வறண்ட பூமியின் நிலைகண்டு
வெகுண்டு எழுந்த வானம்
அருணனின் ஆரோகணத்துக்கு
கறுப்புக் கொடி காட்டுகின்றது
மழைக்கால கார்மேகமாய்
ஆகாயத்தின் அன்பு கண்டு
படர்பச்சைக் கம்பளம்விரித்து
செப்புகின்றன நறுமைதனை
மழைத்துளியால் தளிர் விட்ட
வேனில்கால மரஞ் செடிகள்
மனம்கிழ்ந்த விண்டலம்
விருட்ஷ விருத்திக்கு
பச்சயம்தரும் பகலவனின்
வருகைக்கு சாமரம் வீசுகின்றது
கோடைகால வெண்மேகமாய்
Bookmarks