வரைமுறைகள்:
1)
தமிழ் மன்றத்தில் ஒரு கவிதை/பாடல் படைத்திருந்தாலும், இங்கே உங்கள் பெயரில் ஒரு தனி திரி துவங்க தகுதியுடையவராகிறீர்கள். ஒரு கவிஞருக்கு ஒரு திரி மட்டும் போதும். அதற்கு மேல் துவங்க வேண்டாம்.
2) உங்கள் கவிதைத் தொகுப்பு சுட்டிகளை கொடுக்குமுன், உங்களைப் பற்றியும், உங்கள் விருப்பம், ஆர்வம் பற்றியும் சிறிது கூறுங்களேன்.
3) நீங்கள் படைத்த கவிதைகளை சுட்டிகளுடன் கொடுக்கவும். (சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று தெரியாதவர்கள், நிர்வாக உதவியாளர்களின் உதவியை நாடலாம்)
4) நீங்கள் படைத்த கவிதைகள் மட்டுமல்லாது, நீங்கள் இங்கே ரசித்த, மற்றும் உங்கள் சிந்தனையை தூண்டிய படைப்புகளையும் பட்டியலிட்டு கொடுக்கலாம்.
5) கடைசியாக, நீங்கள் படித்த சிறந்த புத்தகங்கள், மற்றும் ஆசிரியர்களையும் நமது மன்றத்து உறுப்பினர்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டுச் செல்லுங்கள். அது கவிதை தொகுப்பாகவும் இருக்கலாம், வேறு வகை புத்தகங்களாகவும் இருக்கலாம்.
6) உங்கள் புதிய படைப்புகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சுட்டிகளை சேர்க்கவும் அல்லது மேம்படுத்தவும்.
வெகு நாட்களாக மன்றம் வராமல் இருக்கும் பழைய உறுப்பினர்களில் தொகுப்பை, நிர்வாக உதவியாளர்கள் கோர்த்து வழங்குவார்கள்.
உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..
இராசகுமாரன்
Bookmarks