கடைசி வரியில் மற்றும் தளை தட்டுவதாய் ஒரு சம்சயம் :-)
அதாவது வெண்பாவின் ஈற்றடி மூன்று சீராய் ஒருப்பினும் அந்த
மூன்றாவது சீர் ஓரசையாய் முடியுமாறு இருப்பது அவசியம்.அந்த ஓரசையும் நாள்,மலர்,காசு பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் இருப்பது அதைப் போல் முக்கியம்.அதே போல் கொஞ்சம் எகனை மொகனையாகவும் இருத்தல் நன்று இப்போது உங்கள் ஈற்றடியைச் சற்றே
தட்டி திருத்திப் பார்ப்போம்.
கவிதா கவிதா எனக்கேட்டே தந்தார்
கவிபல, நானும் எடுத்து எழுதினேன்
ஓர்கவி யிங்கே சரியா தவறாசொல்
பாரண்ணே தம்பியின் பாட்டு
ஓர்கவி என்பதற்கு பாரண்ணே எதுகையாய்
பாரண்ணே என்பதற்கு பாட்டு மொகனையாய்..
கடைசி சீர் காசு வாய்ப்பட்டின் கீழ்
Bookmarks