சிறு பிராய பொழுதினில்
மழைத்துளி கண்டு
ஒதுங்குவேன்.
கிரகண காலத்தைக்
கண்டஞ்சி ஜன்னலின்
உட்புறம் அமர்ந்து ரசிப்பேன்.
வானவில்லின் நிறங்களை
எண்ணி வர்ணக்கலப்பு செய்வேன்.
தூக்கம் வந்தால்
வேப்பமரத்தின் மடியில்
நித்திரை ஆட்கொள்ளுவேன்

xxxxxxxxxxxx

இன்றோ,
முகிலெடுத்து
என் மனதில் ஒளித்து
மழையின் கண்ணீரைக்
கண்டு ரசிக்கிறேன்
சந்திரனை நிறுத்தி
கிரகணத்தைக் கொஞ்சம்
தள்ளிப் போடுகிறேன்
வானவில்லைக் குடைந்து
அதைப் பூவாய் சூட்டிக் கொள்ள
வில்லெடுத்து புறப்படுகிறேன்.

xxxxxxxxxxxxxx

பிராயமாற்றத்தில்
ஏக மாற்றங்கள்.
என் கண்களில் விழுந்த
மழைத்துளி இன்றும்
நினைவிருக்கிறது எனக்கு,.
எளிதில் மறக்கக் கூடியதல்ல
சிறுவயது காதலனை...
இன்று நான் எத்தனையோ
கனவுகளில் கன்னியாக
இருந்தாலும்..


ஆங்கில கருவுக்கு நன்றி : கெல்லி கிளார்க்ஸன்