Page 6 of 7 FirstFirst ... 2 3 4 5 6 7 LastLast
Results 61 to 72 of 82

Thread: தமிழ், இலக்கண சந்தேகம்.

                  
   
   
  1. #61
    இளம் புயல் பண்பட்டவர் என்னவன் விஜய்'s Avatar
    Join Date
    16 Sep 2007
    Location
    ஐக்கிய இராட்சியம்
    Posts
    398
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    2
    Uploads
    0
    நான் கேட்பது என்னவென்றால் அ வை சொல்லிப்பாறுங்கள் அது ன வில் முடியும் . இவ்வாறே எல்ல எழுத்துக்களும் ன விலே முடியும் அது ஏன்?
    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
    பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!

  2. #62
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5

    எத்துனையா ? எத்துணையா?

    பொறுப்பாளர்கட்கு: இதைத் தனியாக தொடங்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இவ்விடயத்திற்கு பொருத்தமான திரி இல்லை. நீங்கள் மற்ற ஏதேனும் திரி ஒன்றினை ஒத்த விடயமாக இதைக் கருதுகின்றீர்கள் என்றால் தயவு செய்து அத்திரியுடன் சேர்த்து விடவும்.

    அன்பு நண்பர்களே!

    எனக்கு நீண்ட நாட்களாக உள்ள ஐயம் இது. எண்ணிக்கையில் அடங்கக்கூடிய பெயர்ச்சொல் (countable nouns)பற்றிய ஐயம் இது.
    எண்ணி(எண்ணிக்கை) விட முடியும் ஒன்றை எத்துனை? இத்தனை என்று சொல்வதா அல்லது எத்துணை, இத்துணை என்று சொல்வதா?
    எத்துணை, இத்துணை என்று சொல்வதுதான் சரியெனப் படித்த நினைவு! எத்னை, இத்னை என்பவை தூய தமிழ் சொற்களா? இத்துணை என்பதன் திரிபுதான் இத்தனை என நான் நினைக்கிறேன். விளக்கம் கூறி என் ஐயம் போக்குங்களேன்.

    எண்ண(எண்ணிக்கை) முடியாத பெயர்ச்சொல்கள் (non countable nouns): இவ்வளவு, எவ்வளவு

    எனக்கு நீண்ட நாட்களாக உள்ள ஐயம் இது. எண்ணிக்கையில் அடங்கக்கூடிய பெயர்ச்சொல் (countable nouns)பற்றிய ஐயம் இது.
    எண்ணி(எண்ணிக்கை) விட முடியும் ஒன்றை எத்துனை? இத்தனை என்று சொல்வதா அல்லது எத்துணை, இத்துணை என்று சொல்வதா?
    எத்துணை, இத்துணை என்று சொல்வதுதான் சரியெனப் படித்த நினைவு! எத்னை, இத்னை என்பவை தூய தமிழ் சொற்களா? இத்துணை என்பதன் திரிபுதான் இத்தனை என நான் நினைக்கிறேன். விளக்கம் கூறி என் ஐயம் போக்குங்களேன்.

    எண்ண(எண்ணிக்கை) முடியாத பெயர்ச்சொல்கள் (non countable nouns): இவ்வளவு, எவ்வளவு
    Last edited by mukilan; 17-07-2008 at 01:13 PM.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  3. #63
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    15 Feb 2008
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    1
    Uploads
    0
    இத்தனை என்பது எமது கணிப்புக்கு, எண்ணிக்கைக்குள் அடங்கக்கூடீயது. (உ+ம் - இத்தனை தான் எனக்குக் கிடைத்தது. அதாவது குறிப்பிட்டளவு). எத்தனை எண்பது எண்ணிலடங்காதது(உ+ம் - எத்தனை அழகு. இது அளவிடமுடியாதது).
    இதுவே நடைமுறை வழக்கிலுள்ளது. இது என் கருத்து மட்டுமே.

    'தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்'

  4. #64
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    ஒரு பொருள் தொடர்பான வீச்சு, அல்லது எண்ணிக்கையை அறிந்து கொள்ள பயன்படும் வார்த்தை தான் எத்துனை அல்லது எத்தனை என்பது. எத்தனை என்ற சொல் காலப்போக்கில் மருவி எத்துனை என்றாகியிருக்கலாம் என்பது கருத்து. எத்தனை என்பதை விட எத்துனை என்றெழுதுவது சுத்தமான தமிழ் என்ற பார்வை நம்மிடையே இருக்கிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து அறிந்தவர்கள் சொல்லட்டும். ஆனால், எத்தனை என்பது மருவிய பின் வந்த எத்துனை அல்லது எத்துணை ஆகிய இரண்டில் எத்துனை என்பது தான் சரியான வார்த்தையாக எனக்கு சரியாக படுகிறது. காரணம், எத்துனையின் மூலம் எத்தனை என்ற சொல் என்பதால் தான்..!
    அன்புடன்,
    இதயம்

  5. #65
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்
    இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை
    எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே

    முத்தனைய முறுவல்செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே

    - நாலாயிர திவ்யபிரபந்தம்

    எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
    துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்தும்
    சொல்வன்மை யின்றெனி னென்னாகு மஃதுண்டேற்
    பொன்மலர் நாற்ற முடைத்து.

    - நீதி நெறி

    எத்தனையும் எத்துணையும் தான் சரியான வார்த்தைகள்
    அன்புடன் ஆதி



  6. #66
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அன்பு முகில்ஸ்..
    உங்கள் சந்தேக நிவர்த்திக்கு ஏற்ற திரி கண்ணில் எத்துப்படவில்லை. எத்துப்பட்ட தமிழிலக்கண சந்தேகத்திரியை தமிழ், இலக்கணச் சந்தேகத்திரியாக்கி உங்கள் சந்தேகத்தையும் சேர்த்துள்ளேன். இனிவருங்காலங்களில் தமிழ்மொழி தொடர்பான எல்லா சந்தேகங்களையும் இங்கே கேட்போம்.

  7. #67
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    இதயம் உங்களின் விளக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி!

    சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி விளக்கிய ஆதி! உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எத்தனையும், எத்துணையும், இத்தனையும்- ஆக இம்மூன்றுமே சரியா? எனக்கு "ன'கர "ண' கர வேறுபாடு மட்டும் இன்னமும் சிறிது குழப்புகிறது.

    பாசம், உங்கள் உதவிக்கும் என் நன்றி.
    எண்ணிக்கையில் அடங்கக்கூடிய ஒன்றை எத்தனை என்று கேட்கலாம். அதற்கு இத்தனை என்ற பதில் வரும். இவ்விருவார்த்தைகளையும் ஆச்சர்ய உணர்ச்சியில் வரும் பதங்களாகவும் பயன் படுத்தலாம்.
    எத்தனை பழங்கள்?(How many)- வினா
    இத்தனை பழங்கள்- விடை
    இத்துனை பழங்களா! -ஆச்சர்யம்
    எத்தனையோ கோடி! இதில் கவனிக்க உட்கார்ந்து எண்ணினால் எண்ணிவிடலாம். ஆனால் சரிவரத் தெரியாது என்பதால் எத்தனையோ கோடி? எனக் குறிப்பிடலாம்.

    எவ்வளவு என்பது எண்ணிக்கையில் அடங்கா பொருட்கள் (How much). இவ்வளவு என்பது பதில். இவ்வளவா! என்பது ஆச்சர்யம். எவ்வளவோ என்பது விடை உறுதியாக தெரியாத நிலை.

    இது பொறுத்தமான திரிதான் அமரன். என் கண்ணுக்கு முதலில் படவில்லை. ஆனாலும் மன்றத்தில் இது போன்ற விடயங்கள் நிச்சயம் அலசப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில்தான் நான் முதலிலேயே பொருப்பாளர்கட்கு குறிப்பு இட்டேன். உங்கள் உதவிக்கு என் நன்றி.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  8. #68
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    குணமதி அவர்களின்
    தனக்குப் பிறந்த போது...!
    திரி, இந்தத் திரியைத் தூண்டிவிட்டது.

    Quote Originally Posted by அக்னி View Post
    சமயம், விடயம், புடவை, கட்டடம்...
    இப்படியான சொற்களில் சிறுகுழப்பம் இருந்து கொண்டேயிருப்பதுண்டு.
    இச்சொற்கள் தொடர்பாக ஆராய வாருங்களேன் உறவுகளே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #69
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    புடைசூழ இருப்பது, புடைவை -- புடவை.
    புழைக்கடை -- புழக்கடை,
    உடைமை -- உடமை (பொதுவுடமை).
    தகைமை -- தகமை.
    எதையும் குழைத்துச் சட்னியாக்கும் கல்: குழைவி > குழவி.
    தமையன் -- தமயன்
    சினைப்பு -- சினப்பு (வியர்க்குரு)
    சமையம் -- சமயம்
    வளைவு -- வளவு

    நன்றி: சந்தவசந்தம் மடலாடற்குழு.

  10. #70
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கட்டடம் என்பது தொழிற்பெயர்; கட்டிடம் என்பது இடப்பெயர்; பொருளை மாறிப் பயன்படுத்தக் கூடாது. கட்டிடத்தின் மேல் கட்டடம் நிற்கிறது. அடம் என்பது அடுக்குதல் என்ற வினையில் கிளர்ந்த ஓர் ஈறு. கட்டுதல் என்பது சேர்த்தல்; கட்டி அடுக்குவது கட்டடம். குடில், குடிசை, மாளிகை, கோயில், அரண்மனை என எல்லாமே கட்டி அடுக்குவது தான்.

    நன்றி : இராம.கி ஐயா

  11. #71
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    தமிழ் இணையம் என்ற விதயத்தை (ஏதேனும் ஒன்றை விதந்து பேசினால் அது விதயம்; விதயம் வடமொழியில் விஷயம் என்று ஆகும். நம்முடைய மூலம் தெரியாமல் நாம் அதை விடயம் என்று எழுதிக் கொண்டு இருக்கிறோம். இனிமேலாவது மாற்றிக் கொள்ளுவோமா?)

    நன்றி : இராம. கி ஐயா

  12. #72
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஆனால்,
    இவை எல்லாவற்றையும் எல்லோரும் (எல்லோருமா... எல்லாருமா...) பயன்படுத்த வைப்பது சாத்தியம்தானா...

    அண்மையில்,
    ஒரு வாழ்த்துச் சுவரொட்டிக்காக,
    ‘பிறந்ததின வாழ்த்துகள்’
    என்றெழுதியிருந்தேன். அது சரியென விளக்கம் சொல்லியே போதுமென்றாகிவிட்டது.
    இத்திரியை இன்று சுற்றிவருகையில், சாம்பவி அவர்களின் விளக்கத்தை மீளவும் காண,
    இப்போது,
    வாழ்த்துகள் - வாழ்த்துக்கள்
    எது சரியென்பதில் மீளவும் குழப்பம்.

    இனிதான சிக்கல் மொழியா
    நம் மொழி...

    (அடிக்கடி இத்திரியைத் தூண்டி விடுங்கள் அண்ணா.)

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 6 of 7 FirstFirst ... 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •