Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 63

Thread: மீண்டும் ஞானி - பாகம் 3

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17

    Smile மீண்டும் ஞானி - பாகம் 3

    1. கல்வி

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஞானி வீட்டுக்கு வந்திருந்தான். பேசிக் கொண்டிருந்தோம்.

    என்ன ஞானி இளைத்துவிட்டாயே என்றேன்.

    சம்பிரதாயமாக பேசாதே என்று கடிந்தான்.

    சட்டென்று வாயை மூடிக் கொண்டேன். திட்டு வாங்காமல் என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது என் மகன் கணித புத்தகத்துடன் வந்தான்.

    அப்பா இந்த கணக்கு வரமாட்டேங்குது என்றான்.

    எனக்கும் கணித பாடத்திற்கும் காத தூரம்.

    ஞானி மாமாவிடம் கேள். அவர் கணக்கில் புலி என்று சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தேன்.

    என்ன எனக்கு கணக்கு வராது என்ற நினைப்போ என்றான்.

    நமட்டுச் சிரிப்பை வாயில் முழுங்கினேன்.

    மகனிடமிருந்து நோட்டு புத்தகம் வாங்கி மடமடவென்று கணக்கு எழுதி விளக்கினான்.

    தாங்க்யூ அங்கிள் என்று சொல்லி என் மகன் விலகியதும் ஆச்சர்யம் அடக்க முடியாமல் எப்படி ஞானி என்றேன்.

    இப்போது தான் இதே பாடத்தை அடுத்த தெருவில் இருக்கும் ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுத்தேன் என்றான்.

    அட ட்யூஷன் எல்லாம் எடுக்கிறாயா என்றேன் ஆச்சர்யத்துடன்.

    ஆம். மாலை நேரங்களில் சிலர் வீட்டுக் சென்று பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். காலை நேரங்களில் மாணவர்கள் வீட்டுக் வருகிறார்கள் என்றான் மனைவி கொண்டு வந்த காபியை அருந்தியவாறே.

    நல்ல வருமானம் என்று சொல் என்றேன் சிரிப்புடன்.

    மறுபடியும் மனிதன் மாதிரி பேசுகிறாயே என்றான் காட்டமாக.

    எனக்கு டிமோஷன் ஆனது போல இருந்தது. ஏன் என்றேன் குழப்பமாக.

    நமக்கு தெரிந்த விஷயங்களை நாலு பேருக்கு சொல்லித் தரவேண்டும். கல்வியை வியாபாரமாக்க நான் ஒன்றும் மனிதன் இல்லை. காப்பி கோப்பையை வைத்துவிட்டு விலகினான்.

    ஞானி அங்கிள் பெஸ்ட். அப்பா வேஸ்ட்டு என்று என் மகன் என் மனைவியிடன் சொல்வது காதில் கேட்டது. தெரு ஓரத்தில் ஞானி அவன் சைக்கிளில் அடித்த மணி கிண் என்று என் மனதில் அடித்தது.

    வெட்கி தலைகுனிந்தேன்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ஞானி மூலம் சொல்லித்தரும் பாடம் அருமை மோகன்...

    புத்தியான பேச்சு.. அடுத்தவரை மதித்தல்.. தெரிந்ததை சொல்லி தருதல்.. முக்கியம்...
    Last edited by அறிஞர்; 28-03-2007 at 07:30 PM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    1
    நமக்கு தெரிந்த விஷயங்களை நாலு பேருக்கு சொல்லித் தரவேண்டும். .

    வாழ்த்துகள் மோகன்.. மீண்டும் ஞானியை அழைத்து வந்ததற்கு..

    புத்தகத்தில்படித்தால் 20 சதம் நிற்கும்..
    நேரில் பார்த்தால் 40 சதம் நிற்கும்..
    ஆழ்ந்து விவாதித்தால் 50 சதம் நிற்கும்..
    செய்து பார்த்தால் 70 சதம் நிற்கும்..

    கற்பித்தால் மட்டுமே 90 சதம் நிற்கும்....

    கற்பிப்பதில் ஒரு அழகான சுயலாபம் இது...

    காசு-பணம் எல்லாம் இந்த லாபத்துக்கு முன்?

    ஞானிக்கு என் அன்பைச் சொல்லவும்..
    அடிக்கடி மன்றம் வரவும் சொல்லவும்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நன்றி அறிஞரே. நன்றி இளசு.

    ஞானியை பற்றி நிறைய எழுத ஆவலிருந்தாலும் மனிதனான நான் மனிதனுடைய சராசரி வாழ்கை வாழ்வதால் materialistic வட்டத்தில் சுழன்று வீணனாகி வருகிறேன். விரைவில் விடியும்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வெகு அருமை மோகன் அவர்களே!!..

    அறிஞர், இளசு அண்ணா சொன்னபின் நான் என்ன சொல்ல... நமக்குத் தெரிந்ததை காசு பார்க்காமல் சொல்லித் தரவேண்டும்.... இதுவே அடிப்படை கரு. என்னுள் ஏற்கனவே விதைக்கப்பட்ட கரு. உங்களின் வலைத்தளத் தொகுப்பும் அம்மாதிரிதான்..

    நாலுபேருக்கு நாம் அறிந்த விஷயம் தெரிவதில் சொல்லிக்கொடுப்பதில் தவறில்லை; மாறாக அறிவு ஒன்றே வளரும்... இது நான் கண்ட அனுபவமான உண்மை..

    காசுக்கென்று பார்த்திருந்தால் இழிச்செயல்கூட இனிமைதான்....

    ஞானியின் தோற்றத்திற்கு வந்தனங்கள்... முடிவின்றி செல்ல வேண்டுமென்பதுவே என் அவா...

    (அட நிறைய கவிதைக்கரு கிடைக்கும் பாருங்க.. )
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நன்றி ஆதவா.

    உங்கள் பலவிதமான கோணங்களில் யோசிக்கும் விதத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன். இத்தனை சிறிய வயதில் பலவித பரிமாணங்கள் அருமை.

    உங்களுக்கு இத்தனை எழுத நேரம் கிடைப்பதை கண்டு சற்று பொறாமையாக இருப்பதுண்டு.

    ஞானியால் உங்கள் கவிதைக்கு கரு கிடைத்தால் அது என் பாக்கியமே.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றிங்க மோகன்... ஞானிக்கு முன்னெல்லாம் நான் வெறும் தோணிதான்... உங்களின் சில ஆக்கங்களைக் கண்டு நான் பொறாமை பட்டதுண்டு.......... மன்றம் வந்ததும் நீங்கள் செய்த உதவி மறக்க முடியாதது..
    ---------------------
    பொதுவாக நான் பகலில் பதிவுகள் இடுவதில்லை.... வருவேன்... அடுத்த நிமிடத்தில் log out தான்... இரவு நேரம் ஒதுக்குவேன்... இருப்பினும் பாருங்கள்.. இன்று வேலை......... ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. மன்றமும் விடமுடியவில்லை...
    -----------------------------

    தற்சமயம் கண்கள் எப்படி இருக்கின்றன ?......... வெகுநேரம் உலாத்துவதால்தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். எனக்கும் இப்படித்தான்.. இன்று தூங்க முடியாது. நாளைக்கு ஒரே எரிச்சலாக கண்வலியாகவே இருக்கும்.............. என்ன செய்ய.?

    கால்வயித்து கஞ்சிக்கு கால்கடுக்க வேலை..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நமக்கு தெரிந்த விஷயங்களை நாலு பேருக்கு சொல்லித் தரவேண்டும்

    ஞானியின் பதிவு என்றாலே எது ஒரு சுவரஸ்யமான விசயம் இருக்கும்.


    சில நாட்டில் கல்வி அருமையான வியாபாரமாகிவிட்டது. நல்ல வருமானம்

    அருமையான பதிவு மோகன். மிக்க நன்றி.


    விரைவில் விடியும்.
    வாழ்த்துக்கள்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நன்றி ஓவியா. வளரும் நாடுகளில் தான் கல்வி வியாபாரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். உங்கள் நாட்டில் எப்படி

    நன்றி ஆதவா. ஆம். ஆதவா நம் கண்கள் மிகவும் முக்கியமானவை. நம்மை போன்றவர்கள் படிப்பதற்கும் தொலைகாட்சி பார்ப்பதற்கும் மேலும் கணினியில் வேலை செய்வதற்கும் ஆக படிப்பு பொழுதுபோக்கு வேலை என்று அனைத்து விஷயங்களிலுமே கண்களை நம்பி இருப்பதால் கண்களை வெகு காலம் காத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம்
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    நன்றி ஓவியா. வளரும் நாடுகளில் தான் கல்வி வியாபாரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். உங்கள் நாட்டில் எப்படி

    நன்றி ஆதவா. ஆம். ஆதவா நம் கண்கள் மிகவும் முக்கியமானவை. நம்மை போன்றவர்கள் படிப்பதற்கும் தொலைகாட்சி பார்ப்பதற்கும் மேலும் கணினியில் வேலை செய்வதற்கும் ஆக படிப்பு பொழுதுபோக்கு வேலை என்று அனைத்து விஷயங்களிலுமே கண்களை நம்பி இருப்பதால் கண்களை வெகு காலம் காத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம்
    எங்கள் நாடு மட்டும் என்ன விதி விலக்கா? இல்லையே, அதே கதை தான் அங்கும். மியன்மார், கம்போடியா சொமலியா, மாலித்தீவு, ஸ்ரீலங்க, இந்தியா, சிங்கை, ஃபிலிபீன்ஸ், இந்தோனேசியா என்று பல நாடுகளிலிருந்து மாணக்கள் வந்த வண்ணம்தான்.

    கொசுரு: எங்க நாடும் வளாரும் நாடுதான்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by ஓவியா View Post
    எங்கள் நாடு மட்டும் என்ன விதி விலக்கா? இல்லையே, அதே கதை தான் அங்கும். மியன்மார், கம்போடியா சொமலியா, மாலித்தீவு, ஸ்ரீலங்க, இந்தியா, சிங்கை, ஃபிலிபீன்ஸ், இந்தோனேசியா என்று பல நாடுகளிலிருந்து மாணக்கள் வந்த வண்ணம்தான்.

    கொசுரு: எங்க நாடும் வளாரும் நாடுதான்.
    ஐயோ நான் கேட்டது இப்போது இருக்கும் நாட்டில்
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    ஐயோ நான் கேட்டது இப்போது இருக்கும் நாட்டில்
    ஓ அதுவா, இங்கே காலங்காலமாக 1ம் தர விற்பனையே கல்விதான்.

    என்று ஃஒக்ஸ்ஃபர்ட் அகராதி வந்ததோ, அன்றில் இருந்து இன்று வரை பிரிதானியாவில் கல்வியின் பணவரவு முதல் 5 நிலையில் தான் உள்ளது.

    போன வருடம் இங்கிலாந்தில் மட்டும் மாணாக்களின் (வருகை) எண்ணிக்கை 5 லட்சமாம்.

    எஃடுகேசைன் இஸ் தெ பேஸ்ட் ஃபிசுனஸ்.
    Last edited by இளசு; 29-03-2007 at 06:06 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •