அருமையான தத்துவத்தை கூறியுள்ளது உங்கள் கதை ராஜா!. உண்மையில் பல வேளைகளில் சிறுவர்களது பெரிய மனது பெரியவர்களைத் தலை குணியத் தான் வைக்கின்றது.
அருமையான தத்துவத்தை கூறியுள்ளது உங்கள் கதை ராஜா!. உண்மையில் பல வேளைகளில் சிறுவர்களது பெரிய மனது பெரியவர்களைத் தலை குணியத் தான் வைக்கின்றது.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இது ஒரு நல்ல படிப்பினைக் கதை.... நன்றி ராஜா அவர்களே....
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று"
என்று கவியரசர் அன்றே கூறியுள்ளாரே
தமிழபிமானி
ஜெ.காயத்ரி.
ஏன் அறிஞரை வம்புக்கிழுக்கீறீங்க. கோபமான ஆசிரியர்களுக்கு மிக பொருத்தம். கதை சூப்பர்.
மிகவும் அருமையான கதை. பல வேளைகளில் சின்னவங்களுக்கு இருக்கும் பெருந்தன்மை பெரியவங்களுக்கு இருப்பதில்லை.
கதையில் முழுசாக மூழ்கிவிட்டிருந்தபோது நம்ம அறிஞ்சருக்கு மொட்டை சமாச்சாரம் பகீர் சிரிப்பை வரவழைத்துவிட்டது... பின்னர் மீண்டும் கதைக்குள் சென்றால் இறுதியில் சுபம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று
அன்பே கடவுள்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
பெரியண்ணா சொன்னது போல.. கதையின் இறுதி படிக்கையில்.. கடைவிழியில்.. கண்ணீர் ததும்பியதை தடுக்க இயலவில்லை..
கமலா மிஸ்ஸின் கைவிரல் பதிந்த சதீஷ் குட்டியின் கன்னம்.. அதே பெயருடைய கமலா மிஸ்ஸினால் எல்.கே.ஜியில் அடி வாங்கி விரல் பதிந்த எனது கன்னத்தை நினைவூட்டியது..
ஆகையால்.. சதீஷின் மனதை உள்வாங்க முடிந்தது..
தமிழ் மன்ற அறிஞர் அண்ணாவை இழுத்தது... வெடிச் சிரிப்பை உண்டாக்கியது... ரசித்தேன்..
"கமலா மிஸ் டவுன் டவுன்" என்று மனதுக்குள் பொறுமிய நாட்கள் அதிகம்.... இக்கதையை அப்போதே அவர்கள் படித்திருந்தால்.. நானும்.. சதீஷ் போன்ற பலரும் அடி வாங்காம இருந்திருப்போமே.. அதனால்..செல்லமாக.. ராஜா அண்ணா மேல் கோபம்....
அசத்திட்டீங்க.. ராஜா அண்ணா.. பாராட்டுகள்..!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks