எட்டி நிற்கும்
நிலவு மட்டுமல்ல,
சுட்டெரிக்கும்
சூரியனும் தான் நீ!!
முகமூடிகளை
அணியாதவள்!
முகம் வாடி தலை
குனியாதவள்!
உன் விரல் சிந்தும்
வார்த்தைகளோ
ஞானிகளின் ரகம்!
உன் இதழ் சிந்தும்
புன்னகைகளோ,
ராணிகளின் ரகம்!
வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!
மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்!
தமிழ் மொழியென்றால்
உன் விழிகளிரண்டும்
பரவசமடையும்!
கலாச்சாரமும், பண்பாடும்
உன் மொழிகளிலின்று
மறு பிரசவமடையும்!
இன்று!
பாரதியிருந்தால்
சொல்லியிருப்பான் -நீதான்
புதுமைப் பெண்னென்று!
அன்று,
சொன்னவளுக்கு
இட்டிருப்பான் பேரை
முதுமைப் பெண்னென்று!
Bookmarks