Page 3 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 25 to 36 of 82

Thread: தமிழ், இலக்கண சந்தேகம்.

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    செல்வனின் பாடம் அருமை... மோகன் சாரின் இலக்கண கவனிப்பு அருமை.. ஆதவா அடிக்கடி வந்து எட்டிப்பாருப்பா.... நீயெல்லாம் செய்யுள் கவிதையில கலக்கறவரு.. இலக்கணமும் கொஞ்சம் சொல்லிக்குடுப்பா..

    இளசு அவர்களே!

    திருவள்ளுவரின் எழுதிய குறள்கள் எத்தனை என்றுதானே கேட்கிறோம்?

    அதாவது குறள் - ஒருமை, குறள்கள் - பன்மை...

    அதேப்போல பொருள் - ஒருமை, பொருள்கள் - பன்மை..

    பொருள்கள் என்பதுதானே சரி..

    'ள்+ப' சேரும் இடத்தில்தானே 'ட்' உதிக்கும்..

    உதா. திருவருள்+பாடல்கள் - திருவருட்பாக்கள்..

    என் கூற்று சரியா?
    Last edited by ஷீ-நிசி; 05-04-2007 at 03:48 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #26
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    செல்வனின் பாடம் அருமை... மோகன் சாரின் இலக்கண கவனிப்பு அருமை.. ஆதவா அடிக்கடி வந்து எட்டிப்பாருப்பா.... நீயெல்லாம் செய்யுள் கவிதையில கலக்கறவரு.. இலக்கணமும் கொஞ்சம் சொல்லிக்குடுப்பா..

    இளசு அவர்களே!

    திருவள்ளுவரின் எழுதிய குறள்கள் எத்தனை என்றுதானே கேட்கிறோம்?

    அதாவது குறள் - ஒருமை, குறள்கள் - பன்மை...

    அதேப்போல பொருள் - ஒருமை, பொருள்கள் - பன்மை..

    பொருள்கள் என்பதுதானே சரி..

    'ள்+ப' சேரும் இடத்தில்தானே 'ட்' உதிக்கும்..

    உதா. திருவருள்+பாடல்கள் - திருவருட்பாக்கள்..

    என் கூற்று சரியா?
    நிசி, அப்படியென்றால், தங்கட்கு என்ற பதத்திற்கு விளக்கம் அளியுங்கள்...

    phrase என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ்ப் பதம் என்ன?
    Last edited by gayathri.jagannathan; 05-04-2007 at 05:28 AM.
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பாடம் அருமையாக போகுது.. நானும் கற்றுக்கொள்ளலாம் போல...

    இதில் வரும் சொற்களை தொகுத்து கடைசியில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    அறுமை - தவறு
    அருமை - சரி...

  4. #28
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by gayathri.jagannathan View Post
    நிசி, அப்படியென்றால், தங்கட்கு என்ற பதத்திற்கு விளக்கம் அளியுங்கள்...
    தங்கட்கு என்றும் பாவிப்பார்கள் - தங்களிற்கு என்றும் பாவிக்கின்றோம். இதில் எது சரி?
    இரண்டும் சரி தானா?

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    தங்கட்கு என்ற வார்த்தை சரியாக இருப்பதாக படவில்லை.. தங்களுக்கு என்பதே சரி... தங்கட்கு என்ற வார்த்தை எங்கு பயன்படுகிறது?
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    தங்கட்கு என்ற வார்த்தை சரியாக இருப்பதாக படவில்லை.. தங்களுக்கு என்பதே சரி... தங்கட்கு என்ற வார்த்தை எங்கு பயன்படுகிறது?
    கவிதைகளில் கண்டுள்ளதாக ஞாபகம். ஆனால் அது சரியானதோ தெரியவில்லை.

    தங்களுக்கு என்பது சரிதான், நான் தங்களிற்கு என்றும் பாவிக்கின்றேன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வாழ்த்துக்கள் என்பதா வாழ்த்துகள் என்பதா சரியானது..????

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    வாழ்த்துக்கள் என்பதா வாழ்த்துகள் என்பதா சரியானது..????
    வாழ்த்துகள் என்பது சரி என்று நினைக்கிறேன்....

    வாழ்த்து - ஒருமை பன்மை வார்த்தையான கள்" சேரும் போது ஒற்று அளபெடுக்காது என்பது பல வார்த்தைகளைக் கண்டு நானறிந்தவை.....
    உதாரணம்

    துகள் - துகள்கள்
    வார்த்தை - வார்த்தைகள்

    சில வரும் வார்த்தையான க" கர வரிசைப்படி ஒற்று உருவாகும்... உதாரணம்

    நெஞ்சம் - நெஞ்சங்கள் (கவனிக்க, இறுதியெழுத்து மகரம் என்றால் பன்மை வார்த்தைக்கான ஒற்று "ங்" ஆகவே வருகிறது...)

    சில திரிந்து போவதுமுண்டு இல்லையா?

    நாள் - நாட்கள்.
    வாள் - வாட்கள்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #33
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஞா.தேவநேயப்பாவாணரின் நூலில் இருந்து:

    ண்,ம்,ல்,ள்,ன் என்ற மெய்கள் வல்லினத்தோடு புணரின், இரு வழியிலும் பெரும்பாலும் பின்வருமாறு திரியும்.

    எழுத்து திரிவு எடுத்துக்காட்டு

    ண் ட் மண்+கலம்=மட்கலம்

    ம் ங் மரம்+குறிது = மரங்குறிது
    ம் ஞ் மரம்+சிறிது = மரஞ்சிறிது
    ம் ந் மரம்+தழைக்கும் = மரந்தழைக்கும்

    ல் ற் கல்+பலகை = கற்பலகை

    ள் ட் கள்+குடம் = கட்குடம்

    ன் ற் பொன்+பணி = பொற்பணி


    ண், ள் என்னும் மெய்கள் 'த'கரத்தோடு புணர்ந்து 'ட'கரமாகும் போது, அத்'த'கரமும் 'ட'கரமாகும்.

    எடுத்துக்காட்டு:

    மண்+தாழி = மட்டாழி, மண்டாழி
    முள்+தாழை = முட்டாழை

    (மட்தாழி,முட்தாழை என எழுதுவது தவறு.)

    ல், ன் என்னும் மெய்கள் 'த'கரத்தோடு புணர்ந்து 'ற'கரமாகும் போது, அத்'த'கரமும் 'ற'கரமாகும்.

    எடுத்துக்காட்டு:

    கல்+தாழை = கற்றாழை
    பொன்+தோடு = பொற்றோடு

    'ந'கரம் ண்,ள் என்ற மெய்களுக்குப் பின்வரின் 'ண'கரமாகவும், ன்,ல் என்ற மெய்களுக்குப் பின்வரும் 'ன'கரமாகவும் இரு வழியிலும் திரியும்.

    'ள'கரத்தோடு புணர்ந்து 'ந'கரம் 'ண'கரமாகும் போது அவ்'ள'கரமும் 'ண'கரமாகும்.

    'ல'கரத்தோடு புணர்ந்து 'ந'கரம் 'ன'கரமாகும் போது அவ்'ல'கரமும் 'ன'கரமாகும்.

    எடுத்துக்காட்டு:

    கண்+நீர் = கண்ணீர் (ண்+ந=ண்ண)
    கள்+நீர் = கண்ணீர் (ள்+ந=ண்ண)
    பொன்+நகை = பொன்னகை (ன்+ந=ன்ன)
    கல்+நகை = கன்னகை (ல்+ந=ன்ன)

    'தங்கட்கு' என்பதும் 'வாழ்த்துகள்' என்பதும் சரி என்று தோன்றுகிறது.
    Last edited by பாரதி; 22-09-2007 at 07:44 AM. Reason: இடமாற்றம்

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆமாம் பாரதி அண்ணா தங்கட்கு என்பது தாங்கள் குறிப்பிட்ட முறையிலே பார்கும் போது சரியாகவே தோன்றுகின்றது. ஆனால் இந்த வாழ்த்துக்கள் தான் கொஞ்சம் குழப்புகிறது.

    விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா!
    Last edited by ஓவியன்; 22-09-2007 at 07:47 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நான் முன்பு எப்பவோ படித்தது இது...

    இரண்டு சொற்கள் புணரும் போது...

    1. புதிய எழுத்து உருவாகலாம்
    2. உள்ள எழுத்துக்களில் எதாவது கெட்டு இல்லாமற் போகலாம்
    3. இரு எழுத்துக்கள் விகாரமடைந்து புதிய எழுத்து உருவாகலாம்


    இங்கே
    தங்கட்கு என்பது விகாரப் புணர்ச்சி என்று நினைக்கின்றேன்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மரம்+கலம்=மரக்கலம்(?) என்றுதானே வருகிறது..அப்படி ஏதாவது ஒரு முறையில் வாழ்த்துக்கள் வரலாமல்லவா?

Page 3 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •