காதலை
காதல்தந்த சுகத்தை
உன்னைப் பார்த்தால்
ஊஞ்சலாடும் இதயத்தை
நீ பார்த்தால்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
நரம்புகளில் ரயில் ஓடுவதை
உன்னிடம் பேசினால்
உலகம் மறந்துபோவதை
நீ பேசினால்
குருதி குத்தாட்டம்போடுவதை
உன்னை நினைத்தால்
உடலெங்கும்
நாடிநரம்புகள்
நடனமாடுவதை
உனக்காக காத்திருந்தால்
உண்டாகும் சுகத்தை
இயற்கையை நான்
இயற்கையாக ரசிப்பதை
கவிதை எனக்குள்
காற்று போல் வந்ததை
இவையனைத்தும்
உணர வைத்தவள்
பிரிவு துயரைத்தையும்
பிரிந்த வலியையும்
இன்னும் பிற
இன்னல்களையும்
உணர வைத்தாள்
ஒருவேளை
காதல் முழுமையடைய வேண்டும் என
நினைத்தாளோ? என்னவோ?.
மன்ற நண்பர்களே விமர்சனம் தாருங்கள்.
அன்புடன்,
ரவி
Bookmarks