அன்னக்கி காலைல்ல 9.00 மணி.. நல்லா தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு போன்... அட இந்நேரத்தில
யாரப்பா தூக்கத்த கெடுக்கறதுன்னு போனை எடுத்தேன்.. பார்த்தால் வெளிநாட்டு அழைப்பு... எல்லா
எண்களையும் போட்டு போன் திரையில் இடம் பத்தாம No Space என்று அந்த அழைப்புக்குண்டான எண்
இருந்தது. எனக்கு பயம் வேற.. முன்னபின்ன தெரியாத நம்பர அட்டெண்டு பண்ணி நம்ம போனு கெட்டு
போச்சுன்னா... சரி சரி.. அப்படி என்ன பெரிய போனா வெச்சுருக்கோம்... எடுத்து ஹலோ என்றேன்.
" நான் தான் மது. எப்படி இருக்கே ஆதவா?"
"மதுரகனா? இல்லை நம்ம மதியா? (ராஜேஸ்குமார்) நீங்க யார்னு தெரியலீங்க.. ஆனா ஒன்னு மட்டும் தெளிவு.
தமிழ்மன்றத்தில இருந்துதான் கூப்பிடறீங்க"
" அடப்பாவி ஆதவா! உலகக்கிண்ண பரிசுப்போட்டி நடத்தினேனே ஞாபகம் இல்லையா?"
" அட ஆமாம்... நல்லா இருக்கீங்களா? என்னோட நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்? அது சரி நான் என்ன
சனாதிபதியா?"
" அதெல்லாம் இருக்கட்டுமப்பா.. உன் வீட்டு அட்ரஸ் சொல்லு. உனக்கொரு கொரியர் அனுப்பனும்.."
" என்ன அனுப்பப் போறீங்க? ஆந்த்ராக்ஸா? " சிரித்துக் கொண்டே கேட்டேன்..
" இல்லைப்பா. இது சஸ்பென்ஸ். வீட்டு அட்ரஸ் சொல்லு.. அப்பறம் உனக்குத் தெரியும்.."
டொக்.
எனக்கு பக் பக் னு இருந்தது... பாரின் காலெல்லாம் வருது. அட்ரஸ் கேக்கறாங்க. பார்சல்னு வேற
சொல்றாங்க... அய்யய்யோ.. சரி மது நம்மாளு. பிரச்சனை இல்லை. அப்படீனுட்டு அன்றாட வேலைல்ல
கவனம் செலுத்தினேன்..
சொன்ன மாதிரியே ஒரு பார்சல் அனுப்பிட்டாருங்க பாருங்க.. அடடா.. ஒரே குஷி. ஏதோ அனுப்பி
இருக்காரு.. பணமா இருக்குமோ? சேசே பணத்த பார்சலா அனுப்புவாங்களா... சுமாரா 200 கிராம் தேறும்.
வாங்கி பிரிச்சா அதுக்குள்ள ஒரு லெட்டர் கிடந்தது,.
அதை அப்படியே அடிபிறழாம இங்க எழுதறேன் படிச்சுக்கோங்க
" அன்பு ஆதவனுக்கு,
நலம் நலமறிய ஆவல். சமீபத்தில உலக் கிண்ண பரிசுப்போட்டி நடத்தினன். ஞாபகம் இருக்கல்ல.. அதில் நீர்
இரண்டாவது இடம். வாழ்த்துக்கள் ஆதவன். சொன்ன மாதிரியே இரண்டாமிடத்து பரிசான " லண்டனில்
ஒருநாள் - ஓவியா சுற்றிக் காண்பிப்பார் " என்ற பரிசு உங்களுக்கு வழங்கப்படுகிறது. விசா டிக்கெட் இருக்கு.
பாஸ்போர்ட் வெச்சு இருக்கீங்கல்ல.. உடனே கிளம்பி வாங்க.. லண்டனில் ஓவியாவின் அட்டகாசத்தை
சமாளிக்கவும். பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
அன்பு
மது."
அப்படியே மயக்கம் வந்துருச்சு.. லண்டனுக்கு இலவச டிக்கெட்டா...
உடனடியா ஓடிப்போய் குமரன் சில்க்ஸ்ல ரெண்டு பேண்ட் ரெண்ட் சர்ட் எடுத்துக்கிட்டேன்.. எதுக்கும்
தேவைப்படுமேன்னு கர்சீப் ஒன்னு வாங்கி வெச்சு கிட்டேன்.. வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு
சென்னையிலிருந்து விமானம்.. புதன் கிழமையே சென்னைக்கு போய்ட்டேன்.. ஆனா இந்த விடயம்
சென்னைவாழ் மன்றத்தினருக்குத் தெரியாது. சரியா அஞ்சு மணிக்கு மீனம்பாக்கம் போய் சேர்ந்து விமான
நிலையத்தில முதன்முறையா கால் வெச்சேன்... யப்பா.. என்னாமாதிரி இருக்கு... நமக்கெல்லாம் இந்த
கொடுப்பினை கிட்டுமான்னு ஏங்கிட்டு இருந்த காலம்.. நம்ம மது அண்ணாச்சியால நிறைவேறப் போகுது..
அப்படியே சுத்திப் பாத்துகிட்டே கழுத்து வலிக்க ஒக்காந்தேன்.. அங்க வேலை செய்ற பொண்ணுங்கள
அப்படியே நோட்டம் உட்டுகிட்டே இருக்கையிலே சரியா எட்டு மணிக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம் செக்
பண்ணி ரன்வேக்கு அனுப்பினாங்க.... யப்பா. என்ன பெரிய ஏரோபிளேனு.. அப்படியே நடுங்கிட்டேன் சாமி..
தனியா போறதனாலா கொஞ்சம் கூச்சம் இருந்தது. இருந்தாலும் பிரம்மாண்டம் நம்ம கண்ண மறச்சுட்டுது.
மெதுவா போய் உட்கார்ந்தேன்.. பஞ்சு மாதிரி இருக்கைகள்.. சுத்தமான காற்று. ஏகப்பட்ட வசதிகள். ஒன்றா
ரெண்டா. சொல்றதற்கே இன்னொரு திரி வேணும்... அங்க பணிப்பொண்ணுங்க வந்தாங்க.. நல்லா
பேசனாங்க.. எப்படி எப்படி எது உபயோகப்படுத்தனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.. எல்லாம் ஆங்கிலம் தான்..
ஹி ஹி எனக்கு ஒன்னுமே புரியல.. உதடு அசையறது மட்டும் ஜொல்லீட்டு இருந்தேன்...
தொடரும்..
Bookmarks