நூற்றுபத்து கோடி வாய்களுக்கும் இந்திய கிரிக்கெட் டீம்தான் இப்போதைக்கு அவல். ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், அரசியல்வாதிகள் என ஆளாளுக்கு அடித்துத் துவைத்து பிழிந்து காயப்போட்டாயிற்று. நமது நட்சத்திரங்கள் மட்டும் விதிவிலக்கா? அவர்களும் நார் நாராக கிழிக்கிறார்கள்.
தமிழ் நடிகைகளில் அதிகம் கிரிக்கெட் பார்ப்பவர்கள் த்ரிஷாவும், சினேகாவும். த்ரிஷாவின் பேவரிட் சச்சினும் டிராவிட்டும் சொதப்பியதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை அவரால். "நம்மகிட்ட டீம் ஸ்பிரிட் இல்லை. வீரர்கள்கிட்ட ஒற்றுமை கிடையாது. நாம தோத்ததுக்கு இதுதான் காரணம்" என ஒட்டுமொத்த டீமையும் சாடினார் த்ரிஷா.
சினேகாவுக்கு கோபத்தை விட ஏமாற்றம்தான் அதிகமாக இருக்கிறது. "இப்படி ஏமாத்துவாங்கனு நினைச்சுக் கூட பார்க்கலை" என்றவர் தனக்கேயுரிய தன்னம்பிக்கையுடன், "தோல்விதான் வெற்றிக்கு முதல்படி. அதை மனசுல வச்சு இனி நல்லா ஆடணும்" என அட்வைஸ் செய்தார்.
கிரிக்கெட் வீரர்களை கருணையுடன் அணுகிய ஒரே இந்தியர் பிரபுவாகத்தான் இருக்க வேண்டும். "விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். இலங்கை நல்லா விளையாடுனாங்க. இந்தியா இதற்கு
முன்னால ஜெயிச்ச மேட்ச்களையும் நாம நினைச்சுப் பார்க்கணும்" என பெருந்தன்மையாக பேசியிருக்கிறார். இதனாலெல்லாம் அடங்கி விடுமா ரசிகர்களின் கோபம்?
Bookmarks