கவிதை சொல்லப்போய் தமிழாசிரியரிடம் வாங்கிக்கட்டிகொண்டது
படிக்கும் காலத்தில் (...ம் எங்கே படித்தோம் !!!) தமிழாசிரியர் ஒவொருவராக குறுங்கவிதை ஒன்று சொல்லச்சொன்னார். அதற்கு சற்று முன்புதான் அவர் கண்ண பிரானின் தோற்றதைப் "கூந்தல் கார்மேகம் ", 'நெற்றி வெண்மதி","கண்கள் கருமை","உடல் கருநீலம்" மற்ற, மற்ற ..... என்று வர்ணித்திருந்தார்.கவிதை சொல்லும் ஆசை யாரைத்தான் விட்டது . நானும் எழுந்து நின்று "ஐயா! "பல கடவுள்களை போற்றும் உலகில் கண்ணா பிரான் ஒரு "Multi colour Modern god " என்றேன். பாராட்டுவார் என்று நினைத்தேன். வரச்சொன்னார் ஆசிரியர் அறைக்கு.பாராட்டுவதற்கு இல்லை.
Last edited by jayanth; 02-02-2012 at 12:26 PM.
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
மின்சாரம் இருந்தால் சுடுதண்ணியில் குளிக்கிறோம் வியர்க்கிறது..
இல்லாட்டி வியர்வையிலேயே குளிக்க வேண்டியாதாகிறது..
நம்ம வாழ்க்கையோட சாரமாகவே மின்சாரம் ஆகிடுச்சி...
குளித்து வியர்த்தேன்
வியர்த்துக் குளித்தேன்
மின் - சாரம்!
இப்படிக் கூட எழுதலாமில்ல ஆதவா!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இதெல்லாம் இன்னுமா படிச்சுட்டு இருக்கீங்க....??
மின்சாரம்,
தமிழ்நாட்டில்
சட்டசபையின் எதிர்கட்சியென.
வெளியே(ற்)றுகிறது
இருட்டிலிருந்து ஒளியை
உடலிலிருந்து வியர்வை
இருட்டு குளித்ததில்
வெளிச்சம் கரைந்தது
பவர் சோப்!!
நைட்டு ஃபுல்லா பவரு கட்டு
ஒடம்பு ஃபுல்லா ஸ்வெட்டு!!
ஒய் திஸ் கொலவெறி........
நீ ஒளி
நான் இருள்
அவன் உடல்
அது வியர்வை!
இருள்
கண்களை மாற்றியமைக்கிறது
சிலநேரங்களில்
மனதையும்!!
தமிழ்நாடே ”இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது” - விஜயகாந்த் ஆ’வேசம்’, - தலைவரூ சரக்கடிச்சாலும் கவிதையாத்தான் ஒளருவாரு!
இருளில் மூழ்குதல்!!! ஒரு அழகான கவித்துவம் மிகுந்த மென்மையான வரி இல்லையா? ஆனால் சூழ்நிலையோடு சேர்ந்து அது கண்டிக்கிறது!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
உங்கள் திரி சுவை தருகிறது
சுவர் தருகிறது
சுறுசுறுப்பு தருகிறது
சுகம் தருகிறது
ஏன் சுவாசமான தமிழுக்கு
அணிகலன் பூட்டியதுக்கு
நன்றி
===> தமிழ்கவிநேசன் <===
ஆதவா,
இத்தொடரில் பயனுள்ள பகுதிகளைப் பயன்படுத்திக்கொண்டேன். நன்றி..!
உங்களின் இந்த பதிவு தெளிவு பெற வைத்திருகிறது என் கவிதை எழுதும் தரத்தை.
நன்றி நண்பரே ......
ணான் முதலில்
சின்ன வயது விலயாட்டு
னான் தான் முதலில்
முதுமையிலும் விலயாட்டு
னி தான் முதலில்
ஆன் என்ட்ரால்
குன்ஙுமம் இல்லாத
உன் முகக்ட்தை நான்
கடசி நாலிலும்
பார்க்க விரும்பலை..
என் கன்னெ
அன்புடன்
குலன்டை வெல் .மு
தமிழும் கலையும் தலைசிறந் தோங்குமெம்
திமிதிமி தாளமும் திரைகடற் கப்பாலும்
அமிர்தமாய் இனித்திடும் அன்பரே உம்பணி
இமயமாய் வளர்ந்திட ஏற்றினேன் வாழி!
கன்னித் தமிழின் களிப்பாம் சுவையெலாம்
உன்னிப் பார்ப்பின் உள்ளது மரபிலே!
பின்னிடப் பயிற்றுக பிழையற! எழுத்து
நன்னசை சீரடி நாலொடு தளைதொடை
என்பன தெளிவுற! இனிதுற வாழி!
அருட்கவி
மிக மிக அருமையான கருத்துக்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks