Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: துரோகம்...!!!

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2007
    Posts
    65
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0

    துரோகம்...!!!

    துரோகம்

    என்மீது
    பிரியம் உள்ளவன் ?
    போல நடித்த...
    பிரியமில்லாதவனுக்கு...
    இதயம் நொறுங்கியவளின்...
    இரங்கற்பா !

    எனக்கு
    எதையெல்லாமோ
    கற்றுக்கொடுத்தாய்!
    ஏழையாய் வாழ...
    கவிதை எழுத...
    அவமானப்பட...

    அதற்கு
    குருதட்சணையாகத்தான்
    என் காதலை
    பறித்துக்கொண்டாயோ

    மௌனம்
    சம்மதத்தின் அறிகுறி!
    ஆனால்
    உன் மௌனமோ என்...
    காதலின் சவக்குழி!

    நீ
    என்றேனும்
    இந்த கவிதையை
    பார்க்க நேர்ந்தால்...
    பதில் அனுப்பு!

    எனக்கு
    துரோகம் செய்த காரணத்தை...
    Last edited by இளசு; 18-04-2007 at 08:02 PM.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    உருக்கமான கவி. அனுபவங்கள் ஏதேனும் உண்டோ?

    நன்றி உறவே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    [quote=slgirl;194417]துரோகம்

    என்மீது
    பிரியம் உள்ளவன் ?
    போல நடித்த...
    பிரியமில்லாதவனுக்கு...
    இதயம் நொருங்கியவளின்...
    இரங்கற்பா !
    ---------------
    --------------
    கவிதை அழகு
    யாருக்கோ எழுதியது போலுள்ளது
    Last edited by பென்ஸ்; 18-04-2007 at 02:19 PM.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    வாழ்வில் சில சமயம் இது போன்ற அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. உண்மைதானே. இடித்துரைக்கும் உண்மை. வாழ்த்துக்கள்
    Last edited by அரசன்; 18-04-2007 at 12:30 PM.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நெஞ்சத்தை நெருடுகிறது உங்கள் வரிகள்

    எது எதையோ கற்றுத் தந்து விட்டு, பறித்துக் கொண்ண்டாய் என் காதலை - குரு தட்சணையாக.....

    அருமையான கற்பனை, வாழ்த்துக்கள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    இலங்கை பெண்...

    கவிதைகள் எப்போதும் உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்பேன்...
    ஆனால் அதே நேரம் கவிதைகள் கவிதையாக மட்டுமே படிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லுவேன்...

    மனிதனின் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது காதல் தோல்வி என்பதை விட காதலில் தூக்கி எறியப்படும் உணர்வு வரும்போதுதான் என்று உறுதியாக சொல்லுவேன்...

    செம்மீன் நாவல் விமர்சனத்தில் இளசு சொல்லும் போது "சொல்லிக் கொண்டு போனால்" எல்லாம் தீர்ந்துவிட்டது என்று ஒரு கருத்து இருக்கக் காரணம், இப்படிப் பிரியும் போது நம்முடைய "ஈகோ" காயப்படுவதில்லை... அதற்குப் பதிலாக
    "பாவம், அவளும்/ னும் என்னதான் செய்வான்/ ள்" என்று ஒரு டிபன்ஸ்சை உருவாக்கி சமாதானப்படுத்திக்கொள்ளும்...

    இல்லையென்றால்....
    தான் தூக்கியெறியப்பட்டேன் என்பதைக் காயமாகக் கொண்டு, அதை வெளியே காட்டாமல்
    நான் என்ன தவறு செய்தேன்... ???
    காதலித்தேன்...
    அன்பு காட்டினேன்..
    விட்டுக்கொடுத்தேன்...
    காத்திருந்தேன்...
    என்று தன் பக்கத்தை பலப்படுத்தி...

    காக்கவைத்தாய்...
    வலியுடன் இருக்க வைத்தாய்...
    புரிந்துகொள்ளவில்லை...
    என்று குறை கண்டு பிடித்துக் காட்டும்...

    சில நேரங்களில் சிம்பதி தேடி, அடுத்தவர் கவனம் கிடைக்காதா என்று ஏங்க வைக்கும் ஒரு காதல் இதயத்தை அழகாக சித்தரித்து காட்டியுள்ளீர்கள்....

    என்ன செய்வது கவிதையின் நாயகியும் ஒரு சாதாரணப் பெண்தானே....

    ஆனால் காயப்படும் நெஞ்சம் பல நேரம் உண்மையான காதலை காட்டும் நெஞ்சமாக இருப்பது ஒரு கசப்பான உண்மை....

    கொடியவன் உண்மைக்காதலை புரிந்து கொள்ளவில்லையெனில், விட்டுவிடலாம்... காலம் காதலின் வலி(மை) சொல்லும்...

    வாழ்த்துகள்...
    Last edited by இளசு; 18-04-2007 at 07:47 PM.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இன்னும் ஒரு மணி நேரத்துக்காவது
    இலங்கைப் பெண்ணின் கவிதையையும்
    இனிய பென்ஸின் பின்னூட்டத்தையும்
    பிரித்து அலசி எழுதலாம்..

    அத்தனை ஆழமான மன உணர்வுச் சிக்கல்களை
    இருவரும் அழகாய் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்..

    காதல் - ஈர்ப்பு - நிராகரிப்பு
    முழுக்க உணர்வு சார்ந்த நிகழ்வுகள்..
    அறிவைக்கொண்டு ஆராய்தல்
    நிகழ்வில் இல்லாதவருக்கே அந்த நேரங்களில் சாத்தியம்..

    மௌனமான உதாசீனம்
    விடை தெரியா விலகல்கள்
    விளங்காப் பிரிதல்கள்
    முழுமையடையா முறிவுகள்...

    பல பத்தாண்டுகள் கழித்தும்
    சில இரவின் முன்காலைகளில்
    துன்பக்கனவாய் வந்து நெஞ்சு மிதிப்பதை
    அறிவும் தர்க்கமும் நிறுத்த முடிவதில்லை!!!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2007
    Posts
    65
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    படித்து பதிலிட்டவர்களுக்கு நன்றிகள்

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மௌனம்
    சம்மதத்தின் அறிகுறி!
    ஆனால்
    உன் மௌனமோ என்...
    காதலின் சவக்குழி!



    இந்த வரி மிகவும் அருமை


    கவிதை நன்று.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2007
    Posts
    65
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஓவியா

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அழகான கவிதை.. நேர்த்தியான அலசல்..

    பாராட்டுக்கள் தோழிக்கும், நண்பர் பென்ஸுக்கும், அன்பு அண்ணனுக்கும்!
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    துரோகம்... காதலனின் வஞ்சனை.. தவிப்பவளின் கண்ணீர்த் துளிகள்... அருமையாக எழுதூகிறீர்கள்... அனுபவக் கொடுமையா?
    மௌனம்
    சம்மதத்தின் அறிகுறி!
    ஆனால்
    உன் மௌனமோ என்...
    காதலின் சவக்குழி!

    வரிகள் இம்மாதிரி சிலருக்குத் தான் வரும்.. நம் மன்றத்தில் சிலர் இம்மாதிரி கவிதைகள் எழுதுவார்கள்.... நீங்கள் அதினினூடே!

    அறியாமல் பறித்துக்கொண்ட காதல் துரோகத்தின் காரணத்தை அறிய விரும்பி மடல் எழுதிய உங்கள் கவிதையின் வரிகள்.... அட்டகாசம்...

    பாராட்டுக்கள் தோழி.

    ஆதவன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •