Page 3 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 25 to 36 of 84

Thread: வெண்பா எழுதுவது எப்படி?

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அதெல்லாம் ஒன்னுமில்லீங்க.. சும்மா வந்தது. எழுதினேன். எனக்கென்னவோ எழுத எழுத சுலபமாகிவிடும்போலத் தெரிகிறது...

    இனி அடுத்து ஆசிரியப்பா கலிப்பா, வஞ்சிப்பா போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆதவா இது வெண்பா முயற்சி.. சீர் தளை என்ன எங்கே என்று சொல்லுங்கள்...

    பழகின நாட்கள் ஒவ்வொன்றும்
    அழகிய நாட்கள் என்றென்றும் -இளகிய
    மனந்தானடி என்னுள்ளம் நாளை பிறந்திடும்
    தினந்தானடி என் வாழ்வின் கடைசி தினம்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    ஆதவா இது வெண்பா முயற்சி.. சீர் தளை என்ன எங்கே என்று சொல்லுங்கள்...

    பழகின நாட்கள் ஒவ்வொன்றும்
    அழகிய நாட்கள் என்றென்றும் -இளகிய
    மனந்தானடி என்னுள்ளம் நாளை பிறந்திடும்
    தினந்தானடி என் வாழ்வின் கடைசி தினம்!
    பாராட்டுக்கள் உங்களின் முதல் முயற்சிக்கு...

    உங்கள் தவறுகளை இங்கே பட்டியலிடுகிறேன்...

    • முதல் வரியில் நான்கு சீர்கள் இருக்கவேண்டும்.. கடைசி வரியில் மூன்று வரிகள் இருக்கவேண்டும்..
    • பழ கின - நிரைநிரை - புளிமா - மாமுன்நிரை அடுத்த சீரில் வரவேண்டும்.. ஆனால் வந்ததோ நேர் (நாட் கள் - நேர்நேர்- தேமா)
    • இம்மாதிரி நிறைய இடங்களில் தளை தட்டுகிறது...
    ------------------------------------------------------
    வெண்பாவுக்கு எளிய வழி ஒன்று சொல்லுகிறேன்...

    • கூடுமானவரை இரு அசைகள் மட்டுமே இருக்குமாறு வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்..
    • வெண்பாவில் தாரக மந்திரமே மாமுன்நிரை , காய்முன்நேர், விளமுன்நேர்.. இதை மனப்பாடமாக வைத்திருக்கவேண்டும்..
    • ஒரு சீரில் நிரையில் தொடங்கி நேரசையாக முடிந்திருந்தால் அல்லது நேரில் தொடங்கி நேராக முடிந்திருந்தால் அது மா வகை (தேமா, புளிமா)
    • ஒரு சீரில் எந்த அசை தொடங்கினாலும் அது நிரையாக முடிந்திருந்தால் அது விளம் வகை (கருவிளம் கூவிளம்)
    • வெண்பாவில் கனி வருக்கூடாது. ஆக, காய் வந்தால் அடுத்த சீர் நிச்சயமாக குறில் எழுத்தோ, குறில் ஒற்றோ, நெடி தனியோ அல்லது நெடிலுடன் ஒற்றோ தொடங்கும் வார்த்தை கொண்டு ஆரம்பிக்க வேண்டும்...
    • பல செய்யுள்கள் எழுதினால் சீக்கிரமே பழகிவிடும்...
    Last edited by ஆதவா; 13-04-2007 at 11:57 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #28
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம் நண்பர்களே..!

    நான் கேட்கப்போவது இந்தத் திரிக்கு தொடர்பில்லாதது என் அறிவேன்..
    எனினும் இங்கு புலவர்கள் அமைவு இருப்பதால் இதைப் பதிகிறேன்..

    கண்ணி கார்நறுங் கொன்றை;
    காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை;
    ஊர்தி வால்வெள் ளேறே;
    சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
    கறைமிடறு அணியலும் அணிந்தன்று;
    அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
    பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று;
    அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
    பிறை நுதல் வண்ணம் ஆகின்று;
    அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
    எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
    நீரறவு அறியாக் கரகத்துத்,
    தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

    ஐயா, மேற்கண்ட புறநானூற்று பாடலுக்கு அர்த்தமென்ன?

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இது புறநானூறு பாடல் மாதிரி தெரியவில்ல்லை... சீர்மிகுந்து சில இடங்களில் இருக்கிறது...
    ஏதோ காதல் பாடல்??? விளக்கம் சரிவரத் தெரியமாட்டேங்குது...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஆதவா...!

    இது புறநானூற்றுப் பாடல் தான்.. அதுவும் காதல் பாடல் அல்ல..

    சிவனைப் பற்றிய பாடல்..

    கீழே பாருங்கள்...

    பொறநானூறு கானா 1:
    கடுவுளக் கண்டுக்கலீன்னா கலீஜாப் பூடுவீங்கோ
    ------------------------------------------
    சங்கத் தமிழ்ல கூவுனது - பாரதம் பாடிய பெருந்தேவனார்
    சென்னத் தமிய்ல கூவுறது - பாரதக் கூத்துக் கட்ன பெருங்கபாலியார்

    கூவுறது ஆரப் பத்தி - சிவபெருமான்

    0 0 0

    தல மேலயும்
    மஞ்சா சோறு கீற
    நெஞ்சு மேலயும்
    வெச்சினு கீற கொன்னப் பூ மால.

    நீயோ குந்தினு கீற காள மாடு மேல - அந்த
    காள மாடோ குந்தினு கீது ஒங்கொடி மேல.

    கபால்னு ஒன்ஸ் எப்பான் எ டைமு
    வெசத்த அள்ளிக் குட்ச்ச பாரு,
    கபாலத்துக்குக் கீய கயுத்துக்கு மேல
    கறயாக் கீதுபா நீ வெசங்குட்ச்ச அடியாளம்
    அத்த பொகயறாங்க அய்யமாரு அல்லாரும்.

    ஒடம்புல பொஞ்சாதிக்கு குட்த்த
    பிப்டி பெர்செண்ட் ரைட்டு,
    நீயு செய்யுறது அல்லாமே ரைட்டு.

    நெத்தியில ஒளி வுடுதுபா
    தம்மாத்தூண்டு பெற நெலா - அத்த
    சுத்தி நின்னு பாடுதுங்கோ
    பதினெட்டு பேரு பூதகணங்கோ.

    தண்ணி வத்திப் போவாத கெமெண்டலமும்
    தவம் பண்ணி தவம் பண்ணி வளத்த தாடியுமா
    சோக்கா கீற எஞ்சாமியே,
    மண்ணு ஒலகத்துல பொறப்பெடுத்து
    மண்ணாப் போற பொறவிக்கெல்லாம்
    நீயு தாம்பா காவக்காரன்..!

    0 0 0

    சுருக்கமான பொழிப்புரை: தலையிலும் மார்பிலும் அணிந்திருப்பது கொன்றை மலர் மாலை. ஊர்தியாக விளங்குவது காளை. கொடியில் காணப்படுவதும் அக்காளையே. கழுத்திலே நச்சு அருந்திய கறை தென்படுகிறது. அதனை அந்தணர் அனைவரும் போற்றுவர். உமையொரு பாதியாகச் சில சமயம் காட்சி தரும் உருவம். நெற்றியில் பிறை நிலா. அதனைப் பதினெண் கணங்கள் போற்றுவர். நீர் குறையாத கமண்டலமும், கடுமையான தவத்தின் அறிகுறியாக விளங்கும் சடை முடியும் கொண்டவரே அனைத்து உயிர்களுக்கும் காவல்.

  7. #31
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி ஆதவா, புட்டு, புட்டு வச்சதுக்கு..

    இலக்கணம் அறியாமல் வெண்பா எழுத ஆசைப்படுதலே கூடாது.. இணையத்தில் உலாவி, சிலவற்றை நான் கற்றுக்கொண்டேன், அதை என்னுடைய ஸ்டைலில் இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்..


    வெண்பா எழுதறதுக்கு கண்டிப்பாக தமிழ் இலக்கணம் அவசியம்...

    இலக்கணம் என்றால் பாகற்காய் போல கசப்பது நமக்கு இயல்பே, என்ன பன்றது இந்த வெண்பா ஆசை விட்டுத் தொலைய மாட்டுதே, இலக்கணம் என்றாலே இந்த தேமா, புளிமா அப்புறம் எல்லா மாவையும் நாம் கண்டிப்பாக கற்றுக்கொண்டே ஆகவேண்டும்.. எளிமையாக நான் தர முயற்சிக்கிறேன்..

    செய்யுள் என்றாலே இந்த ஆறும் முக்கயமுங்க. என்ன ஆறுனா..

    எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை...

    கண், காது, மூக்கு, வாய், கை, கால், எப்படி இந்த ஆறும் மனிதனுக்கு முக்கியமோ, செய்யுளுக்கு அந்த ஆறும் முக்கியம்..

    அப்படியே அந்த ஆறும் மனசில ஏத்திக்கங்க...கஸ்டமா ஃபீல் பன்றீங்களா..சரி சிம்பிளா.. எழுத்தசை, சீர்தளை, அடிதொடை.. இப்ப சுலபமாச்சா.. ஒன்னும் பயப்படாதீங்க, இந்த ஆறையும் மூளையில ஒரு ஓரமா வச்சிக்கோங்க....


    ஒவ்வொன்னா பார்ப்போம்..

    1. எழுத்து

    குறில், நெடில், ஒற்று..

    தமிழில் இருக்கும் 247 (சரிதானுங்களா) எழுத்துகள் எதை எடுத்தாலும் இந்த 3 க்குள்ளே அடங்கிடும்..

    குறில் - சவுண்ட் சின்னதா வருதா அது குறில்,
    உதாரணம்: க, கி, கு, கெ (நீங்களே உச்சரித்துப் பாருங்க)

    நெடில் - சவுண்ட் பெரிசா வருதா அது நெடில்,
    உதாரணம்: கா, கீ, கூ, கே (நீங்களே உச்சரித்துப் பாருங்க)

    ஒற்று- இது பொம்பளை மாதிரிங்க.. பொட்டு விட்டுக்குனு வரும்
    உதாரணம்: க்ங்ச்ஞ்ட்ண்த்ந்ப்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன் அவ்ளோதான்.

    குறில், நெடில், ஒற்று, புரிஞ்சிடுச்சிங்களா..

    சரி, ஒரு சின்ன சோதனை...

    அம்மா - இதுல எத்தனை குறில், நெடில், ஒற்று இருக்குன்னு சொல்லுங்க..







    சரியா சொல்லிட்டீங்க..

    1 குறில், 1 ஒற்று, 1 நெடில்,

    - குறில், ம் - ஒற்று, மா - நெடில்

    எப்படி இருக்குதுனு சொல்லுங்க. மேற்கொண்டு தொடர முயற்சிக்கிறேன்..
    Last edited by ஷீ-நிசி; 14-04-2007 at 04:31 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆஹா எனக்குத் தகுந்த எளிய பாடத்தில் தொடங்கிய ஷீ-நிசிக்கு நன்றி..

    தொடருங்கள் ஷீ-நிசி...

    முடிவில் ஒரு வெண்பா என்னை எழுத வைப்பீர்கள் என நம்பிக்கை வந்துவிட்டது..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி இளசு! மற்ற நண்பர்களின் ஆர்வம் எப்படி இருக்குதுன்னு பார்க்கலாம்..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by leomohan View Post
    நல்ல பகுதி ஷீ வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்தேன்.
    நன்றி மோகன்.. தொடர்ந்து வருகை புரியுங்கள்..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை...

    பாடம் -1 ல்
    எழுத்துனா என்னன்னு பார்த்தோம்...

    குறில், நெடில், ஒற்று...

    -------------------------

    சரி.. பாடம் 2

    அடுத்தது அசைன்னா என்னன்னு பார்க்கலாமா சகோதார, சகோதரிகளே!

    அசைன்னா, அங்கிட்டி, இங்கிட்டு அசைறது இல்ல....
    இலக்கண அசை... புரியுதா.. விவரமா இருக்கனும்...

    அசைன்னா அது இரண்டு வகைப்படும்...

    நேரசை, நிரையசை..

    நேரசை -னா என்ன? கல், மண், புல், வில்....

    எப்படி இதை நீ நேரசைனு சொல்லலாம் என்று நீங்க.. கேட்கலாம்..

    முதல் பாடத்தில் அம்மா வில் எத்தனை குறில், நெடில், ஒற்று என்று சுலபத்தில் கண்டுபிடித்தீர்கள்...

    கல்.. இதில் 1 குறில், 1 ஒற்று..
    மண்.. இதிலும் 1 குறில், 1 ஒற்று..
    புல்.. இதிலும் 1 குறில், 1 ஒற்று..
    வில்.. இதிலும் 1 குறில், 1 ஒற்று..


    அதாவது, குறில், குறிலுடன் ஒற்று இணைந்து வரும் வார்த்தைகள் எல்லாம் நேரசை என்று அழைக்கபடும்...

    உதாரணம்.. வில் என்பதில் வி - என்பது, குறில், ல் - என்பது ஒற்று

    அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே..

    புள்ளைங்களா, பாடம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

    இந்தா வரேன்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமையான பாடம்.... எளிமையாக புரியும்படி போகிறது...

    அசை... நாம் வாயசைத்தலில் கண்டுபிடிக்கலாம்.

    செய்திட்டான் - இதை நாம் வாயசைத்துச் சொல்லும் போது

    செய் திட் டான் - என்றுதான் வரும்... நன்றாக இந்த சொல்லைச் சொல்லிப் பாருங்கள்... வேறெந்த சொல்லும் இதேமாதிரிதான்...

    கல் - ஒரு வாய் அசைவு
    கால் - ஒரு வாய் அசைவு

    நிற்க - இரண்டு வாய் அசைவு (நிற்+க)

    நிறைய சொற்களைச் சொல்லிப் பழகினாலே அசைகள் அருமையாக வந்துவிடும்.. பா எழுதுதல் எளிதாகும்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 3 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •