Results 1 to 7 of 7

Thread: உணர வைத்தாள்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Apr 2007
    Posts
    99
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0

    உணர வைத்தாள்

    காதலை
    காதல்தந்த சுகத்தை

    உன்னைப் பார்த்தால்
    ஊஞ்சலாடும் இதயத்தை
    நீ பார்த்தால்
    உச்சி முதல் உள்ளங்கால் வரை
    நரம்புகளில் ரயில் ஓடுவதை

    உன்னிடம் பேசினால்
    உலகம் மறந்துபோவதை
    நீ பேசினால்
    குருதி குத்தாட்டம்போடுவதை

    உன்னை நினைத்தால்
    உடலெங்கும்
    நாடிநரம்புகள்
    நடனமாடுவதை

    உனக்காக காத்திருந்தால்
    உண்டாகும் சுகத்தை
    இயற்கையை நான்
    இயற்கையாக ரசிப்பதை

    கவிதை எனக்குள்
    காற்று போல் வந்ததை

    இவையனைத்தும்
    உணர வைத்தவள்

    பிரிவு துயரைத்தையும்
    பிரிந்த வலியையும்
    இன்னும் பிற
    இன்னல்களையும்
    உணர வைத்தாள்

    ஒருவேளை
    காதல் முழுமையடைய வேண்டும் என
    நினைத்தாளோ? என்னவோ?.

    மன்ற நண்பர்களே விமர்சனம் தாருங்கள்.

    அன்புடன்,
    ரவி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அன்பு கர்ணா (பேரே அமைஞ்சுபோச்சு..)

    கவிதை அருமை.

    காதல் - அது ஒரு ஆன்மீகம். இருப்பதும் தெரிவதில்லை. உணர்வதும் புரிவதில்லை.. காதலுக்கு தனி பாசைகள் தனி செய்கைகள் தனி உணர்ச்சிகள். தனி கவிதைகள்... காதலின் பாதையே தனி.. அதனால்தான் ஆதிகாலம் முதல் காதல் அழியாமல் இருக்கிறது. இறை பக்திக்கு ஈடானது உண்மை காதல்.

    உணர்வுகளை ஏற்படவைப்பவள் காதலி. காதலின் அருமை காதலித்தவர்களுக்குத் தெரியும். உணர்வுகளின் தொகுப்பு காதல்.

    உமது கவிதை அதைத்தான் சொல்லுகிறது. உச்சிமுதல் கால்வரை நித்தம் நீக்கமற நிறைந்திருப்பாள் காதலி. உணர்ச்சிகளை கிளப்புவாள்.. கண்களை சொடுக்குவாள். காதுகளில் பாடுவாள்.

    ஊஞ்சலாடும் இதயம். நரம்புகளில் ரயில் ஓடும்.... மிகச் சரியாக அழகாக இருக்கிறது வார்த்தைகள்.. சிலர் கவிதைகளில்தான் இந்த வார்த்தைகளை கவனித்திருக்கிறேன்... பாராட்டுக்கள் அதற்கு...

    குருதி குத்தாட்டம் போடும் - மேற்சொன்னவைகள் போலவே.. வித்தியாச சிந்தனை.. சபாஷ் போடவைக்கும் வரிகள்.

    நரம்புகளின் நடனம் - ஏற்கனவே ரயில் ஓட்டியாயிற்று அதனால் இதனை என்னால் ரசிக்க முடியவில்லை என்றாலும் வரிகள் அருமையாக இருக்கிறது.

    காற்றாக கவிதை, மிகவும் சரி... அட போட வைக்க்கும் வரிகள்...

    முடிவும் பிரமாதம்.. தேர்ந்த கவிதை. காதலில் அழுத்தமாய்... சொன்னவிதமும் புதுமை வார்த்தைகளும் டாப்... மேலும் எழுத வேண்டுகிறேன்...

    வார்த்தை பிரயோகம் - 5
    கனக்கச்சித வரிகள் - 5
    பிழையின்மை - 5
    அழகிய கரு - 7
    ஒட்டுமொத்த அழகு - 5 ஆக 27 பணம் உமக்கு...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Apr 2007
    Posts
    99
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    ஆதவா,
    உங்களது விரிவான விமர்சனத்திற்கும்,
    காதலின் விளக்கத்திற்கும்
    முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நரம்புகளின் நடனம்-இதை எழுதும் போதே மனதில் தோன்றியது
    நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நன்றி

    Quote Originally Posted by ஆதவா View Post
    உணர்வுகளை ஏற்படவைப்பவள் காதலி. காதலின் அருமை காதலித்தவர்களுக்குத் தெரியும். உணர்வுகளின் தொகுப்பு காதல்.
    உண்மைதான் ஆதவா

    அன்புடன்,
    ரவி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உள்ளத்து வலி
    எப்படியெல்லாம் உடலை வருத்துகிறது.

    அருமை ரவி!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    கவிதை அழகு... ஆதவனின் விமர்சனம் அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்.. விலைமதிக்க முடியாத சொத்தாகிய ஆதவன் கரம்பட்டபின் கவிதைக்கு வேறென்ன வேண்டும் இங்கே..

    வாழ்த்துகிறேன்...
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இரு பெருந்தலைகள் கவிதையை அருமை என்று விட்டார்கள்.

    அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறந்த அங்கிகாரம்.

    கலக்குங்கள் நண்பரே!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Apr 2007
    Posts
    99
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி பூ

    நன்றி ஓவியன்

    அன்புடன்,
    ரவிக்குமார்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •