Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 44 of 44

Thread: அப்பாயணம்

                  
   
   
  1. #37
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    தந்தை மகர் காற்றும் உதவி எனும் குறளும் மகன் தந்தை கற்றும் உதவி எனும் குறளையும் நினைவ கொள்ள வைத்த அருமையான (க) விதைகள்.
    அப்பாயணம் எழுதிய கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  2. #38
    இளம் புயல்
    Join Date
    09 Apr 2007
    Posts
    151
    Post Thanks / Like
    iCash Credits
    11,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    அப்பாயணம்


    நீ எனக்கு வாங்கித் தந்த
    இனிப்புகளை விட
    புத்தகங்களே அதிகம்

    "உன் குழந்தையை அடிக்கும்போது
    ஒரு புகைப்படம் எடுக்கச்சொல்லிப் பார்"
    ரஸ்ஸல் படித்து நீ எழுதியது பழைய டைரியில்
    அப்படி ஒரு படமே இல்லை உன் வாழ்க்கை டைரியில்

    "இளந்தோள்.... முதிய தலை "
    பத்துவயதில் நீ தந்த பாராட்டுப்பத்திரம்
    இன்றும் பொக்கிஷமாய் என் நெஞ்சில் அது பத்திரம்

    தோளுக்கு மேல் வளரும் முன்னே
    உன் தோள்மேல் ஏறி திருவிழா பார்த்தபோதே
    தோழனாய் ஏற்றுக் கொண்டாய்

    "மனிதன் செய்யும் தவறுகள் எல்லாமே
    மன்னிக்கப்படக் கூடியவை.
    அதை
    மறைக்கச் செய்யும் முறைகளும் வழிகளும் அல்ல"
    சொல்லித் தந்த குரு நீ....

    எரவாணப் புத்தகங்கள்
    ஏ படங்கள்
    திருட்டு தம்
    இருட்டுப் பிசையல்.....
    மன்னித்தாய்
    மனதால் நீயும் தாய்
    மறைக்க வேண்டிய சூழல் வராமல்
    மானம் காத்தாய்

    நீ சொல்லிக் கற்றதைவிட
    உன்னைப் பார்த்துக் கற்றது அதிகம்

    இன்றும் கற்கிறாய்
    ஆறு மாதம் கழித்துப் பார்க்கும்
    ஆசை மகனிடம் நீ கேட்டது
    "தொல்காப்பியப் பூங்கா"

    என்னைப் பெற்றது பெருமை என்பாய்
    இல்லை அப்பா
    உனக்குப் பிறந்தது
    நான் வாங்கி வந்த வரம்


    முடிக்க முடியவில்லை........
    இது கவிதை இல்லை தெய்வ வாக்கு, மனதை நெகிழவைக்கிறது

  3. #39
    இளம் புயல்
    Join Date
    09 Apr 2007
    Posts
    151
    Post Thanks / Like
    iCash Credits
    11,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    உண்மைதான் பொருளீட்டி நம் தேவைகளை நிறைவேற்றும் அப்பாக்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய அன்பைக் கொடுத்திருக்கிறோமா என அவ்வப்பொழுது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இளசு அண்ணா, பூமகள் உங்கள் தாயுமானவருக்கு நீங்கள் அளித்த பாராட்டுப் பத்திரம். இத்தகைய மகவுகளைப் பெற அந்த தகப்பன்சாமிக்கள் என்ன தவம் செய்தனரோ?
    எனக்கும் என் தந்தைக்கும் அப்படி ஒரு பிணைப்புதான் இருக்கிறது என்பதில் என் மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே விடுதிகளில் வளர்ந்ததால் என் அன்னையை விட தந்தை என்ற என் தோழனிடம்தான் என் மனப் பகிர்தல் அதிகமாக இருக்கின்றது.

    எளிய சொல்லாடலுடன், அடி மன உணர்வுகளைத் தூண்டி விட்ட இளசு அண்ணா படைத்த இக்கவியை மேலெழுப்பிய பாரதி அண்ணாவிற்கு நன்றி.
    கவிதை படித்ததோடு மட்டுமில்லாமல் அதே உந்துதலில் பூவப்பாயணம் படைத்த பூமகளின் புதுக்காவியத்திற்கு பாராட்டுக்கள்.
    உண்மை தான் அதனால் தான் நம் பெற்றோர்களுக்கு மதிபளிப்பதோடு. குறிப்பாக வயதான காலத்தில் அருகில் இருந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவமும் நல்ல நேரத்தோடு உணவும் தந்துஅன்பான வார்த்தைகளை கூறி நாம் தாய் தந்தையர்களை கவனித்துக்கொண்டால். அவர்கள் மறைவிற்கு பிறகும் நாம் குற்றவுணர்வு இல்லாமல் மனநிறைவோடு சந்தோசமாக வாழாலாம்

  4. #40
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0
    மிகவும் அருமை
    Last edited by அமரன்; 22-03-2010 at 09:52 PM.

  5. #41
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அப்பாயணம் படித்து நெகிழ்ந்தேன். ஆண்பிள்ளைகளுக்கு அப்பாக்கள்தான் உதாரணபுருஷர்கள். உங்களைப் பெற்றதற்காய் உங்கள் தந்தை மிகவும் பெருமைப்படுவார். மனதில் நினைத்தாலும் எத்தனைப் பேர் மனம்விட்டு சொல்கிறோம், அவரிடம்?

    ஏன் இப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லை, இளசு அவர்களே? தொடருங்களேன், நாங்கள் களிக்க!

  6. #42
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    மிகவும் அழகான கவிதை, வாழ்த்துக்கள் இளசு.
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  7. #43
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    அப்பாவுக்காக மகன் எழுதிய கவிதை நன்று.

  8. #44
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    அப்பாவை உயர்த்துவதற்காக மகனின் சித்தரிப்பு மாற்றுக் குறைந்துவிட்டதோ என ஒரு எண்ணம் எழாமலில்லை..

    இப்படிப்பட்ட ஒரு மேன்மையாளரால் வளர்க்கப்பட்டவன் எப்படி திருட்டு தம், இருட்டுப் பிசையல்..?

    சிந்தித்து எழுதுவதற்கும், உணர்ந்து எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு நெருடுகிறது..

    சாரி அண்ணா.. கோபமில்லைதானே..?
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •