Page 7 of 7 FirstFirst ... 3 4 5 6 7
Results 73 to 82 of 82

Thread: தமிழ், இலக்கண சந்தேகம்.

                  
   
   
  1. #73
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by சாம்பவி View Post
    அந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள்
    விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ்.
    ஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..!

    இன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பன்மை..? பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... ?

    தமிழ்த் தாய் வாழ்த்து
    .
    Quote Originally Posted by அக்னி View Post
    அண்மையில்,
    ஒரு வாழ்த்துச் சுவரொட்டிக்காக,
    பிறந்ததின வாழ்த்துகள்’
    என்றெழுதியிருந்தேன். அது சரியென விளக்கம் சொல்லியே போதுமென்றாகிவிட்டது.
    இத்திரியை இன்று சுற்றிவருகையில், சாம்பவி அவர்களின் விளக்கத்தை மீளவும் காண,
    இப்போது,
    வாழ்த்துகள் - வாழ்த்துக்கள்
    எது சரியென்பதில் மீளவும் குழப்பம்.
    முதலில் ஒருவரை மட்டும் வாழ்த்துவதெனில் "வாழ்த்து" என்று மட்டுமே கூற வேண்டும். ஒருவருக்கு எனில் வாழ்த்துக்கள் / நன்றிகள் என்று கூறக்கூடாதென்பது சாம்பவியின் பின்னூட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

    இருவருக்கு மேற்பட்டவர்களுக்கு என்றால் வாழ்த்துக்கள் என்று கூற வேண்டும்.

  2. #74
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இருவருக்காகச் செய்யப்பட்ட சுவரொட்டி அது...

    எழுதும்போதே,
    ‘வாழ்த்துகள்’ தான் சரியான பதம் எனச் சொல்லி, எழுதியிருந்தேன்.
    அதற்கு ஒரு சிலரிடம் விளக்கமும் சொல்லியிருந்தேன்.
    இப்போது நான்தான் தவறா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #75
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by சாம்பவி View Post

    இதோ இந்த ஒற்று மிகும் சித்து விளையாட்டின் ஸுத்திரதாரி....
    "வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் ஒற்று மிகும்"

    பிரித்து எழுதும் பக்ஷத்தில்
    "வன் தொடர் குற்றியல் உகரத்தின் பின் ஒற்று மிகும்"

    வன் ==> வன்முறையில் இருக்கும் அதே வன்... வன்மையான வல்லினம் ( க, ச, ட, த, ப, ற )
    தொடர் ==> தொடருமேயானால்...
    குற்றியல் உகரம் ==> வல்லின உகரம் ( கு, சு, டு, து, பு, று )
    பின் ==> பின்னால்
    ஒற்று மிகும் ==> அடுத்து வரும் வரு மொழியின் ஒற்றானது இரட்டிக்கும்.,.

    அதாவது...
    வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து .. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.

    நலம் வாழ எந்நாளும் நல் வாழ்த்துக்கள் !!
    இவ்விதியின் படி நாம் வாழ்த்துக்கள் என்றுரைப்பதே சரியானதாகும்.

  4. #76
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆஹா.... பாரதி...


    எனக்காகவே மேலெழுப்பியதாய் எண்ணுகிறேன்..

    இனி வாழ்த்து எனச் சுருக்கி எழுதிப் பழகுகிறேன்..


    சாம்பவிக்கும், அக்னிக்கும், உனக்கும் - வாழ்த்துக்கள்!!!!!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #77
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாழ்த்துக்கள் என எழுதிக்கொண்டிருந்தவனை, ஏதோ ஒரு திரியில்(எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியல...பாரதி...எப்படிங்க டக்குன்னு தேடிப் பிடிக்கிறீங்க....) படித்துவிட்டு சமாதானமாகி, வாழ்த்துகள் என எழுதத் தொடங்கினேன்.

    இப்போது சாம்பவியின் விளக்கம்( பாதிக்குமேல் புரியவில்லையென்றாலும்...ஆத்தா சொன்னா சரியாத்தான் இருக்கும்ங்கற நம்பிக்கை) பார்த்து இனி நானும் 'வாழ்த்துக்கள்'தான்.

    சாம்பவிக்கு வாழ்த்து, அக்னி, பாரதிக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #78
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாழ்த்துக்கள் என எழுதிக்கொண்டிருந்தவனை,
    அதே அதே...
    நானும் அப்படித்தான் சிவா.ஜி...

    ‘க்’ தேவையில்லை என்று எத்தனையோ பேரிடம் வக்காலத்துவேறு வாங்கியிருக்கின்றேன் தெரியுமா..?

    அவங்கள்லாம் திரும்ப ‘க்’ போட்டு நான் எழுதறத பார்த்தாங்கன்னா...


    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    (எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியல...பாரதி...எப்படிங்க டக்குன்னு தேடிப் பிடிக்கிறீங்க....)
    இதப்பத்தி செல்வர் ஏதோ ஒரு திரியில விளக்கம் கொடுத்திருந்தாரு.

    அதையும் தேடிப் பிடிக்க முடியலீங்க...
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ( பாதிக்குமேல் புரியவில்லையென்றாலும்...ஆத்தா சொன்னா சரியாத்தான் இருக்கும்ங்கற நம்பிக்கை)
    பாதிக்குக் கீழ் புரிந்தது,
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சாம்பவிக்கு வாழ்த்து, அக்னி, பாரதிக்கு வாழ்த்துக்கள்.
    இதனைப் பார்க்கப் புரியுது.

    உங்களுக்குக் கீழ்ப் பாதியாவது புரிந்திருக்கே...

    கலைஞர் அவர்கள் இந்த வாழ்த்துப் பற்றி ஏதோ சொன்னதாக,
    எங்கேயோ பார்த்த ஞாபகம்...
    ஆனால், ஞாபகமாய் இல்லை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #79
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post

    கலைஞர் அவர்கள் இந்த வாழ்த்துப் பற்றி ஏதோ சொன்னதாக,
    எங்கேயோ பார்த்த ஞாபகம்...
    ஆனால், ஞாபகமாய் இல்லை...

    ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு....பார்த்த ஞாபகமாம்....ஞாபகம் இல்லையாம்......ஸ்....அப்பாடா.....என்னக் கொடுமை சார் இது....????
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #80
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வல்லினம் மிகா இடங்கள்:

    1. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.


    விரி+சுடர் - விரிசுடர்.
    பாய்+புலி - பாய்புலி.

    2. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

    காய்+கனி - காய்கனி.
    தாய்+தந்தை - தாய்தந்தை.

    3. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

    தமிழ்+கற்றார் - தமிழ்கற்றார்.
    கதை+சொன்னார் - கதைசொன்னார்.

    4. வியங்கோள்வினைமுற்றுக்குப்பின் வல்லினம் மிகாது.

    கற்க+கசடற - கற்ககசடற.
    வாழ்க+தமிழ் - வாழ்கதமிழ்.

    5. விளித்தொடரில் வல்லினம் மிகாது.

    அண்ணா+கேள் - அண்ணாகேள்.

    6. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப்பின் வல்லினம் மிகாது.

    அத்தனை+பழங்கள் - அத்தனைபழங்கள்
    எத்தனை+காய்கள் - எத்தனைகாய்கள்.

    7. இரட்டைக்கிளவியிலும் அடுக்குத்தொடரிலும் வல்லினம் மிகாது.

    கல+கல - கலகல
    பாம்பு+பாம்பு - பாம்புபாம்பு

    8. அவை, இவை என்னும் சுட்டுச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.

    அவை+சென்றன - அவைசென்றன.
    இவை+செய்தன -இவைசெய்தன.

    9. அது, இது என்னும் சுட்டுகளின் பின் வல்லினம் மிகாது.


    அது+பறந்தது - அதுபறந்தது.
    இது+கடித்தது - இதுகடித்தது.

    10. எது, யாது வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.


    எது+பறந்தது - எது பறந்தது?
    யாது+தந்தார் - யாது தந்தார்?

    நன்றி: கருத்து தளம்.

  9. #81
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வல்லினம் மிகும் இடங்கள்:

    1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

    இந்த+கருத்து- இந்தக்கருத்து.
    அப்படி+பேசினான் - அப்படிப்பேசினான்.

    2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகும்.

    புத்தகத்தை+படித்தான் - புத்தகத்தைப்படித்தான்.
    நண்பனுக்கு+கொடு - நண்பனுக்குக் கொடு.

    3. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின்பின் வல்லினம் மிகும்.

    படிப்பதாய்+சொன்னான் - படிப்பதாய்ச்சொன்னான்.
    போய்+சேர்ந்தான் - போய்ச்சேர்ந்தான்.

    4. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

    சால+சிறந்தது - சாலச்சிறந்தது.
    தவ+சிறிது - தவச்சிறிது.

    5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்க தொகைகளின் பின் வல்லினம் மிகும்.


    மரம்+பலகை - மரப்பலகை.
    சட்டை+துணி - சட்டைத்துணி.

    6. ஓரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின் வல்லினம் மிகும்.

    தீ+சுடர் - தீச்சுடர்.
    தை+திங்கள் - தைத்திங்கள்.

    7. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

    ஓடா+புலி -ஓடாப்புலி.
    வளையா+செங்கோல் - வளையாச்செங்கோல்.

    8. வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

    பத்து+பாட்டு - பத்துப்பாட்டு.
    எட்டு+தொகை - எட்டுத்தொகை.

    9. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.


    திரு+குறள் - திருக்குறள்.
    பொது+சொத்து - பொதுச்சொத்து.

    10. உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

    மழை+காலம் - மழைக்காலம்.
    பனி+துளி - பனித்துளி.

    நன்றி : கருத்து தளம்.

  10. #82
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    மிகப் பயனுள்ள பணியைச் செய்த பாரதிக்கு மிகுந்த பாராட்டு!

    படித்துப் பின்பற்றினால், பயனுண்டு.

    தமிழ்மன்றம் செப்பத் தமிழால் சிறக்கும்.

    நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  11. Likes neithal liked this post
Page 7 of 7 FirstFirst ... 3 4 5 6 7

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •