Results 1 to 4 of 4

Thread: ஆய பயன்..

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    ஆய பயன்..

    ஏகாந்த இரவுப் போதுகளில்
    ராணிகளின்
    சாம்ராஜ்ஜியத்தில்
    மதி மயக்கும்
    மதுவுடன்
    கொண்டாட்டமாய்
    குடியேறிய பின்
    வந்தமர்ந்த
    வறட்டுச்சிந்தனைகள்
    கொண்டு
    என் தமிழ் எழுதி
    ஆய பயன்?

    உற்று உற்றுப் பார்த்து
    உயிரோடுதான்
    நான் இருப்பதை பறைசாற்றி
    என் பிரேதத்தில்
    உயிரோடு இருக்கும்
    ஒரே ஒரு உறுப்பான
    கண்களினால்
    ஆய பயன்?

    என் எழுதுகோலை
    கறையான்கள்
    அரித்துச் சமைத்து
    சாப்பிட்ட வேளையில்
    எழுதுவதற்கு
    ஏதுமற்ற போதுகளில்
    விட்டேத்தியான பார்வைகளை
    விண்ணில் வீசி எறிந்து
    வெறித்துப் பார்த்ததினால்
    ஆய பயன்?

    நாலு சுவருக்குள்
    அமர்ந்து
    என் எதிரே உட்கார்ந்து கொண்டு
    என்னைப் பார்த்து
    கண்ணடித்துச் சிரித்து
    என்
    உணர்வுகளை
    அற்றுப் போகச் செய்து
    விட்டவளை
    விட்டு கொஞ்சம்
    ஒதுங்கி நின்றதால்
    ஆய பயன்?

    கலகக்காரர்களின்
    கைகளில்
    அகப்பட்ட பந்தாய்
    நாலா திசையும்
    எறியப்பட்டு
    எதிர்ப்பட்ட சுவரில் மோதி
    மறுபடியும் கலகக்காரர்களின்
    கையில் சிக்கி
    தப்பிக்க நினைக்கையில்
    வெடித்துவிட்டதால்
    ஆய பயன்?

    என்னை நானே
    கொல்கின்ற
    நிலைக்கு வந்த போதும்...
    இந்த பிரபஞ்சத்தின்
    காற்று எனக்கு
    எதிராய் கிளம்பிவிட்டபோதும்
    சொல்ல முடியாத
    ரகசிய அவஸ்தையை
    அனுபவிக்கத்தான்
    மனம் நாடுகிறதே...

    ஆகையால்,
    ஆய பயன்
    என்னவெனில்,
    நான் நீயாகத்
    திரிந்து போனதுதான்
    ஆய பயனால் ஆனபயன்....
    Last edited by விகடன்; 26-04-2008 at 02:30 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உனக்கு என்ன பயன் என்பதெல்லாம் விளங்கவில்லை ராம்...
    எங்களுக்கு இனிய பயன்... உன் கவிதைகள்...
    அவை போதும் .... இடைவிடாமல் தொடர்ந்தால்.....
    Last edited by விகடன்; 26-04-2008 at 02:30 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    நான் நீயாகத் திரியவில்லை ராம்பால்ஜி! நானும் நீயும் ஒன்றானோம். அதுதான் ஆய பயன்.

    ===கரிகாலன்
    Last edited by விகடன்; 26-04-2008 at 02:30 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    ஆய பயன் - புதிய சிந்தனைகளாக இருக்கும். இருப்பதால் என்ன பயன் என்ற சிந்தனையே, புதியவற்றைத் தோற்றுவிக்கும்.. உலகம் இயங்குவதே, ஆய பயன் என்ன என்ற கேள்வியின் சித்தாந்தமே.....

    ஆகையால், எல்லோரும் கேளுங்கள், ஆய பயன் என்ன என்று.....

    என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற கீதையின் சொல்லுக்கும் அர்த்தம் விளங்கும்.......
    Last edited by விகடன்; 26-04-2008 at 02:31 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •