Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: ஆறா ரணம் - செவிகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    ஆறா ரணம் - செவிகள்

    கழிநெடிலடிவெண்பா

    புள்ளிசை கேட்டறிந்த காதிலே நீயும்தான்
    உள்ளிருந்து ஊற்றுகிறாய் ரத்தக் குழம்பு
    கமழக் கமழச் கவிகள் படித்ததை
    என்செவி உற்று அறிந்ததே கேளாயோ
    உன்வார்த்தை கண்டென் செவிமுடி எல்லாம்
    நடனங் களித்த கதைமாறி யின்று
    சடலமாய் போனது வெந்து அவைகள்
    அதரவில் லாலே குதறவும் கொண்டாய்
    பதமொரு காதல் பிழியவும் கண்டாய்
    நிதமொரு காவியம் காதுகள் கேட்கும்
    தொளைத்து விடுவாயோ நீகாதல் கொண்டு
    செவிகளை மீறி நுழைகிறது அன்று
    புவியைச் சருக்கிய வார்த்தைக ளாலே
    கவிதைகள் கண்ணீர் விடுமேபார் காகிதம்
    சாகும் குருதி படியுமடி வற்றி
    கதையை நிறுத்தடி சற்றே!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    அருமை ஆதவா. அனைத்து வகை கவிகளிலும் கலக்குகிறீர்கள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆதவா,

    ஆறாத ரணமென்னும் கருத்துத் தொடர்ச்சியிலும்
    மாறாத பாவிலக்கண பயிற்சியையும் புகுத்தி
    ஆறாக நீ படைக்கும் கவிவெள்ளத்தில் நனையும்
    வேராக மகிழ்கிறேன்,வளர்கிறேன், வாழ்த்துகிறேன்..


    வேறு வகைத்துன்பம் நேர்கையில் காதலியின் குரல் யாழிசை..
    ஆனால் காதல் முறிந்தால், கொதிக்கும் செவியாற ஏது திசை?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி இளசு அண்ணா, மற்றும் மோகன் அவர்களே!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    செய்யுள் கவிதைகள் எல்லாம் உனக்கு சரளமாக வருகிறது ஆதவா..

    நன்றாக இருக்கிறது.. ஆனால் ஏனோ விளங்கவில்லை..

    உன்வார்த்தை கண்டென் செவிமுடி எல்லாம்
    நடனங் களித்த கதைமாறி யின்று
    இந்த வரிகள் ரொம்ப நன்றாக உள்ளது.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வார்த்தைகள் பிரித்து போட்டிருப்பேன் மற்றபடி அர்த்தம் விளங்கிவிடும் ஷீ!! மீண்டுமொருமுறை படியுங்கள்...

    இதே கவிதையை செய்யுள் வடிவல்லாமலும் எழுதியிருக்கிறேன்... அதை பிந்தைய நாட்களில் இடுகிறேன்... (முதலில் எழுதியது.... பிறகுதான் அதை அப்படியே வெண்பாவாக மாற்றிவிட்டேன்.)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    பதமொரு காதல் பிழியவும் கண்டாய்
    நிதமொரு காவியம் காதுகள் கேட்கும்
    தொளைத்து விடுவாயோ நீகாதல் கொண்டு


    அருமை ஆதவா,

    அருமை, ஆதவா.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றிங்க !!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஹூம்... மரபுக் கவிதை...
    செய்யுள் வடிவம்.. எனக்கு இப்படிக் கவிதைகளில்தான் மிக நாட்டம்.

    புள்ளிசை கேட்டறிந்த காதிலே நீயும்தான்
    உள்ளிருந்து ஊற்றுகிறாய் ரத்தக் குழம்பு
    கமழக் கமழச்(க்) கவிகள் படித்ததை
    என்செவி உற்று அறிந்ததே கேளாயோ
    உன்வார்த்தை கண்டென் செவிமுடி எல்லாம்
    நடனங் களித்த கதைமாறி யின்று
    சடலமாய் போனது வெந்து அவைகள்
    அதரவில் லாலே குதறவும் கொண்டாய்
    பதமொரு காதல் பிழியவும் கண்டாய்
    நிதமொரு காவியம் காதுகள் கேட்கும்
    தொ(து)ளைத்து விடுவாயோ நீகாதல் கொண்டு
    செவிகளை மீறி நுழைகிறது அன்று
    புவியைச் சருக்கிய வார்த்தைக ளாலே
    கவிதைகள் கண்ணீர் விடுமேபார் காகிதம்
    சாகும் குருதி படியுமடி வற்றி
    கதையை நிறுத்தடி சற்றே!


    ம்ம்ம்... கவிதையின் கரு மீண்டும் காதல் ரணமே... வார்த்தை விளையாட்டுதான் இதில் சுகம்! சருக்கியது என்ற வார்த்தையில் தவறு இல்லையெனினும் "ரு" என்பது புது உபயோகம்.

    இன்னும் இதுபோல் பலப்பலச் செய்யுட்கள் படைக்க! வாழ்த்துகள்!!!
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    கழிநெடிலடி வெண்பாவில்
    எண்சீர், அறுசீர் கேள்வியுற்றிருக்கிறேன்
    நால்சீர் புதிதாய் இருக்கிறதே....
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றிங்க பிரதீப்.... செய்யுளில் தளைதட்டுகிறதா?

    கழிநெடிலடி- தவறுதான்.. மன்னிக்க..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    வாழ்த்துக்கள் ஆதவன்!.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •