மீண்டும் பலநாட்களின் பின் கவிதைப்பகுதியில் என் பிரவேசம்...
என்னுடைய கருத்துக்கள்.... அனுபவங்கள்....
நான் முதல் கவிதை எழுதியதெல்லாம் எப்பொதென்று தெரியாது
ஆனாலும் தொடர்ச்சியாக கவிதை எழுத ஆரம்பித்தது
அதாவது என் கவிதை வாழ்வின் ஆரம்பம் ஆவணி 2004 இன்னமும் 3 வருடங்கள் கூட நிறைவடைய வில்லை ஆனால் ஏதோ குறிப்பிடத்தக்க அளவில் எழுத முடிகின்றது இது பற்றி...
நணபர்களே நீங்கள் பேசுகின்ற கருத்துக்கள் உங்கள் ஆழ்மனங்களிலிருந்து பிறக்கின்றன..
உங்கள் ஆழ்மனத்தின் மொழி அழகானது...
இலக்கணம் பூண்டதல்ல கட்டுப்பாடுகள் அற்றது....
அதாவது ஒரு விடயம் பற்றிய உங்கள் சிந்தனை கவதையாகவே ஒவ்வொருவர் மனதிலும் உதிக்கின்றது..
இனியாவது ஒவ்வொருவரும் உணருங்கள் ஏதாவது ஒன்று பற்றி எம் மனம் எவ்வாறு சிந்திக்கின்றது வார்த்தைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது பற்றி...
மனிதர்கள் தாம் பேசும் போது கவிதைகளை உரைகளாக்குகின்றனர் இது ஒவ்வொருவரும் அறியாது எம்முள் நடப்பது. எம்முள் பிறக்கும் கவிதைகளை அப்படியே சொல்பவன் கவிஞன். வார்த்தைகளாக்குபவன் தன்னால் எழுத முடியாதென்கிறான்..
எனவே ஒருவிடயம் பற்றி ஈடுபாட்டுடன் சிந்திக்கும்போது உங்கள் மனதில் பிறப்பும் வார்த்தைகளை எழுதிப்பாருங்கள் கவிதையாக பிறந்திருக்கும்...
ஒன்று கவனியுங்கள் கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று உட்கார்ந்து எழுதும் கவதைகளை விட அவ்வப்போது உங்கள் மனதை உந்திக்கொண்டு புறப்படும் வார்த்தைகளே உன்னதமானவை...
புதுக்கவிதையின் பிறப்பே எண்ணங்களில் தான் ஆரம்பிக்கின்றது...
உங்கள் ஒவ்வொரு செயற்பாட்டிலும் கூடுபாடு அவசியம் கூடுபாடின்றி எழுதினால் நிச்சயம் ஓர் போலித்தனம் காணப்படும்...
"எங்களுடைய மூடி வைக்கப்பட்ட ஒவ்வொரு
மெளனங்களும் வெடித்து கவிதைகள் பிரசவிக்கப்படுகின்றன"
மதுரகன்
எனது அனுபங்களும் தொடரும்....
Bookmarks