Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 179

Thread: கவிதை எழுதுவது எப்படி?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    கவிதை எழுதுவது எப்படி?

    கவிதை எழுதுவது எப்படி?...

    வணக்கம் நண்பர்களே!
    இங்கே கவிதை அரசர்களும் தளபதிகளும். வீரர்களும் கவிதை அரசிகளும் உலாவந்தாலும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். கவிதை எழுதுவது எப்படி என்று... (பதிவு இங்கே வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்). நம்மில் பலருக்கு கவிதை எழுத தோன்றும் ஆனால் எழுதத் தெரியாது.. இன்னும்சிலர் திறமையை வைத்துக்கொண்டு மறைப்பார்கள்... அவர்கள் எல்லாருக்கும் இந்த திரி பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்... இங்கே உலாவும் ஜாம்பாவான்களும் இப்பாடத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தருவார்கள் என்று நினைக்கிறேன்...

    சரி, ஆதவனுக்குத் தெரிந்த பாடம் என்ன?

    கவிதை எழுதுவது என்ன கஷ்டமான வேலையா? கிடையவேகிடையாது... எண்ணங்களை எண்ணுவது எப்படி சுலபமோ அம்மாதிரி எண்ணங்களை எழுதுவதும் சுலபம்தான்..
    கவிதைக்கு என்ன என்ன தேவை?

    • தமிழில் ஆழ்ந்த சொற்கள் அல்லது கருத்துக்கேற்ப சொற்கள்
    • சொல்லவரும் கருத்து
    • அழகுபடுத்தும் திறன் அதாவது கற்பனை
    • சொல்லடுக்கு (இது அடுத்த பரிமாணம்//)
    • போதாது என்ற மனம்
    ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவேன் ; பாரதியின் புத்தகம் படியுங்கள் கவிதை எழுதிடலாம் என்று... தமிழில் ஆழ்ந்த சொற்கள் அதைவிட சிறந்த இடத்தில் கிடைக்காது.. சொற்களை நமக்குத் தேடுவதில் பிரச்சனை இருக்காது.. தமிழராகவே நாம் இருக்கும் பஷத்தில் சொற்கள் பல தானாகவே வந்துவிடும். தகுந்த தமிழ் சொற்கள் அடங்கிய புத்தகம் வாங்கிக்கொள்ளலாம்.. விற்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.. இல்லையெனில் ?? நமக்குத் தெரிந்த தமிழை வைத்துதான் முதலில் கவிதை ஆரம்பிக்கவேண்டும்........................

    அடுத்து கருத்து:

    நம் வாழ்க்கையில் எத்தனையோ காட்சிகள் காணுகிறோம்.. இல்லையானால் காதல், நட்பு என்று சில உறவுமுறைகள் காணுகிறோம்... அங்கிருந்தே நாம் கவிதையை ஆரம்பிக்கலாம்.. கவிதை ஆரம்பத்தில் நாம் எழுதும்போது அது எதைப்பற்றிவேண்டுமானாலும் இருக்கலாம்.. ஏற்கனவே எழுதியிருப்பார்களே என்ற கவலை இல்லாமல் எழுதவேண்டும்... சரி உதாரணமில்லாமல் பாடம் நடத்தினால் சரியாக இருக்காது... உதா:க்கு காதலை மையமாக வைத்துகொண்டு கவிதை எழுதுவதாகக் கொள்வோம்..

    காதலியே!
    நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லை

    இப்படி ஒன்றன்கீழ் ஒன்றாக இட்டுவிடுங்கள்.... மேலே எழுதப்பட்ட மூன்றுவரிகள் நிச்சயம் ஒவ்வொரு கவிஞனும் எழுதியிருப்பார்கள். அந்த கவலை நமக்குவேண்டாம்.. ஆனால் இம்மாதிரி சில யோசிக்கலாம்.. சரி இந்த வரிகளை எப்படி அலங்காரப்படுத்தலாம்?

    சொல்லவந்த கருத்து:

    நாம் கவிதையில் என்ன சொல்லவருகிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். கருத்து இல்லாமல் கவிதை எழுதி பிரயோசனமில்லை... மேற்கண்ட உதாரணக் கவிதையை எடுத்துக்கொண்டால், காதலின் மகத்துவம் இருக்கிறது..... நமக்குள் கருத்து எதுவும் தோன்றாவிடில் மிகவும் எளிதாக, எழுதப்பட்ட வரிகள் யாவும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்ம்ம் உதாரணம்

    காதலியே!
    நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லை
    என்னிடம்
    காதல் சொல்ல வந்தாய்
    நான் வேண்டாம் என்கிறேன்

    மேற்கண்ட வரிகளில் பாருங்கள்.. சற்று கருத்து வேறுபாடாக இருக்கிறது.. காதலியை உயர்த்தி பேசிவிட்டு, காதலை ஏற்காதவன் போல் சொல்வது ஒட்டாமல் இருக்கிறது பாருங்கள்.. அதை சற்றே மாற்றி கீழ்கண்டவாறு இடலாம்.... நன்றாக ஒட்டும்..

