அப்படியே கழண்டுக்க பாக்குறீங்களே!!!!
இன்னும் நல்லா ஆழமா போனா நிச்சயம் உண்டு.....
பாருங்க...... அடுத்த கலக்கலான பதிவை....
அப்படியே கழண்டுக்க பாக்குறீங்களே!!!!
இன்னும் நல்லா ஆழமா போனா நிச்சயம் உண்டு.....
பாருங்க...... அடுத்த கலக்கலான பதிவை....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
சீக்கிரம் தாங்க ஆதவாபாருங்க...... அடுத்த கலக்கலான பதிவை....
வாழ்வில் ஒரு கவிதையாவது எழுதாமல் ஒருவன் இருக்கமுடியாது என்பார்கள்..
வாராந்தரி ராணி, வாரமலர் தினமலர் வாசகர் கவிதை (!) படித்தால்
இதை நம்பவேண்டியிருக்கும்.
எல்லா திறன்களும் பெரும்பாலானோரால் ஓர் அடிப்படை அளவுக்கு
பயிற்சியால் வளர்த்துக்கொள்ளக்கூடியவையே..
கார் ஓட்ட பயிற்சி எடுப்பவரில் , நல்ல முயற்சியால் 90 சதத்துக்கும் மேல் ஓட்டுநராக முடியும்..
ஆங்கிலத்தில் Competent - (திறனர்)
இந்த முதல் நிலையை அடைய ஆர்வம், முயற்சி, முறைப்படுத்தப்பட்ட பயிற்சி... இவை இருந்தால் நிச்சயம் அடையலாம்...
Expert - வல்லுநர் என்னும் இரண்டாம் நிலையை அடைய
இன்னும் கொஞ்சம் உள்திறமை, இன்னும் பயிற்சி, சிதறா முனைப்பு - இவை வேண்டும்.
Master - மேதை என்னும் மூன்றாம் உச்ச நிலையை ஒரு சிலர் அடைவதைத்தான்
அறிவால் அறிய முடியவில்லை!
வல்லுநர் எப்போது மேதையாகிறார்?
மெல்லிய கோடாய் எந்த நிகழ்வு அவர்களை பிரித்து உயர்த்துகிறது?
அங்கே பயிற்சி, ஈடுபாடு தாண்டி, ஒரே சிந்தை,
மோனத்தவ மூழ்கலில் அந்த அதிசயம் நிகழ்கிறதா? பிறவிப்பெரும்பயனா?
ஒரு பாரதி, ஒரு இளையராஜா, ஒரு சுப்புலட்சுமி, ஒரு டாவின்சி..
இவர்களும் முதல் இரண்டு நிலைகளில் நீந்தி ,
பின் மூன்றாம் நிலைக்கு உயர்ந்துவிட்ட துருவ நட்சத்திரங்கள்..!
நண்பர்கள் அனைவரும் முதலில் முதல் நிலை நட்சத்திரங்களாய் ஆவோம்..
தாளா ஆர்வம்,
செயலில் முழுமை +
செய்ததில் வெற்றி +
நல்ல பின்னூட்டம்+
அன்பான செப்பனிடும் ஊக்கம்
+ பரவும் அங்கீகாரம்
இவை வாய்ப்பவர்கள்
நிச்சயம் இரண்டாம் நிலைக்கு உயர்வார்கள்..
(இக்கட்டுரை ஆசிரியர் ஆதவன், நண்பன், ராம்பால்,பூ போல சிலர்
ஏற்கனவே இங்கே இருக்கிறார்கள்).
பின்னூட்டம் - Feedback
என்ன அழகான தமிழ் ஈட்டுச்சொல்!
ஒரு செயலைச் செய்வதால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி, நிறைவே
எந்த செயலுக்கும் முக்கிய உந்து.
அதை மீண்டும் செய்ய, இன்னும் சிறப்பாய் செய்ய
முதலில் செய்ததின் வெற்றிச்சுவை அடுத்த உந்து.
வெற்றியை அறிவது பின்னூட்டங்கள் மூலம் மட்டுமே!
ஆக்கமான செப்பனிடும் விமர்சனங்கள் குறை குறைக்க உதவும்..
பின்னூட்டங்கள் இன்றி தொடர் கவிஞன் இல்லை!!
நெஞ்சில் ஓர் அக்கினிக்குஞ்சாய் கவிதை வேள்வி வளர்த்து
வெந்து தணிந்து மேதையாய் நம்மவர்களில் சிலர் வரலாம்..வரவேண்டும்...
உயரவைக்கும் ஏணிக்கு முதல் மூங்கில் எடுத்துவரும் நம் ஆதவனுக்கு
உளமார்ந்த வாழ்த்துகள்..
(பி.கு.: இந்த மூன்று நிலைகள் கவிதைக்கு மட்டுமல்ல-
நீங்கள் , நான் பார்த்துக்கொண்டிருக்கும் பணிக்கும்தான் மக்கா..)
Last edited by இளசு; 27-03-2007 at 10:54 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
என்னை போன்றவர்களுக்கு உபயோகமான பதிவு... ஆதவன்...
இளசுவின் கருத்துக்களும் அருமை... முதல் மூங்கிலில் ஏறி.. ஏணியின் உச்சிக்கு அனைவரும் இணைந்து செல்வோம்.
இளசு அண்ணாவின் பதிலில் எத்தனை அடங்கியிருக்கிறது!!!!! இக்கட்டுரைக்கு முதல்பக்கம் எப்படி எழுதவேண்டும் என்பதை அண்ணனைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்....நான் தற்போது இளசு அவர்கள் சொன்னதுபோல முதல்நிலையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.......
இனி நான் எப்படி அடுத்த பாகத்தைத் தொடங்குவனோ தெரியவில்லை.... சற்று பயமும் இருக்கிறது.............
அறிஞர், இளசு, போன்ற பெருந்தகையர்கள் இருக்கையில் இன்னும் ஒளிரலாம்..............
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இளசு அண்ணனின் தொடர்ந்த பின்னூட்டமே இந்த பாடத்தினை இன்னும் சிறப்பாக வழிநடத்தும். அண்ணனின் ஆய்வுக்கட்டுரை சம்பந்தமான பதிவை (அவரிடம் சொல்லாமலே..) பிரதியெடுத்து என் கல்லூரி முதல்வருக்கு கொடுத்திருக்கிறேன்.
ஆதவன் வாழ்த்துக்களோடு தொடருங்கள்... ஆதரவாய் நிற்க ஆயிரம் கரங்கள்.
என்ன ஆதவா!
உங்களது தகவலைப்படித்தபின் "பூ இவ்வளவுதானா?" என்று சொல்லிக்கொண்டு கவிதை எழுத முற்பட்டேன், வெற்றியும் கண்டேன் ... கவிதை எழுதுவதில்...
படித்துப் பார்த்தபோது என்னாலேயே சகிக்க முடியவில்லையே.
அடங்கொக்காமக்கா...
ஆதவா, என்ன ஒரு உபயோகமான அனுபவ பூர்வமான பதிவு.
இதை எழுத வேண்டும் என்று தோன்றியதற்காகவே உனக்குத் தொப்பியைத் தூக்கி விட்டேன்.
வாழ்த்துகள். தொடருங்கள் கவிஞர்களே...
இளசு அவர்களின் பதிவும் பயன் மிக்கதாக இருக்கின்றது. நன்றி.
[QUOTE=benjaminv;185382]
எப்படி ராசா.. உன்னால மட்டும் இப்படி
எல்லாம் யோசிக்க முடியுது...
சும்மாவே மன்றத்தில் வலம் வரும்
மக்கள் காதல் கவிஞர்கள் ஆயிடுறாங்க..
இதில் நீங்க வேற இதுமாதிரி பதிவு
கொடுத்தால் ...
எனக்கு கஸ்டமாயிடும்..
(கவிதை போட்டி நடத்ததான்).
தொடரட்டும் உங்கள் பதிவுகள்...
வளரட்டும் தமிழ் பணி...)
இப்போது புரிகிறதா கவிதை எழுதுவதை விட
படிபவருக்குதான் கஸ்டம் அதிகம்
மன்னிக்கவும்
மார்ஷ்
Last edited by march; 28-03-2007 at 11:51 AM.
நன்றி பூ!! ஓவியன், அலெக்ஸ், பிரதீப்.......
-*---------------------
ஜாவா!! நீங்கள் வெற்றியாளர்.... முயற்சி செய்திருக்கிறீர்கள்... தயங்காமல் அந்த கவிதையை இடுங்கள்... நிச்சயமாக நாங்கள் கேலி செய்ய மாட்டோம்... எங்களின் மனம் அப்படிப்பட்டதல்ல...............
மேலும் தொடர்ந்து பாடம் படியுங்கள்.. நிச்சயம் என்னால் உங்களை கவிஞனாக்க முடியும்...
-------------------
வேலைப் பளு காரணமாக ஒருங்கிணைப்பாக தொடரமுடியவில்லை..... விரைவில் தொடங்குகிறேன்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks