என்னுடைய அறிமுகத்தை மன்றத்தில் முதலில் வைக்கலாம் என்றே இந்த திரியை துவங்குகிறேன்....
இராசகுமாரன் சொன்னதுபோல "கவிஞர்" என்ற சொல்லை சொல்ல நமது மக்கள் தயங்கவே செய்கிறார்கள்....
நானும் விதிவிலக்கல்ல...
இன்று பத்திரிக்கையில் கவிதை எழுதுபவர்கள் எல்லாம் தன்னி கவிஞர் என்று கூறி கொண்டால் அது அபத்தம்....
ஆதவனின் ஒரு கையெழுத்தில் வாசித்த வரிகள்.. "வரைமுறைகளை வென்றதாக சொன்னார்கள்;
இலக்கணம் இறந்து கொண்டிருக்கிறது" (முழுவதும் சரியில்லை, என்னை திருத்தலாம ஆதவா..!!!)
வார்த்தைகளை அடுக்கி கொண்டு போகும் இன்றைய கவிஞர்களுக்கு மத்தியில் ,
கருவையும் காரியமாக புகுத்தும் நமது மன்ற கவிகள் இங்கு ஒரு அறிமுகம் கொடுக்காதது எனக்கு வருத்தமே....
கவியானவன் , இதைதான் எழுதுவேன், இதுதான் எனக்கு பிடிக்கும் என்ற வரையரம்புக்குள் இருக்க கூடாது என்று விரும்புபவன் நான்... ஆனாலும் என் விருப்பங்களிடம் நானே தோற்று போகிறென்....
ஆதவனின் கையெழுத்தில் படித்த இன்னும் ஒரு வார்த்தை மீண்டும் என்னை கவர்ந்திருந்தது , அது கவிதை எழுதுவது அத்தனை எளிதானது(நன்றி: ஷீ) அல்ல ...
இந்த விதி எனக்கும் பொருந்தும்....
பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நீந்தி இங்கு வந்து இழைப்பாற கிடைக்கும் நேரம் வாசிப்பதற்க்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது...
கவிதை எழுத எங்கே நேரம்????....
அட... அறிமுகம் சொல்ல சொன்னால் என்ன கதை சொல்லி போகிறன்...
இருந்தாலும் நான் எழுதையவற்றி இங்கு கொடுக்கிறேன்,....
மனக்குப்பையிலிருந்து நான் எழுதிய முதல் வரிகள்....
Unforgiven MATALLICA என்னும் ஒரு ஆங்கில ராக் குழுவின் "UNFORGIVEN" என்னும் ஒரு பாடலினால் உந்தபட்டு வந்த கவிதை...
என்னை விட்டு பிரிந்து போ வலியின் வரிகள்...
தாமரைத்தண்டு... அப்பா சொன்ன கதை...
பிச்சைக்காரியாய்... என் 100-வது பதிப்பு.........என்னில் எனக்கு பிடித்த பாகம்
கண்ணீர் காலம்.... இது நீண்டு போகும் ஒரு தொடர்... முடிவில்லை..
மேலும் பதில் கவிதைகள் சிலதும் எழுதி இருக்கிறென்....
மன்றம் என்னை மேலும் எழுத சம்மதிக்கும் என்ற நம்பிக்கையுடன்...
Bookmarks