வெண்பா எழுத வேண்டும் என்று என் மனதின் ஓரத்தில் ஆசை உள்ளது..
அதன் சூட்சுமமும் ஓரளவிற்கு அறிந்துள்ளேன்..

வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் விளக்கமாக
சொல்லிகொடுங்களேன்...

திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை என்று அறிந்திருக்கிறேன்..

உங்கள் விளக்கங்களும் வெண்பாக்களும் தாருங்கள்..

இணையத்திலிருந்து கீதா என்பவர் எழுதின சில வெண்பாக்கள்
நன்றி கீதா...
http://geeths.info/archives/category/venba-muyarchi/

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.


விளக்கம்:
தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

வெண்பாவின் சூட்சுமம்... நான் அறிந்தவரையில்...

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.


முதல் இரண்டு அடியில்
ஒரே உச்சரிப்பை உடைய வார்த்தைகள் மூன்று இடத்திலும்
அடுத்த இரண்டு அடியின் தொடக்கத்தில்
ஒரே உச்சரிப்பை உடைய இரண்டு வார்த்தைகள் வருகின்றன..

எல்லா வெண்பாக்களையும் நான் ஆராய்ந்த வரையில் இம்முறையிலேயே அமைந்துள்ளன..

ஆனால் இலக்கணப்படி எப்படி எனறு தெரியவில்லை.

வெண்பாவின் வகைகள்..

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
சவலை வெண்பா

வெண்பா முயற்சியில் சூட்சுமம் தெரியாமலே பல வருடங்களுக்கு முன்பாய் எழுதிய ஒன்று...


விழிநீர் இரவெல்லாம் தலையணை நனைக்க
வலியோடு உறங்குகிறேன் நிலவே - சில இரவுகள் மட்டும்
உமிழ்நீர் தலையணை நனைக்க உறங்குகிறேன், உன்
இதழ்கள் அன்றெல்லாம் என்னைக் கண்டு புன்னகைத்திருந்திருக்கும்...


நிச்சயம் ஏகப்பட்ட குறைகள் இதிலே இருக்கும்...

கவிதைகளில் வெண்பா எழுதுவது மிகவும் ரசனையான ஒன்று...

வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் இன்னும் விளக்கமாக
சொல்லிகொடுங்கள் நண்பர்களே!