கூகிள் நடத்தும் போட்டியில் 60 இந்தியர்கள் தேர்வு
இணைய தள தேடுதல் பொறி நிறுவனமான கூகிள் நடத்தும் கோடை கால போட்டிகளில் பங்கேற்க 60 இந்திய இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் கூகிள் நிறுவனம் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது. மென்பொருள் உற்பத்தி அல்லது ஓபன் சோர்ஸ் கோடிங் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்து வெற்றி பெறுகிறவர்களுக்கு கூகிள் நிறுவனம் ரொக்கப் பரிசுகளை அளிக்கிறது.
இந்த ஆண்டு இந்தப் போட்டியில் பங்கேற்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இதிலிருந்து உலகம் முழுவதும் உள்ள 900 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60 பேர் இந்தியர்களாவர்.
இது மட்டுமின்றி இந்தப் போட்டிக்கான ஆலோசகர்களாக இந்தியாவை சேர்ந்த எம் பைஜு மற்றும் சங்கர்ஷன் முகோபாத்யாய ஆகியோர் தேரந்தெடுக்கப்பட்டள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Bookmarks