Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 37 to 48 of 82

Thread: தமிழ், இலக்கண சந்தேகம்.

                  
   
   
  1. #37
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அந்த முறையில் வந்தது என்று சொல்ல முடியாது அமர்....

    இங்கே மரம்+கலம் = மரக்கலம் என்பது ஒரு விகாரப் புணர்ச்சி...
    அதாவது புணர்ச்சியின் போது "ம்" என்பது விகாரமுற்று "க்" ஆக மாறுகிறது.

    ஆனால்

    வாழ்த்து + கள் என்பதை வாழ்த்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அது விகாரப் புணர்ச்சியல்ல, அங்கே புதிய ஒரு எழுத்து "க்" என தோற்றம் கொண்டுள்ளது...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஆமாம் பாரதி அண்ணா தங்கட்கு என்பது தாங்கள் குறிப்பிட்ட முறையிலே பார்கும் போது சரியாகவே தோன்றுகின்றது. ஆனால் இந்த வாழ்த்துக்கள் தான் கொஞ்சம் குழப்புகிறது.

    விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா!
    அன்பு ஓவியன்,

    விழுது+கள் = விழுதுகள்
    துகள்+கள் = துகள்கள்

    விழுதுக்கள் அல்லது துகள்க்கள் எனில் அவற்றில் இருந்து பெறப்பட்ட கள் என்பதாக பொருள்படும். ஆகவே வாழ்த்துகள் என்பதுதான் சரி. (சில வாரங்களுக்கு முன் வரை நானும் வாழ்த்துக்கள் என்றுதான் உபயோகித்து வந்தேன்.)

    விதிவிலக்காக வார்த்தைகள் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது.

  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மிக்க நன்றி அண்ணா!!

    நானும் வாழ்த்துக்கள் என்றே இதுவரை உபயோகித்து வந்தேன், இனிவரும் காலங்களில் வாழ்த்துகள் எனச் சரியாக எழுதலாம்....

    தொடர்ந்து இந்த திரியிலே இவ்வாறான சந்தேகங்களைத் தீர்ப்போம்.
    Last edited by ஓவியன்; 23-09-2007 at 09:36 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #40
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நானும் இத்தனை நாளும் "வாழ்த்துக்கள்" என்று தான் உபயோகித்தேன்.
    நன்றாக இருக்கிறது உங்கள் அனைவரின் விளக்கமும்.
    நன்றிகள் மற்றும் பாராட்டுகள்..!!
    வாழ்த்துகள் அன்பர்களே..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #41
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    59,830
    Downloads
    51
    Uploads
    112
    எனக்குத்தெரிந்தவரை, முதலில் ஒரு சொல் தோன்றி வேறொரு சொல்லை மாறுபடுத்த அதை முன்னோர்கள் இவ்வாறு பிரித்திருக்கலாம். மற்றும் அந்தக்காலங்களில் செய்யுள் தான் முழுமையாக இருந்தது, உரைநடை கிடையாது (உரையாடவாவது செய்தார்களா அல்லது அதற்கும் பாட்டு தானா என்று தெரியவில்லை).

    செய்யுளில் மாத்திரை அளவை சரி செய்வதற்கும் இவ்வாறு செய்திருக்கலாம்.

    இதெல்லாம் எனது யூகமே, இந்த பதிவை எனது தமிழ்வாத்தியார் திரு.ராசேந்திரன் அவர்கள் கண்டால் என் காது தப்பாது.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாரதியின் தொடரும் பாடப்பணிக்கு நன்றி..

    பிழைகளைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைக்க
    இத்தவணை முறை இலக்கண ஊட்டல்கள் உதவும்..

    அசோ,
    தமிழாசிரியரை வாத்தியார் என்றதற்காக
    அடுத்த காதும் தப்பாமல் சிக்கும்..

    திரு. இராசேந்திரன் கைகளுக்கு என வாழ்த்தும்
    அசோ காதுகளுக்கு கொஞ்சம் களிம்பும் அனுப்புகிறேன்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #43
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by ஆதவா View Post
    வாழ்த்துகள் என்பது சரி என்று நினைக்கிறேன்....

    வாழ்த்து - ஒருமை பன்மை வார்த்தையான கள்" சேரும் போது ஒற்று அளபெடுக்காது என்பது பல வார்த்தைகளைக் கண்டு நானறிந்தவை.....
    உதாரணம்

    துகள் - துகள்கள்
    வார்த்தை - வார்த்தைகள்

    .
    Quote Originally Posted by பாரதி View Post
    அன்பு ஓவியன்,

    விழுது+கள் = விழுதுகள்
    துகள்+கள் = துகள்கள்

    விழுதுக்கள் அல்லது துகள்க்கள் எனில் அவற்றில் இருந்து பெறப்பட்ட கள் என்பதாக பொருள்படும். ஆகவே வாழ்த்துகள் என்பதுதான் சரி. (சில வாரங்களுக்கு முன் வரை நானும் வாழ்த்துக்கள் என்றுதான் உபயோகித்து வந்தேன்.)

    விதிவிலக்காக வார்த்தைகள் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது.
    அப்படியானால்
    கள்ளை வடிக்கும் அவை
    பூகளா .. இல்லை பூக்களா..?
    கல்லை வடிக்கும் அவர்கள்
    சிற்பிகளா அல்ல சிற்பிக்களா ..?

    அது போகட்டும்..
    நீங்கள் மன்றத்து
    முத்துகளா இல்லை முத்துக்களா
    உங்கள் படைப்புகள்
    பாகளா.. ..பாக்களா.. ?
    அவை விலையில்லா
    சொத்துகளா.... சொத்துக்களா ... ?

    ஆமாம் இவைகளெள்ளம்
    எழுத்துகளா இல்லை எழுத்துக்களா
    சொல்களா....சொற்களா
    வார்த்தைகளா....வார்த்தைக்கள்ளா ?

    ஆதலால் நண்பர்களே
    வாழ்த்துக்களா....வாழ்த்துகளா ?

    குட்டையை மிகவும் குழப்பிவிட்டேனோ !! ...

    சரி சரி... விஷயத்திற்கு வருவோம்..
    இதோ இந்த ஒற்று மிகும் சித்து விளையாட்டின் ஸுத்திரதாரி....
    "வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் ஒற்று மிகும்"

    பிரித்து எழுதும் பக்ஷத்தில்
    "வன் தொடர் குற்றியல் உகரத்தின் பின் ஒற்று மிகும்"

    தெளிந்திருக்கணுமே....!! அதே அதே.. !!

    வால் மட்டும் நுழையாதவர்கட்கு.. :-
    வன் ==> வன்முறையில் இருக்கும் அதே வன்... வன்மையான வல்லினம் ( க, ச, ட, த, ப, ற )
    தொடர் ==> தொடருமேயானால்...
    குற்றியல் உகரம் ==> இது ஒரு சிறிய கதை ...இன்னொறு நாள் சொல்கிறேனே ... . இப்போதைக்கு வல்லின உகரம் அது போதும் ( கு, சு, டு, து, பு, று )
    பின் ==> பின்னால்
    ஒற்று மிகும் ==> அடுத்து வரும் வரு மொழியின் ஒற்றானது இரட்டிக்கும்.,.

    அதாவது...
    வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து .. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.

    ஆதலினால் நண்பர்களே,
    குழம்பா ரசமா ... ?

    நலம் வாழ எந்நாளும் நல் வாழ்த்துக்கள் !!

    பி.கு: அப்போ......
    ஆயிரம் தாமரை மொட்டுக்கள்
    மூச்சு விடா மொட்டுகளானது எப்படி.. ?




    .
    Last edited by சாம்பவி; 29-09-2007 at 12:25 AM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  8. #44
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சாம்பவி...
    உங்கள் விளக்கம் அருமை...
    வினாக்களை எழுப்பி அதனூடு விடை காணும் திறன்...
    பாரதி அண்ணா எம்மை இலக்கணச் செப்பனிடுகின்றார்.
    அதேபோல, நீங்களும் தொடங்கலாமே...
    வார்த்தைகளா....வார்த்தைக்கள்ளா ?
    இது கொஞ்சம் குழப்புமாப்போலிருக்குதே...
    Last edited by அக்னி; 29-09-2007 at 12:20 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #45
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by அக்னி View Post
    இது கொஞ்சம் குழப்புமாப்போலிருக்குதே...
    போச்சுடா.... குழம்பு தானா... :(

    வார்த்தையில் எங்கே இருக்கு குற்றியலுகரம்.. ?
    குற்றியல் உகரம் ==> இது ஒரு சிறிய கதை ...இன்னொறு நாள் சொல்கிறேனே ... . இப்போதைக்கு வல்லின உகரம் அது போதும் ( கு, சு, டு, து, பு, று )
    Last edited by சாம்பவி; 29-09-2007 at 12:32 AM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  10. #46
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by சாம்பவி View Post
    போச்சுடா.... குழம்பு தானா... :(

    வார்த்தையில் எங்கே இருக்கு குற்றியலுகரம்.. ?
    புரிந்தது... நன்றி விளக்கத்திற்கு...
    தமிழ்மொழி ரொம்ப சிக்கல்தான்...
    தொடருங்கள்... நாங்கள் வளர்கின்றோம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #47
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by சாம்பவி View Post
    இதோ இந்த ஒற்று மிகும் சித்து விளையாட்டின் ஸுத்திரதாரி....
    "வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் ஒற்று மிகும்"

    பிரித்து எழுதும் பக்ஷத்தில்
    "வன் தொடர் குற்றியல் உகரத்தின் பின் ஒற்று மிகும்"

    தெளிந்திருக்கணுமே....!! அதே அதே.. !!

    வால் மட்டும் நுழையாதவர்கட்கு.. :-
    வன் ==> வன்முறையில் இருக்கும் அதே வன்... வன்மையான வல்லினம் ( க, ச, ட, த, ப, ற )
    தொடர் ==> தொடருமேயானால்...
    குற்றியல் உகரம் ==> இது ஒரு சிறிய கதை ...இன்னொறு நாள் சொல்கிறேனே ... . இப்போதைக்கு வல்லின உகரம் அது போதும் ( கு, சு, டு, து, பு, று )
    பின் ==> பின்னால்
    ஒற்று மிகும் ==> அடுத்து வரும் வரு மொழியின் ஒற்றானது இரட்டிக்கும்.,.

    அதாவது...
    வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து .. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.

    ஆதலினால் நண்பர்களே,
    குழம்பா ரசமா ... ?

    நலம் வாழ எந்நாளும் நல் வாழ்த்துக்கள் !!

    பி.கு: அப்போ......
    ஆயிரம் தாமரை மொட்டுக்கள்
    மூச்சு விடா மொட்டுகளானது எப்படி.. ?
    .
    முதற்கண் நம்முடைய சந்தேகத்தை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    "வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் ஒற்று மிகும்"

    வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து .. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.
    - மிக சுருக்கமான எளிய விளக்கம்.

    நடைமுறையில் உபயோகிக்கும் சொற்கள் சரியானவையா என்று தெரியாமலே நாம் அதை உபயோகித்துக்கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா..?

    கொக்குகளா.. இல்லை கொக்குக்கள்ளா..?

    மீண்டும் மிக்க நன்றி.

  12. #48
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    கொக்குகளா.. இல்லை கொக்குக்கள்ளா..?
    அண்ணா... திரும்பக் குழம்பு...
    Last edited by அக்னி; 29-09-2007 at 07:31 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •