Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: பாதச் சுவடுகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    பாதச் சுவடுகள்

    பாதச் சுவடுகள்

    என் உற்ற நண்பருக்கு அர்ப்பணம்!

    என் மடல்:
    நடந்து வந்த பாதை
    திரும்பிப் பார்க்கிறேன்
    அழகாய் இரு ஜோடி
    அடுத்து நடந்தபடி
    பதித்த சுவடுகள் - வாழ்க்கைப்
    பாதைப் பதிவுகள்


    துள்ளித் தவழ்ந்தபோது
    பள்ளி கற்ற போது
    பரிசுகள் பெற்ற போது
    பதவிகள் உயர்ந்தபோது
    உறவுகள் மலர்ந்தபோது
    உயிர்க் குருத்து பிறந்தபோது


    அணுவும் எனை விலகாது
    அடியொற்றி எனை ஒட்டி
    பாதுகாத்து வந்ததுபோல்
    பாதை நெடுக சுவடு கண்டேன்!


    என்னே என்மேல் கரிசனம்
    வேண்டாமல் நீ தந்த தரிசனம்
    கருணைக்கு மறு பெயர் நீதான்- உன்
    பெருமைக்கு ஈடிங்கு யார்தான்


    இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்க்க
    என்ன இது கொடுமை!
    தென்றல் வீசும் பூங்காவில்
    ஒன்றாக உலாவிவிட்டு
    புயல் அடித்த பொழுதில் எல்லாம்
    அயலாய் என்னை விட்டதென்ன?


    நெஞ்சம் பிளந்து உதிரம் உறிந்தாளே-அந்த
    வஞ்சினக் காலம் ஒரு காலடி
    நோயெனும் தீயில் தீய்ந்து எமன்
    வாயில் வரை போன காலம் ஒரு காலடி
    வேலை இன்றி வறுமையெனும்
    பாலையில் நான் வறண்டகாலம் ஒரு காலடி
    குற்றம் செய்யாமலே தப்பாய் புரிந்த நண்பர்
    அற்றுப் போன வேதனைக்காலம் ஒரு காலடி


    அறுவடை காலம் உடன் வந்த தோழன்
    அடைமழைக் காலம் போனது எங்கே
    நிச்சயம் உன் துணை வேண்டி உருக
    நைச்சியமாய் நீ மறுத்ததற்கு சாட்சி இங்கே
    இஷ்டப்பட்டால் கூட வருவாய்
    கஷ்ட காலம் தனியாய் விடுவாய்
    பேரன்பு உனக்கு என்று சொன்னவன் யார்?
    பேர் உனக்கு கடவுள் என்று தந்தவன் யார்?


    பதில் மடல்
    துன்பச் சகதியில் உன் பிஞ்சுப் பாதம் சிக்காமல்
    தூக்கி நான் சென்ற காலம் ஒரு காலடி!
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:41 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    அருமையான கவிதை இளசு தொடருங்கள்....
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:42 AM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாவ்!! அருமையாக உள்ளது இளசு அவர்களே. பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:42 AM.

  4. #4
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    அனுபவங்கள்தான் உண்மையான கடவுள்..
    காலடி வைத்தது எல்லாம் கடவுளோடுதான்..
    நல்ல கவிதை இளசு அவர்களே..
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:43 AM.

  5. #5
    இனியவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    Ũ !
    Posts
    669
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்... அதை அழகுத் தமிழில் சொன்ன விதம் அருமை !!! அந்தக் கடைசி வரி பன்ச்-ஐ கொடுத்த விதம் மிக அருமை !!!
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:44 AM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்... !!!
    அப்போ இளசை தமிழ்மன்ற கமல் என்கிறீர்களா??
    நாராயணா!!!
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:45 AM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  7. #7
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்... !!!
    அப்போ இளசை தமிழ்மன்ற கமல் என்கிறீர்களா??
    நாராயணா!!
    எங்கிருந்து எடுக்கிறோம் என்பது முக்கியமல்ல..
    அதை எப்படி கொடுக்கிறோம், எத்தனை பேருக்குப் போய்ச்சேர்கிறது என்பதுதான் முக்கியம்.
    ஆயிரம் ஆங்கில படங்கள் பார்த்தும் உருப்படியாய் ஒரு படம் எடுக்கத்தெரியாததற்கு இது எவ்வளவோ மேல்..
    ஆகையால் எழுதத் தெரியாவிட்டால் சும்மா இருங்கள். அல்லது அடுத்தவர் எழுதுவதை
    பாராட்டுங்கள். அல்லது எள்ளி நகையாடாதீர்கள்..
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:47 AM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ராம், நாரதர் சொல்வதை நல்ல முறையில்...
    சுகமான நெருங்கிய நண்பர்களுக்கிடையேயான சுவைப்பேச்சாய் எடுப்பதுதான் சரி! அவர் மனம் நமக்குத் தெரியாதா என்ன...
    எனக்கென்னவோ அவர் கருத்துகள் மன்றத்துக்கு தனிச்சுவை தரும் என்றே
    தோணுகிறது.
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:47 AM.

  9. #9
    இனியவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    Ũ !
    Posts
    669
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நக்கல் பார்ட்டி நாரதரே.... உம்ம வேலையை இங்கும் காட்டி ராம் கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டீரா?.... நன்றாக வேண்டும் உமக்கு நாராயணா !!!

    ராம்... இளயவர் சொல்வது போல், இது போல் ஒரு ரவுசுப் பார்ட்டி இருந்தால் தான் சபை கலகலப்பா இருக்கும். !!!
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:48 AM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நண்பர்களே
    மூலக்கருத்து கேட்ட ஒரு (ஆங்கிலக்) கதைதான்!
    இனி கண்டிப்பாய் விமர்சனம் வரும் வரைக் காத்திருக்காமல்
    முதலிலேயே மூலம் உரைப்பேன்...( எனக்கு உறைத்துவிட்டதால். ஹிஹி..)!

    அதுக்காக கமல் அளவுக்கு உயர்த்திப் பாராட்டுவது குசும்புதானே...!
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:49 AM.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    மூலம் உரைத்து பின்னர் தனி பிரிவாக போனதன் காரணம்.......

    உந்தப்படுவதினாலே அது தரம் தாழ்ந்து போவதில்லை......

    சக படைப்பாளியை பிரதியெடுத்து முந்திக்கொண்டு அது தனதென அடம் பிடிப்பது தான் - தவறு...

    எட்டுத் திக்கும் சென்றிடுவீர் என்ற பாரதி கூட, பல புது வடிவங்களை முயற்சிக்க, அவர் கற்று பெற்ற ஆங்கிலக் கல்வியும் ஒரு காரணம்........
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:50 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    அது சரி, அந்த உற்ற நண்பர் தான் மூலவரா......
    Last edited by பாரதி; 03-05-2008 at 06:51 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •