அபாரம் ஆதவா.. அருமை பொருளும் இலக்கணமும்..
கவீ பார்த்தால் மிக மகிழ்வார்!
அபாரம் ஆதவா.. அருமை பொருளும் இலக்கணமும்..
கவீ பார்த்தால் மிக மகிழ்வார்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
தளை, சரியாக இருக்கிறதா அண்ணா!?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அண்ணா! இருப்பினும் நானே இதை அலகிட்டு சொல்லிவிடுகிறேன்.. நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
---------------------------------------------------
பா: வெண்பா (அளவடி)
தளைகள் : இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை
விளக்கமாக : மாமுன் நிரை , காய்முன்நேர், விளமுன்நேர்
கவிதா - நிரைநேர் - புளிமா - மாமுன்நிரை வந்த
கவிதா - நிரைநேர் - புளிமா -மாமுன்நிரை வந்த
எனக்கேட்டே - நிரைநேர்நேர்- புளிமாங்காய் - காய்முன்நேர்வந்த
தந்தார் - நேர்நேர் - தேமா - மாமுன்நிரை வந்த
கவிபல - நிரைநிரை - கருவிளம் - விளமுன்நேர் வந்த
நானும் - நேர்நேர் - தேமா - மாமுன்நிரைவந்த
எடுத்து - நிரைநேர் - புளிமா - மாமுன்நிரை வந்த
எழுதினேன் - நிரைநேர்நேர் - காய்முன்நேர்வந்த
ஓர்கவி - நேர்நிரை - கூவிளம் - விளமுன்நேர்வந்த
யிங்கே - நேர்நேர் - தேமா- மாமுன்நிரைவந்த
சரியா - நிரைநேர் -புளிமா - மாமுன்நிரைவந்த
தவறா? - நிரைநேர் - புளீமா - மாமுன்நிரை வந்த
விழிமுழிக் - நிரைநிரை - கருவிளம் - விளமுன்நேர்வந்த
கின்றேனே - நேர்நேர்நேர் - புளிமாங்காய் - காய்முன்நேர் வந்த
அண்ணே - நேர்-பு
-------------------------------------------------
வெண்பாவில் அதிகமாக மாச்சீர்களே வரும்.. காய்ச்சீர்கள் குறைந்தே வரும்..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நன்றி இளசு அண்ணா.. மிகச்சிரமமான பணி. உங்கள் தீரா தமிழ் ஆர்வத்தினைக்கண்டு வியப்பில் நான்.கவிதாவின் இச்சாதனைப்பதிவுக்கு வாழ்த்தும் பாராட்டும் நன்றியும்..
பாவகைகள் பற்றிய கவிதாவின் கட்டுரைகளை தனித்திரியாய்த் தருவேன்..
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
வெண்பா புனைந்த ஆதவாவிற்கு என் மகிழ்ச்சிகள்.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
மரபுக்கவிதை எழுதுவது எப்படி?
இது என்னானு தெரிய எனக்கு ரொம்ப காலம் ஆகலாம். அருமையான திரி.
ஜாம்பவான்கள் கலக்குகிறார்கள். பரிட்சை முடிந்து வந்து படித்து அறிந்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
தமிழ்...தமிழ்... சுவையோ சுவை.. அப்படி ஒரு இனிப்பு படிக்கும் போது. தமிழ் இலக்கணம் இருக்கின்றதே அட அட. என்ன ஒரு விளக்கம்..
பின்னிட்டீங்க...பின்னி... தமிழை தமிழால்..
:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே
http://thangavelmanickadevar.blogspot.com/
இந்தப்பதிவை கொஞ்சம் மெதுவாக படிக்கவேண்டும். அப்பொழுதுதான் புரிந்துகொள்ளமுடியும் போலிருக்கிறது. பல விஷயங்களை படிக்கும் காலத்தில் கோட்டை விட்டிருக்கிறேன் என்று இன்று தெரிகிறது. இதைப் படித்தாவது கொஞ்சம் தெரிந்துகொள்கிறேன்.
நன்றி அனைவருக்கும்.
தேவைப்படும் பக்கங்களை ப்ரின்ட் செய்ய முடியவில்லை. என்ன செய்வது
இப்போதான் மன்றத்தில் நுளைந்து தமிழ் படிக்கின்றேன்,கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் படிக்கின்றேன் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு என் பதிவுகளைத்தொடர்கின்றேன்.
நன்றி
பூஜா
நன்றி கவிதா..
மிகவும் நல்ல மரபுக் கவி எழுத நல்ல தொடர்..
என் நன்றி
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks