நன்றி நண்பர்களே! நிச்சயம் தொடருகிறேன் பாரதி அவர்களே!
நன்றி நண்பர்களே! நிச்சயம் தொடருகிறேன் பாரதி அவர்களே!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
மொத வகுப்புல,
எழுத்துனா என்னன்னு பார்த்தோம்.. எழுத்துனா என்ன சொல்லுங்க??
குறில்.. (குயிலு இல்லபா) நெடில், ஒற்று...
ஆங்! அதேதான்...கன்னுங்களா..
போன தபா,
அசை பாடத்துல நேரசை மட்டும் பார்த்தோம்!
நேரசை னா என்ன சொல்லுங்க,
குறில் (க) , குறில்+ஒற்று (க+ல் = கல்), நெடில் (கா), நெடில்+ஒற்று.. (கா+ல் = கால்)
இன்னைக்கு பாடத்துல, நிரையசைனா என்னன்னு பார்க்கலாம்....
குறில்+குறில் = இரண்டு குறில் சேர்ந்து வரும் வார்த்தைகள்...
அதாவது, பல, சில, மழை, பிழை.. இந்த வார்த்தைகள் எல்லாவற்றிலும் இரண்டு குறில்கள் சேர்ந்துள்ளன....
இன்னாபா கறீட்டா, நான் சொல்றது...
சரி இதுக்கு ஒரு பேரு வச்சிடுவோம்...
குறில்+குறில் சேர்ந்து வந்தா குறலிணை... சரிதானா தலைவா..
இப்போ, நிரையசை ல குறலிணை பார்த்தாச்சு
நாளைக்கு குறலிணைஒற்று பார்க்கலாமா..
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இலக்கணம் மருந்தென மிரள்வதால் அளவாக, தேன் குழைத்து சுவையாக கொடுக்கும் ஷீ-க்கு நன்றிகளோடு பாராட்டுக்கள்...
(கொஞ்சம் விரைந்து கொடுக்க முயற்சி செய்யுங்கள் நண்பா... என் அவசரம் புரியும்னு நினைக்கிறேன்..)
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
நிறைய புரியாத விஷயங்கள் உள்ளன. மெதுவாக படித்து புரிந்துகொள்ளவேண்டும்.
இப்பொழுதுதான் புரிகிறது - நான் எத்தனை இழந்திருக்கிறேன்.
நன்றி வணக்கம்
ஆரென்
நன்றி பூ! விரைவாக கொடுக்க விரும்பினாலும் முடிவதில்லை பூ! முயற்சிக்கிறேன்...
------------
ஆரென் அவர்களே! இங்கே பதிக்கும்பொழுதுதான் நானும் அந்த இலக்கணங்களை கற்றுக்கொள்கிறேன்.. உங்களைப்போலவே நானும் வருத்தபடுகிறேன்.. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்து கற்றுக்கொள்வோம்..
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இப்போ, நிரையசை ல குறலிணை பார்த்தாச்சு
குறலிணைஒற்று பார்க்கலாமா..
---------------------------------------------
சிலக்(காதல்கள்) இந்த வார்த்தையில் அடைப்புக்குறியில் உள்ளதை விட்டுவிடுங்கள்..
சில என்பது குறலிணை, கூடவே பொட்டு விட்டுக்குனு ஒரு எழுத்து ஒட்டிகிட்டிருக்கு பாருங்க, அது ஒற்றெழுத்துனு உங்களுக்கு நல்லாவே தெரியும்..
அப்ப இதை எப்படி அழைக்கலாம், குறலிணை ஒற்று...
நிரையசைல,
குறலிணை (உதா: சில), குறலிணைஒற்று (உதா: சிலக்காதல்கள்), பார்த்தாச்சு..
அடுத்து குறில்நெடில் பார்க்கலாம்..
குறிலும், நெடிலும் இணைந்து வரும் வார்த்தைகள் இதிலே அடங்கும்..
உலா, விழா, நிலா,
அடுத்து குறில்நெடில்ஒற்று
கனாக்காலம் க-குறில், னா-நெடில், க்-ஒற்று..
கடைசியா, ரெண்டு ஞாபகம் வச்சிக்கோங்க...
நெடிலும்குறிலும் சேர்ந்து வராது... உதா. மாவு (மா=நெடில் - 1 அசை----வு=குறில் - 1 அசை) இது 2 அசையாக கொள்ளப்படும்
நெடிலும்நெடிலும் சேர்ந்து வராது...உதா. தோழா (தோ = 1 அசை----ழா = 1 அசை) இது 2 அசையாக கொள்ளப்படும்
அப்படி சேர்ந்து ஏதாகிலும் வார்த்தை வந்துச்சினா, அது ஓரசை யா இருக்காது, ஓரசை னா நாம உச்சரிக்கிறோம் இல்ல அதுல வேறுபடும்,
உதாரணம், மாவு - இதில் மா-நெடில், வு-குறில், மாவு என்று வார்த்தை வந்தாலும் மா என்று உசரிக்கும்போதே அது ஓரசையாகிறது, வு என்னும்போது அது இன்னொரு அசையாகிறது...
ஒற்று எழுத்துக்கு அசை கிடையாது, இது பூஜ்ஜியம் மாதிரி, சேர்ந்து வந்தாதான் மரியாதை... உதாரணம்: கால், கல், இப்படி சேர்ந்து வரனும். வெறுமனே 'ல்' அப்படி இருந்தா அர்த்தம் தராது..
இரண்டு ஒற்று எழுத்துக்கள் சேர்ந்து வந்தாலும் ஒன்றாகவே எடுத்துக்க வேண்டும்
உதாரணம்: அர்ப்பணிப்பு என்ற வார்த்தையில் ர் ப் என்ற எழுத்துக்கள் வந்தாலும்,
அ=குறில், ர்-ப்=ஒற்று (இரண்டுமே) குறில்+ஒற்று = நேரசை என்று கொள்ளவேண்டும்
உஷ்! அப்பாடா! இப்பவே கண்ணக் கட்டுதே
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இதுவரிக்கும் எழுத்துன்னா,
உயிர், மெய், உயிர்மெய் எழுத்து, ஆயுத எழுத்து இந்த 4 வகையும்,
குறில்,நெடில்,ஒற்று இந்த 3 வகையும்,
அசைன்னா...
இந்த 3-ல (குறில்,நெடில்,ஒற்று) நேர்அசை, நிரைஅசை இந்த 2 வகையும் பார்த்தோம்.
----------------------------
சீர்னா இன்னான்னு பார்க்கலாமா.....சீர்னா இன்னான்னு பார்க்கலாமா..... (உன் கல்யாண்துக்கு வாங்குறதில்ல கண்ணு.. இலக்கண சீர்)
நேர் அசை, நிரை அசை. இந்த ரெண்டு அசைகளும் சேர்ந்தோ, அதாம்பா ஒன்னா, இல்லாட்டி தனியாவோ... இருந்தா சீர்னு சொல்வாங்க..
1 அசை வந்தா = ஓரசைச்சீர்
2 அசை வந்தா = ஈரசைச்சீர்,
3 அசை வந்தா = மூவசைச்சீர்,
4 அசை வந்தா = நாலசைச்சீர்
இதா சீர் வாய்ப்பாடு...
அப்பிடியே ஒரு தபா, எல்லாத்தையும் படிங்க..
நான் நாளிக்கி வரேன்...
Last edited by ஷீ-நிசி; 14-05-2007 at 04:33 PM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
மீண்டுமொரு முறை கவி இலக்கணம் பார்ப்போமா?
என் பாணியில்!!!!
சொல்லாட்சியும்,இனிய சொற்களும் நமக்கு கைவர வேண்டுமென்றால் நிறைய படிக்க வேண்டும்.
செய்யுள் இலக்கணம் யாப்பு எனப்படும்.யாக்கப்படுவது(கட்டப்படுவது) யாப்பு ஆயிற்று.
செய்யுள் உறுப்புகள்
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்பினர் புலவர்.
எழுத்து
இது நம் அனைவருக்கும் தெரிந்தே.
உயிர்,மெய்யெழுத்து,உயிர்மெய்யெழுத்து,ஆயுதெழுத்து ஆகியவை அனைத்தும் யாப்பில் குறில்,நெடில்,ஒற்று என்று 3 வகைகள் ஆகி அசைக்கு உறுப்புகளாகின்றன.
அசை
குறில்,நெடில்,ஒற்று என்னும் எழுத்துகளால் அசைக்கப்படுவது(கட்டப்படுவது)அசை.அது நேர் அசை,நிரை அசை என இருவகைப் படும்.
தொடருங்கள் லதா..
பல முறை படித்தால் இலக்கணமும் வசப்படும் எங்களுக்கு..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அட.. மறந்தே போச்சு இந்த திரி....
தொடருங்க சகோ!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks