நண்பர்களே இன்று தினமும் குறைந்தது ஐந்து கவிதைகளாவது பதிக்கிறார்கள்.. நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது கவிதைப் பகுதிகள்.. தொடர் கவிதையாக இன்னுமொன்று என் நெஞ்சில் உதித்தது இந்த யோசனை...

தினம் ஒரு கவிதை..

விதிமுறைகள்:

வாரத்திற்கு ஏழு நாட்கள்.. நாம் கவிஞர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். ஒருநாளைக்கு ஒருவர் வீதம் ஏழுநாட்கள் கவிதை இடம்பெறவேண்டும்.. ஒருவருக்கும் மேலேதான் இடம்பெறுவார்கள் எனில் ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று கவிஞர்கள் வீதம் கவிதைகள் இடலாம்... இந்த திரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எனக்கு தனிமடலில் தெரிவியுங்கள்.. அனைவரையும் ஒன்று சேர்த்து இன்ன நாளுக்கு இவர் கவிதை எழுதவேண்டும் என்று சொல்லிவிடுகிறேன்.. அல்லது நாம் இணைந்தே கூட முடிவெடுக்கலாம்..

கவிதை விதிகள்:

உங்கள் இஷ்டம்போல இரு வரிமுதல் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் எழுதலாம்...

விருப்பமுள்ளவர்கள் உடனே இணையுங்கள் அந்தந்த கிழமைகளுக்கு கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து கவிதை எழுத வைப்போம்...

கூடுதல் விதி : (முக்கியமல்ல)

கவிதை எழுதியவருக்கு அனைவரும் தகுந்த பணம் கொடுக்கலாம். எழுதாமல் விட்டால் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்...

ஒருவருக்கு வாரம் ஒரு கவிதை என்ற கணக்கில் வரும்... முடியும்தானே!!!