மன்றத்தின் கவிதைக்காதலர்களே...
எனக்கு தெரிந்தவரை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை
யதார்த்தத்தை செப்பனிடும் ஓர் ஓவியனாகவே என்னை எண்ணிக்கொள்கிறேன்...
ஏனெனில் கவிதை என்ற உலகில் நான் கற்பனைக்கு எட்டாத பொருளை தேடவில்லை மாறாக என் இதயம் உணர்த்தும் வெளிப்பாடுகளை கவிதை என்ற வாசலில் கோலமிட்டு வரவேற்கிறேன்....
நான் கவிதைகளுக்காக காத்திருப்பதில்லை பல அவற்றை பலவந்தமாக வெளிக்கொணர முயல்வதுமில்லை...
என்னுடைய மூடிவைக்கப்பட்ட ஒவ்வொரு மெளனமும் வெடித்து கவிதைகள் பிரசவிக்கப்படுகின்றன....
நான் கவிதை எப்படி எழுத ஆரம்பித்தேன்..
ஒருமுறை என்னுடைய உள்ளத்தின் மொழியை அப்படியே தாள்களில் பதிந்தபோது புலப்பட்டது என் முதல் கவிதை...
மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளும் உள்ளத்தில் அடைபடும்போது வார்த்தைகளுக்கு பதில் கவிதைகள் உதிக்கும் அதை கவனமாக வெளிக்கொணர்பவனை கவிஞன் என்கிறீர்கள்...
ஆனால் நான் உணர்கிறேன் கவிதை என்பது எம்மிலிருந்து மாறுபட்டது கிடையாது...
எம்முடைய நிஜம் எம்முடைய யதார்த்தம் அதை செப்பனிடுங்கள் வார்த்தைகள் மிளிரும்...
"தன்னுடைய சேலைத்தலைப்பை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளும் பெண் போல தன்னுடைய வார்த்தைகளை அவ்வப்போது எச்சரிக்கையுடன் சரிபார்த்துக்கொள்கிறான் கவிஞன்"
என்னுடைய இணைப்புகள் இதோ உங்களுக்காக..
மதுரகன் கவிதைகள்
Bookmarks