மிக்க நன்றி பாரதி. படித்துவிட்டு கேள்விகளுடன் உங்கள் முன் விரைவில்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
ஷீ! முதலில் நன்றியும் பாராட்டுக்களும்... வெண்பா பற்றி அறிய அழகான வாய்ப்பு.. இன்றுதான் கவனித்தேன்./ ஒரு பக்கம் இளசு போட்டுத்தாக்குகிறார்... இங்கே வெண்பா வேறு.... நானும் பா வகையில் ஓரிரு கவிகள் எழுதியிருக்கிறேன்... தேடிப்பிடிக்கிறேன். இல்லையென்றால் புதிய கவி எழுதுகிறேன்.
விழிநீர் இரவெல்லாம் தலையணை நனைக்க
வலியோடு உறங்குகிறேன் நிலவே - சில இரவுகள் மட்டும்
உமிழ்நீர் தலையணை நனைக்க உறங்குகிறேன், உன்
இதழ்கள் அன்றெல்லாம் என்னைக் கண்டு புன்னகைத்திருந்திருக்கும்...
உங்கள் செய்யுளில் பாவுக்குண்டான அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை கலிப்பா அல்லது வஞ்சிப்பா வகையீல் சற்று ஒத்துப் போகலாம். எனக்கு ஆசிரியப்பாவும் வெண்பாவும் மட்டுமே தெரியும் (தெரியும்னா எழுதத் தெரியாது ஏதோ!!!! )
முதலில் சீர் அடுத்து தளை ஆக எல்லாமே தவறுதான் என்றாலும் கவிப்பொருளை நான் குறிப்பிடவில்லை...
புன்னகைத்திருந்திருக்கும்... இவ்வளவு நீளமான சீர் இல்லவே இல்லை.
எனக்கு வெண்பா நடத்தியவர் கோவிந்தராசன். அவரின் வேகத்திற்கு எவராலும் ஈடுகொடுக்க முடியாது. அந்த அளவுக்கு சீர் பிரித்து சொல்லுவார்... அதற்கு திறமை வேண்டும்...
------------------------------------------------------
போகட்டும். எனக்கு விநாயகர் நாண்மனி மாலை பார்த்துதான் பா எழுதவேண்டும் என்று ஆசை வந்தது. உபயம் : சுப்ரமணியபாரதி.
வெகு நாட்கள் இலக்கண புத்தங்கள் படித்து மண்டையில் ஒன்றுமே ஏறவில்லை.. ஏதோ மாத்திரை என்கிறார்கள். மருந்து என்கிறார்கள்.. எல்லாமே கசப்பாக இருக்க, எப்படித்தான் புலவர்கள் பா எழுதுகிறார்களோ என்று ஏங்கியிருக்கிறேன்...
முன்பு கொடி கொண்டனை என்று எழுதினேனே! அதென்ன சும்மாவா? கொடி என்ற வார்த்தை நிறைய வரவேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்து ஆசிரியப்பாவில் எழுத முயன்று ஒரு காகிதத்தைஎடுத்தேன்..
எப்போழ்தும் போல கவிதையாக எழுதி பின் தளைகளைக் கொண்டு ஒட்டப் பார்த்து, வார்த்தை விட்டுப்போய் கடைசியில் ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரைமணிநேரம் கழித்துதான் எழுத முடிந்தது.. அப்படியே இன்னும் சில முயன்றேன்.... அதில் சற்றே வெற்றி, கால் மணிநேரத்தில் குறள்வெண்பா எழுதும் அளவிற்கு முன்னேற்றம் ...
பொறுங்கள் உங்களுக்காக ஒன்றூ எழுதிக்கொடுக்கிறேன். தளை தட்டினால் என்னை தப்பாகக் கொள்ளவேண்டாம்....
பா : குறள்வெண்பா
ஆதவன் எழுதினான் பார்இக் கவிகள்
மோதவோ ஆளுண்டா மன்றம்.
(பத்துநிமிடம் :: ) தவறு இருக்காது என்றே நினைக்கிறேன்,. கடைசி சீரில்தான் எனக்கு சந்தேகம்... பா அறிந்த பாவலர்கள் திருத்துவார்கள் என்று நினைக்கிறேன்....
------------------------------------------------------------
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஜாம்பவான்கள் புகுந்து விளையாடுகிறார்களே.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
அய்யோ!! யாரைச் சொல்லுகிறீர்கள்??? நானா?/
கிடையாதுங்க...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
மோகன்... நீங்கள் சொன்ன ஐந்தாம் நிமிடம்... அடுத்த குறள்வெண்பா தயார்....
மோகன் எழுதுவதெல் லாம்சரி - நீயுமிங்கே
தேகஞ் சிலிர்க்கக் கேள்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஷீநிசி அவர்கள் கேட்க பாரதி அண்ணா கொடுக்க ச்ரீராம் அவர்கள் சேர ஆதவா அவர்கள் பாட்டு எழுத . கலக்குறாங்க எல்லாரும். கைதட்ட நான் இருக்கேன்.
பார்த்திபன் நண்பரே! நீங்கள் எழுதிய வற்றுக்கு
பார்புகழும் நன்றி இதோ!!
இதுவும் வெண்பாதான்...தவறு இருந்தால் மன்னிக்க..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நன்றி ஆதவா.. நான் எழுதியதில் தவறு இருக்கும் என்று 100% தெரிந்ததே...
கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்.. பா கவிஞர்களே கற்றுத்தாருங்கள்.. நானும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. விரைவில் இலக்கணங்களை தருகிறேன்...
நண்பர் ஸ்ரீராம் அவர்களெ, தொடர்ந்து தாருங்கள் உங்கள் விளக்கங்களையும்..
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
அதுக்குள்ள ஒரு வெண்பாவா ஆதவா?அதிச்ய திறமைசாலி நீங்களய்யா.
வணங்குகிறேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks