிதை என்ற உலகில் நான் கற்பனைக்கு எட்டாத பொருளை தேடவில்லை மாறாக என் இதயம் உணர்த்தும் வெளிப்பாடுகளை கவிதை என்ற வாசலில் கோலமிட்டு வரவேற்கிறேன்....

    நான் கவிதைகளுக்காக காத்திருப்பதில்லை பல அவற்றை பலவந்தமாக வெளிக்கொணர முயல்வதுமில்லை...

    என்னுடைய மூடிவைக்கப்பட்ட ஒவ்வொரு மெளனமும் வெடித்து கவிதைகள் பிரசவிக்கப்படுகின்றன....

    நான் கவிதை எப்படி எழுத ஆரம்பித்தேன்..
    ஒருமுறை என்னுடைய உள்ளத்தின் மொழியை அப்படியே தாள்களில் பதிந்தபோது புலப்பட்டது என் முதல் கவிதை...

    மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளும் உள்ளத்தில் அடைபடும்போது வார்த்தைகளுக்கு பதில் கவிதைகள் உதிக்கும் அதை கவனமாக வெளிக்கொணர்பவனை கவிஞன் என்கிறீர்கள்...

    ஆனால் நான் உணர்கிறேன் கவிதை என்பது எம்மிலிருந்து மாறுபட்டது கிடையாது...
    எம்முடைய நிஜம் எம்முடைய யதார்த்தம் அதை செப்பனிடுங்கள் வார்த்தைகள் மிளிரும்...

    "தன்னுடைய சேலைத்தலைப்பை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளும் பெண் போல தன்னுடைய வார்த்தைகளை அவ்வப்போது எச்சரிக்கையுடன் சரிபார்த்துக்கொள்கிறான் கவிஞன்"


    என்னுடைய இணைப்புகள் இதோ உங்களுக்காக..
    மதுரகன் கவிதைகள்
    Last edited by மதுரகன்; 17-05-2007 at 04:59 PM.
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அருமை தம்பி, அன்பு மதுரகனுக்கு என் வாழ்த்துக்கள்.

    உங்கள் கவிதையை ரசிக்காத ஆளே மன்றத்தில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

    அந்த அளவிற்க்கு ஒவ்வொரு கவிதையும் தித்திப்பாக இருக்கும்.

    பல விசயங்களைத்தொட்டு வடிக்கும் உன் கவிதைகள் பலசுவையில் இருக்கும்.

    நீங்கள் எழுதிய இலங்கைத்தமிழனின் சுதந்திரதினம் கவிதை என்றும் என் நினைவில் பசுமை.

    நீர் வாழியே, உன் கவித்திறன் வாழியே.

    நன்கு படித்து சிறந்த மருத்துவராக வர எனது ஆசிகள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    நன்றி ஓவியா அக்கா...
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அழகான, அடக்கமான அறிமுகம். அனுபவங்களையே கவிதைகளாக்குபவர்கள்தான் உலகில் அதிகம். ஆனால் அதிலும் கவரும் தன்மை இருத்தல் அவசியம். அது உங்களிடம் இருக்கிறது. உங்கள் ஒரு கவித்துளியை அறிமுகப்பகுதியில் ருசித்தேன். மீதத்தையும் தரிசிக்க, சுட்டிகளை இணைத்திடுங்கள்.

    என்றும் சிறக்க வாழ்த்துக்கள்...
    Last edited by அக்னி; 06-05-2007 at 10:41 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    வாழ்த்துக்கள் மது... நல்லதொரு அறிமுகம்...தொடர்ந்து பவனி வாருங்கள்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மதுரகன் View Post
    மன்றத்தின் கவிதைக்காதலர்களே...

    எனக்கு தெரிந்தவரை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை
    யதார்த்தத்தை செப்பனிடும் ஓர் ஓவியனாகவே என்னை எண்ணிக்கொள்கிறேன்...
    நண்பரே கவிஞனல்ல என்று அவைக்கு அடங்கியுள்ள நீர், இந்த ஓவியனுக்கு ஒரு கவிஞனாகவே அறிமுகமானீர் ((நட்புக் கவிதைகளில் என்று நினைக்கின்றேன்). உமது வரிகளை இரசித்தேன், தொடர்ந்து இரசிக்க ஆவலாயுள்ளேன்.

    உங்கள் வாழ்வில் எல்லா செல்வங்களும் பெருக என் வாழ்த்துக்கள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மதுரகா உங்கள் கவியுலகப் பயணத்திற்கு என் காணிக்கை 100 காசுக்கள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    மதுரகான் அவர்களுக்கு என்வாழ்த்துக்கள்
    மென்மேலும் கவிதைகள் பிறக்க
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #9
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    அனைவருக்கும் நன்றி...
    என்னுடைய பெரும்பாலான கவிதைகள் அனைத்துக்கும் இணைப்பு விரைவில் மேலே தரப்படவுள்ளது..
    Last edited by மதுரகன்; 07-05-2007 at 06:00 PM.
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    பெயரிலும் கவிதையை ஒளித்து வைத்திருக்கும் மதுரகன்..

    வாழ்த்துக்கள் கவிஞரே..
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  11. #11
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    நன்றி பூ இத்தனை நாளில் என் பெயருக்குள் கவிதை ஒளிந்திருப்பதை நானே அறிந்து கொள்ளவில்லை.

    "தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் குழந்தையும்
    அம்மா சொல்லித்தான் தெரிந்துகொள்கிறது.
    கண்ணாடியில் தெரிவது தன்முகம் என்பதை..."
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    வாழ்த்துகள் மதுரகன். கவிதைகள் தொடரட்டும்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •