நன்றி ஆதவா... வெண்பாவில் எனக்கு எள்ளளவும் ஞானமில்லை... சிலர் எழுதியதை வைத்து சொன்னேன். தளை, தளை என்கிறாயே, அதைப் பற்றியும் புரியாது...
இது வலைப்பக்கத்திலிருந்து எடுத்தது
http://geeths.info/archives/category/venba-muyarchi/
சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.
விளக்கம்:
தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.
இது என்ன வகை வெண்பா? இப்படி இரண்டாம் அடியின் முடிவில் கோட்டினை பயன்படுத்தி எழுதுவது இலக்கணப்படி சரியா, இல்லையா?
விளக்கவும் ஆதவா! தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
Bookmarks