    தோழியே!
    நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லை
    உன்னிடம்
    காதல் சொல்ல வந்தேன்
    நீ வேண்டாம் என்கிறாய்

    சரி சரி... கருத்து என்பது நம் மனதுக்குள் , கவிதைக்குள் திணிக்கப்படும் விதை... அது இன்றி கவி எழுதினால் எப்போதுமே நன்றாக இருக்காது...


    அடுத்த பரிமாணம் கற்பனை:

    இங்கேதான் நமக்கு பிரச்சனையே!! கற்பனை எப்படி உதிக்கிறது?,,, என் நண்பர்கள் பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்... கற்பனை என்பது பிறப்பிலிருந்தே வரவேண்டுமாம்.... இல்லவே இல்லை.. பிறவிக் கவிஞர்கள் உண்டு.... ஆனால் இல்லாதவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளலாம்..சரி எப்படி கற்பனை செய்வது...

    முதலி ஒப்புமைகள் இடலாம்... அதாவது இதைப் போல நீ இருக்கிறாய் ; அதைப் போல நான் இருக்கிறேன் என்று சொல்வது...
    முதலில் கற்பனை நம்முள் உதிக்க நாம் நிறைய பார்க்கவேண்டும்... இயற்கையிடம் இல்லாத கற்பனை இல்லை.. கவிதையில் பொய்தான் அதிகம் பேசப்படும்.. மேற்கண்ட வரிகளோடு கற்பனையைப் பொருத்தலாம்..

    தோழியே
    நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லை
    உன்னிடம்
    காதல் சொல்ல வந்தேன்
    நீ வேண்டாம் என்கிறாய்
    நான் நிழல் போலத் தொடருவேன்.

    கவனியுங்கள்.. நிழல் நம்மை எப்போதுமே தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.. அதை நாம் கவனித்திருப்போம். ஆனால் வேறெந்த கற்பனையும் செய்திருக்கமாட்டோம்...

    நான் காணும் காட்சிகளிலிருந்துதான் நாம் கற்பனையை எடுக்கவேண்டும்.. நீங்கள் ஒரு பறவையைப் பார்க்கிறீர்கள்.. உதாரணத்திற்கு மைனாவைப் பார்க்கிறீர்கள் ; அழகாக இருக்கிறது என்றால்

    மைனாவைப் போல என் காதலி .

    என்று யோசியுங்கள் தவறே இல்லை... கவிதைக்கு முதல்படியே இதுதான்.. சரி விடுங்கள் வழியில் ஒரு பாறாங்கல்லைப் பார்க்கிறீர்கள்...
    பாறாங்கல்லின் குணம் என்ன? உடைக்கமுடியாததும் வலிமையானதும், அதிக எடை கொண்டதும்தானே!!! உடனே

    பாறாங்கல்லாக இருக்குதே உன் மனது

    என்று எழுதுங்கள்... உடைக்க முடியாமல் இருக்குதே என்ற அர்த்தம் வரும்.. கற்பனைகள் நாம் நினைப்பதைப் பொறுத்து நிறைய வரும்... சாதாரணக் கற்பனைதான் நாளடைவில் அசாதாரணக் கற்பனையாக மாறக்கூடும்......
    நம் உதாரணத்தைத் தொடருவோம்


    தோழியே!
    நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லை
    உன்னிடம்
    காதல் சொல்ல வந்தேன்
    நீ வேண்டாம் என்கிறாய்
    நான் நிழல் போலத் தொடருவேன்.
    நீ பாறாங்கல் மனதை வைத்திருக்கிறாய்


    அடுத்து சொல்லடுக்கு :

    கொஞ்சம் கவிதை எழுதிப் பழகியவுடன் இந்த சொல்லடுக்கு காணலாம்..

    • சொற்களாலே கவிதையை அழகு படுத்தலாம்...
    • இலக்கணம் சற்று தழுவி எழுதலாம்
    • வார்த்தை விளையாட்டுக்களை புகுத்தலாம்
    இப்படி பல்வேறு உள்ளன... ஆனால் இவையனைத்திற்கும் பல தமிழ்சொற்கள் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.. நாம் கவிதை எழுத எழுத தானாக வந்தமையும் இந்த சொல்லடுக்கு.... இல்லையென்றால் மிகவும் எளிது: பாரதியின் கவிதையை மிக ஆழமாக படிக்கவும்..........

    போதாது என்ற மனம் :

    எத்தனை கவிதை எழுதினாலும் போதாது என்ற மனமிருந்தாலே நாம் நிச்சயம் பல வலிமையான அழகான கவிதை தரமுடியும்... நம்பிக்கை மட்டுமே இதற்குத் தூண்... நீங்கள் எழுதுவது எப்படி இருப்பினும் அதை மீண்டுமீண்டும் எழுத எழுத கூர் செய்யப்படும்.... யாரும் எடுத்த எடுப்பில் மிகப்பெரிய கவிஞராகிவிடமுடியாது... பிறவிக்கவிஞனுக்கு மட்டுமே உரிய பழக்கம் அது..
    அதேபோல நாம் எழுதும் கவிதைகள் இன்னும் சீர்படுத்த வேண்டுமென்றால் பல புத்தகங்கள் படிக்கலாம்.. கற்பனைகளை நன்றாக வளர்த்தலாம்.. நிச்சயம் முடியும்...

    முடியுமென்ற நம்பிக்கையும் இது போதாது; இன்னமும் வேண்டுமென்ற நம்பிக்கையும் இருந்தாலே போதும்.. எல்லாருமே கவிதை எழுதலாம்...


    இன்னும் சந்தேகமிருந்தால் இதே திரியிலேயே சந்தேகம் எழுப்புங்கள்.. நிவர்த்தி செய்ய நானோ அல்லது கவிதை ஜாம்பவான்களோ இருப்பார்கள்... உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்..............

    நிச்சயம் பல கவிஞர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு...

    வாழ்க தமிழ்
    வளர்க மன்றம்

    ஆதவன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பாடங்கள் தொடரும்...
    இன்னும் ஆழமாக...... மன்றத்து கவிஞர்கள் ஒத்துழைத்தால் இந்த கவிட்டுரையை இன்னும் அழகு படுத்தலாம்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நல்ல அருமையான முயற்சி ஆதவா.. தொடர்ந்து நடத்துங்கள்.. நானும் இங்கே நிறைய கற்றுக்கொள்ளமுடியும் என்று நம்புகிறேன்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    படிக்கும் போது எளிதாகத் தெரிகிறது ஆதவரே..

    ஆனால் தட்டச்சு செய்ய ஆரம்பித்தால் ஒன்றுமே வரமாட்டேன் என்கின்றதே..

    கவிதை எழுத தனித் திறமை வேண்டுமய்யா..!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    உற்சாக டானிக் பதிவு. நிச்சயமாய் கைகொடுக்கும் எனக்கும்!

    எந்தவொரு கவிஞனும் எழுதத் தயங்கும் இதை துணிந்து எழுத வந்தமைக்கு பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள் ஆதவன். தொடர்ந்து கொடுங்கள்..

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றிகள்................ எனக்குத் தெரிந்ததை நான் எழுதுகிறேன்... அதேமாதிரி கவிஞர் பூ மற்றும் கவிஞர் ஷீ-நிசி ஆகியோரும் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்...........
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    கவிஞர் பூ. --- இப்படி என் மனம் என்று உணர்கிறதோ அன்று நிச்சயமாக தெரிந்தால் எழுதுகிறேன் ஆதவன். (அந்நிலை வர ஆதவனின் பாடங்கள் பல பகுதிகள் வரவேண்டும்..)

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆதவா பிரயோசனமாக உள்ளது தொடருங்கள்!

    மன்றத்தின் மற்றைய கவிஞர்களும் தங்களது வழி முறைகளைத் தரலாமே?

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    எனக்கு உண்மையில் அருமையான பாடம் நன்றி ஆசிரியர் ஆதவரே
    ஆனால் முதலில் ஒரு திரி பாதியில் நிர்கிறது அதையூம் தொடருங்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி ஓவியன் மற்றூம் மனோ@@@ ஓவியன் சொன்னதுபோல மன்ற நண்பர்கள் தங்கள் அனுபவத்தைச் சொன்னால் இன்னும் பயனுள்ள திரியாக இருக்கும்............... எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கவிஞர்களை உருவாக்க முடியும் என்று...........
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    படித்தேன் ரசித்தேன். இதன் அடிப்படையில் என் கவிதை விரைவில். இன்னும் பாடம் சொல்லுங்க ஆதவா.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    எப்படி ராசா.. உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது...
    சும்மாவே மன்றத்தில் வலம் வரும் மக்கள் காதல் கவிஞர்கள் ஆயிடுறாங்க.. இதில் நீங்க வேற இதுமாதிரி பதிவு கொடுத்தால் ...
    எனக்கு கஸ்டமாயிடும்.. (கவிதை போட்டி நடத்ததான்).

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்...
    வளரட்டும் தமிழ் பணி...

    இளசு, கவிதா, நண்பன், ப்ரியன், பிரியன் , பூ, பாரதி, ஷீ, ஓவி என்று எல்லோரும் கண்டிபாக தங்கள் கருத்துகளை பதிக்க வேண்டிகொள்கிறேன்.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •