Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: திரைவிலகக் காத்திருக்கிறேன்!....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    திரைவிலகக் காத்திருக்கிறேன்!....

    தெருவோரப் புழுதிகளின்
    உறக்கத்தை
    நீர்த் தெளித்தெழுப்பியதை....

    புரண்டுபடுத்து
    இழைந்ததில்
    விளைந்த வாசத்தினை
    நாசிவழி ஏற்றிக் கொண்டதை..

    உலர்ந்துபோன
    உதடுகள்
    நாவின் ஒத்தடத்தில்
    பிழைத்துக் கொண்டதை....

    விரித்து விட்டிருந்த
    கேசத்தில்
    வாழ்ந்திருந்தத் திவலைகள்
    வழுக்கிக் கொண்டிருந்ததை..

    விரல் பிரசவித்த
    புள்ளிகள்
    தரைதொட்ட அமிலத்தில்
    அழிந்து கொண்டிருந்ததை..

    வீதி வந்த
    பூசணிப்பூவிடம்
    புன்னகை வீசிக் கொண்டிருந்ததை...

    தொலைவிலிருந்து
    ஓரிணை விழிகளேனும்
    விழுங்கியிருக்குமா...

    என்
    வினாக்களை
    அர்த்தமற்றதாக்கிக்
    கொண்டிருந்தது
    என்னைச்சுற்றிப்
    போர்த்தியிருந்த
    பனித்திரை!..
    Last edited by poo; 03-04-2007 at 09:19 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    எனக்கு காதல் கவியாகவே தோன்றுகிறது பூ அண்ணா! ! அதிலும் நிகழ்வுகளை சிறு வார்த்தைகளில் அடக்கியிருப்பதைக் கண்டு சிலாகிக்கிறேன். மண் வாசனை நுகர்தல், உதடுகளை எச்சப்படுத்துதல்,. கோலமிடும்போது நீரினால் அமிழ்ந்துபோகும் பொடிகளைக் காணுதல், போன்ற விஷயங்களை அருமையாகச் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியம்....

    கவிதை என்றால் இப்படித்தான் எழுதவேண்டும் என்ற விதத்தில் எழுதும் கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள்.. அதில் உங்கள் பாணி தனி. என்னால் இக்கவிதையை காதலாகவோ அல்லது மனைவியின் அன்பில் திளைப்பதாகவோ மட்டுமே காணமுடிகிறது.

    இறுதி வரிகளான விழிகள் விழுங்கியிருக்குமா, பனித்திரை ஆகியவற்றிற்கு அர்த்தம் அறிந்தால் நான் முழுக்கவியும் அறிந்தவனாவேன்... உவமைகளை உணர்ச்சிகளாய் பயன்படுத்தும் திறமை உங்களைச் சாரும்... அந்த வகையில் அமைந்திருக்கிறது இவைகள்...

    தொடருங்கள் அண்ணா! பயணத்தில் நான் மெல்ல தொத்திக்கொள்கிறேன்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by poo View Post
    தெருவோரப் புழுதிகளின்
    உறக்கத்தை
    நீர்த் தெளித்தெழுப்பியதை....
    மண்ணின் உறக்கம் தீர்ந்தால் மண்வாசனை.
    Quote Originally Posted by poo View Post
    என்
    வினாக்களை
    அர்த்தமற்றதாக்கிக்
    கொண்டிருந்தது
    என்னைச்சுற்றிப்
    போர்த்தியிருந்த
    பனித்திரை!..
    இதுதான் எமது அறியாமையோ..? மீண்டும் ஒரு சிறந்த பூ.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    மிஅக்வு அருமையாக வடித்திருக்கிறீர்கள்.

    அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். சுட்டிக்காட்டவேண்டியவற்றையெல்லாம் கவி ஆதவனும், அன்புரசிகனும் காட்டிவிட்டனர். இதற்குமேல் என்னால் என்னத்தை சொல்லமுடியும்!

    வாழ்த்துக்கள்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    கவிதை எல்லாப் பகுதிகளும் விளங்குகின்றன.. கடைசி பகுதி தவிர...

    நான் ரசித்தது, முதல் பகுதி...


    நீரை தெளித்தவுடன், புழுதியிலிருந்து புறப்படும் புகையை, அதன் தூக்கத்திலிருந்து எழுப்பியதாய் இருப்பது, முற்றிலும் புதிய ஒப்புமை..

    இரண்டாவது பகுதி, அதன் தொடர்ச்சியாய் உள்ளது, அந்த வாசத்தை அவன் நுகர்வதாய், மண் வாசனை அறியாதார் யார் இங்கே....

    பூ வின் கவிதை வரிகள் அருமை.. ஆனால் அந்தக் கடைசி பகுதி புரிந்தால் தான் எனக்கு கவிதையின் முழு வடிவம் கிடைக்கப் பெறும்..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    நல்லதொரு கவிதை நண்பா.

    வழக்கம் போல் கவிதையை ரசித்தேன், பொருள் காண காத்திருக்கிறேன்.
    பரஞ்சோதி


  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இன்னொரு கோணத்தில் எனக்கு கணவன் மனைவி கூடல் நிலை தெரிகிறது... மன்னிக்க மக்களே!... என் பார்வையை முழுமையாக இடுகிறேன்.

    இது சரி என்று பூ அண்ணா சொல்லும் பட்சத்தில் விமர்சனம் தொடர்கிறேன்... ஏனெனில் நான் ஒருவேளை சொல்லும் பட்சத்தில் அது பண்பட்டவர் இடத்துக்கு மாற்றலாம் அல்லவா?
    Last edited by ஆதவா; 03-04-2007 at 05:40 PM. Reason: கடைசி வரி இடப்பட்டது
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உள்ளுணர்வு -
    பெண்மைக்கு இயற்கை அளித்த
    வரப்பிரசாதம்!

    பின்னால் மொய்க்கும் விழிகளை
    திரும்பிப்பாராமலே உணர்ந்து
    ஆடை திருத்தும் சாதுர்யம்!

    மார்கழிப்பனி மூடிய காலையில்
    கடமையும், கவனிக்கப்படுகிறோமா என்ற
    கவலையும் கலந்து இழைக்கும் சௌந்தர்யம்!

    கவனிக்கப்படுகிறோமோ என அஞ்சுவதும்
    கவனிக்கப்படவில்லையே என ஏங்குவதும்
    இடத்துக்குத்தக்க விளையும்
    பெண்மனவயல் சுழற்சிப்பயிர்!

    பொதுவாய் மூடிய மொட்டு - பெண்!
    சரியான சூரியன் வரும் வரை!

    இங்கே அதிகாலை
    எந்தச்சூரியன் வந்தால்
    விலகும் பனித்திரை?

    அழகிய பனிக்காலை போல
    புத்துணர்ச்சி ததும்ப வைத்த கவிதை!
    பூசணிப்பூவைக் கோலநடுவில் கொலுவைத்த
    குளித்துவந்த பூவையை விட அழகான கவிதை!

    நன்றி பூவுக்கு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அண்ணா... இதற்காகத்தான் காத்திருந்தேன்.... அழகாக பிடித்துவிட்டீர்கள்....

    நண்பர்களே... உங்கள் பதில்களுக்கும் கேள்விகளுக்கும் மௌனம் சாதித்தமைக்கு மன்னிக்க.

    சின்ன நிகழ்வுகளை நான் சொல்லும்போது யோசித்தேன்.. இது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுமாவென... ஆனால் அதை குறிப்பிட்டு ஷீ, ஆதவன் போன்ற கவிகள் வாழ்த்தியதில் உள்ளம் மகிழ்கிறேன்..

    என் கவிதையின் நாயகி "முதிர்கன்னி"

    இப்போது மீண்டும் படியுங்கள்... சொன்ன வரிகளில் இருக்கும் உள்அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள்.. விளக்கம் வேண்டுமெனில் தருகிறேன்...

    மீண்டும் நன்றிகள் அண்ணனுக்கு, அன்புத் தோழன் பரம்ஸுக்கு, அன்பு நண்பர்கள் அன்புரசிகன், ஜாவா, ஷீ, ஆதவன் மேலும் பார்த்துச் சென்ற நண்பர்கள் அனைவருக்கும்..
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிக அருமை பூ! மிக அருமை... என்ன சொல்ல....

    விரல் பிரசவித்த
    புள்ளிகள்
    தரைதொட்ட அமிலத்தில்
    அழிந்து கொண்டிருந்ததை..

    என்ன என்ன என்று யோசித்தேன், இந்த வரிக்கான விளக்கங்களை... விரல் பிரசவிக்கும் என்றால் என்ன என்று யோசித்தும் பிடிபடாமல் இருந்தது...

    அது புள்ளி வைத்த கோலங்கள் என்று இளசுவின் விமர்சனத்திலிருந்து இப்பொழுது பிடிபடுகிறது...
    -------------------------------------

    இந்தக் கவிதையை இன்னும் எளிமைபடுத்தியிருக்கலாம் என்று உள்மனம் சொல்கிறது.. (தவறாக எண்ண வேண்டாம்)
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    நன்றி ஷீ..

    இல்லை நண்பரே... எளிமைப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்காது என்பதே என் எண்ணம். விளக்கம் பின்னர் எழுதுகிறேன்.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பூ அண்ணா! என்ன சொல்வது?... நானெல்லாம் கவிஞனா? இந்த சாதாரண வரிகள் கூட புரியாமல்...
    அதிலும் நான் எங்கோ நினைத்துவிட்டேனே!! நல்லவேளை பதிவு எழுதாமல் போனேன்.. எழுதியிருந்தால் அது எனக்கு கரும்புள்ளியாகப் போயிருக்கும்..

    கவிதையைப் பொருத்தவரை அழகான காதல் கவியோ என்று தோன்றுமாறு கொண்டு சென்று அப்படியே சமூகத்தைக் கடையும் பிரச்சனைகளைக் கொண்டுவந்தது இன்னும் அழகு. என்னால் இது முடியாதண்ணா! முடியவே முடியாது.. நெருங்கவும் எனக்குத் தகுதியில்லை..

    முதிர்கன்னி என்ற தலைப்பில் கவிதை எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்... ஆனால் கைவிட்டுவிட்டேன்.. அது நல்லதாக போய்விட்டது. இல்லையென்றால் இப்படி ஒரு அருமையான கவிதை கிடைத்திருக்குமா?

    தொலைவிலிருந்து
    ஓரிணை விழிகளேனும்

    விழுங்கியிருக்குமா...

    இந்த வரிகளை இன்னும் சற்று கவனித்திருந்தேன் என்றால் எனக்கு ஒருவேளை விளங்கியிருக்கும்... முந்திய கவிதைகளைவிட மிக எளிதான கவிதைதான் என்றாலும் நான் ஒரே பார்வை மட்டுமே வைத்திருந்தேன்..

    தொடருங்கள்.... முடிந்தவரையில் விளங்க முயற்சித்து பயணிக்கிறேன்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •