செடி
சாக்கடை பாய்ந்தாலும்
செடி வளந்தால் சரியா?
பாயும் நல்ல தண்ணீரை கெடுப்பதை
தடுப்பது முறையா?
கனி முக்கியம்
வளர்ந்த வழி
அதை விட முக்கியம்
செடி
சாக்கடை பாய்ந்தாலும்
செடி வளந்தால் சரியா?
பாயும் நல்ல தண்ணீரை கெடுப்பதை
தடுப்பது முறையா?
கனி முக்கியம்
வளர்ந்த வழி
அதை விட முக்கியம்
Last edited by அமரன்; 18-03-2008 at 03:46 PM.
அற்புதமான கவிதை. சற்று முரணாக இருந்தாலும் கூட.
என்ன தண்ணீர் எடுத்தாலும் இளநீர் இனிக்கத்தானே செய்கிறது. சேற்றிலும் தாமரை என்பார்களே.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
பார்த்தியின் பார்வையும்
மோகனின் மேல்பார்வையும்
இரண்டுமே அருமை..
பாராட்டுகள் இருவருக்கும்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
பார்த்திபன்.... உங்கள் வரிகளில் ஒளிந்திருக்கும் கருத்தைக் கண்டேன்... அருமை... சில நிமிடங்களில் தோன்றிய கவிதை........ உங்கள் ஆதங்கத்தில் விளைந்த கவிதை.
இதை எங்கே வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம்.
அரசியல், விளையாட்டு, போன்ற பல உதாரணங்கள்....
பொதுவாக, தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளியிட்டதில் வெற்றிகண்ட ஒரே மனிதர் பாரதி மட்டுமே..... ஒரு மரம் இழைக்க இழைக்க வயனமாவது கண்களுக்குத் தெரியலாம்.... எங்காவது சில்லுகள் சிதறி அழகைக் கெடுத்துவிட்டால் நாம் மீண்டும் இழைக்கத்தான் வேண்டும்........... அதையே நாம் நோண்டுவதால் மேன்மேலும் அழகு கெட்டுவிடும்....
உங்கள் கவிதைக்கு ஒருவகையில் நான் நன்றியும் சொல்லவேண்டும்......
வாழ்த்துக்கள்.
ஆதவன்
Last edited by அமரன்; 18-03-2008 at 03:47 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அருமை நண்பர் பார்த்திபன் அவர்களே
தங்களின் கவிதையை நானும் வாசித்தவுடன், ஒரு வி(ச)டயம் புரிந்துகொண்டேன். நீங்கள் சிறந்த கவிஞர்.
சொல்லவந்ததை கனகச்சிதமாக சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகிறேன்.
வடக்கில் இருந்து பார்த்த விசயத்தை தெற்கிலிருந்து நோக்கி பதிவு தந்த மோகனுக்கும் சபாஷ்.
ஆதவா பலே.
Last edited by இளசு; 28-03-2007 at 08:25 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஆஹா!!! இளசு அண்ணா!! உங்கள் பதிலைப் பார்த்தவுடனே கையும் ஓடலை காலும் ஓடலை.... அடடா ஆதவா!! சும்மாதாண்டா எழுதின... அதுலயும் அர்த்தமிருக்குடா என்று செல்லமாக.............
இதுக்குமேல எனக்கு வார்த்தையே தோணல...................
மோகன் அவர்கள் சொன்னதுபோல/// பிரம்ம ரிஷி மட்டுந்தான் இடிக்குது... ஹி ஹி// நன்றி மோகன் அவர்களே
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
பார்த்திபன் எழுதிய வரிகளுக்கு.. மூவரின் விளக்கங்கள்..... அருமை.
தொடருங்கள் பார்த்திபன்...
இன்னும் தங்கள் கவிதைகள் வளமை பெறட்டும்.
பார்தீபன் தனது உள்ளக்குமுறலை கவிதையாக எழுதியிருகின்றார். மேலோட்டமாப் பார்த்தால் சாதாரணமாக்த் தெரிகின்றது. ஆழ்ந்து பார்த்தால் அர்த்தம் பல பொதிந்துள்ளது. அதுக்கு முத்தாய்ப்பாக அமைவது உறவுகளின் பின்னூட்டம். அனைவருக்கும் வாழ்த்துகள்.
கவிதையை விமர்சனங்கள் தூக்கி சாப்பிடுகிறது... வாழ்த்துக்கள் பார்த்திபன்...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
அன்பு தமிழ்மன்ற அருமை நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.
சிறுமை கண்டு அழும் சீத்தலை சாத்தனாரின் வலியை புரிந்தவர்களுக்கு வணக்கம் அய்யா வணக்கம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks