மன்ற நண்பர்களே,
எனக்கு கவிதை எழுத ஆசை எழுந்தது.
சில நாட்கள் முயற்சித்தேன், கவிதை வரவில்லை.
விட்டுவிட்டேன்.
இப்பொழுது,
தமிழ் மன்றத்து கவிகளின் கவிதைகளை
தாகத்தோடு பருகியதலாலோ என்னவோ
மீண்டும் எழுத ஆசை
முயற்சித்திருக்கிறேன்.
குறை, நிறைகளை சுட்டிக் காட்டுங்கள்
வெகுநாட்களாய் தொடர்கிறது
____________________________
அன்ன நடையில்
அவசரமாக வருவாள்
அணுக்கள் அனைத்தும்
அதிரும் என்னுள்
கண்கள் பேசும் என்கிறார்கள்
காதல் கொண்டவர்கள்
கண்கள் பேசுவதை காண
காத்திருக்கும் எனது கண்கள்
கடைக்கண் பார்வை பட்டுவிட்டால்
மண்ணின் மைந்தருக்கு மாமலையும் கடுகாம்
கடைக்கண் பார்வையை காண
விழித்திருக்கும் எனது மனது
எது நடக்கும் என
துடிக்கும் எனது இதயம்
தானாக அவள் உணர
தளர்ந்து நடக்கும் எனது கால்கள்
கடந்து செல்வாள்
கவனியாமல்...
கலங்கும் எனது
கண்கள்
கடந்து செல்வாள்
உணராமல்...
கணக்கும் எனது
உள்ளம்
விலகி செல்வாள் பார்வை
விலகாமல்...
இறுகும் எனது
இதயம்
நிற்காமல் செல்வாள்
அவள்...
நின்றது போகும் எனது
கால்கள்.
அன்புடன்
ரவி
குறிப்பு:
ஓவியா நீங்கள் சொன்னது போல் எனது முதல் படைப்பை பதித்துவிட்டேன். விமர்சனம் தாருங்கள்.
Bookmarks