Page 5 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 179

Thread: கவிதை எழுதுவது எப்படி?

                  
   
   
  1. #49
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    மீண்டும் பலநாட்களின் பின் கவிதைப்பகுதியில் என் பிரவேசம்...

    என்னுடைய கருத்துக்கள்.... அனுபவங்கள்....

    நான் முதல் கவிதை எழுதியதெல்லாம் எப்பொதென்று தெரியாது

    ஆனாலும் தொடர்ச்சியாக கவிதை எழுத ஆரம்பித்தது
    அதாவது என் கவிதை வாழ்வின் ஆரம்பம் ஆவணி 2004 இன்னமும் 3 வருடங்கள் கூட நிறைவடைய வில்லை ஆனால் ஏதோ குறிப்பிடத்தக்க அளவில் எழுத முடிகின்றது இது பற்றி...

    நணபர்களே நீங்கள் பேசுகின்ற கருத்துக்கள் உங்கள் ஆழ்மனங்களிலிருந்து பிறக்கின்றன..
    உங்கள் ஆழ்மனத்தின் மொழி அழகானது...
    இலக்கணம் பூண்டதல்ல கட்டுப்பாடுகள் அற்றது....
    அதாவது ஒரு விடயம் பற்றிய உங்கள் சிந்தனை கவதையாகவே ஒவ்வொருவர் மனதிலும் உதிக்கின்றது..
    இனியாவது ஒவ்வொருவரும் உணருங்கள் ஏதாவது ஒன்று பற்றி எம் மனம் எவ்வாறு சிந்திக்கின்றது வார்த்தைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது பற்றி...

    மனிதர்கள் தாம் பேசும் போது கவிதைகளை உரைகளாக்குகின்றனர் இது ஒவ்வொருவரும் அறியாது எம்முள் நடப்பது. எம்முள் பிறக்கும் கவிதைகளை அப்படியே சொல்பவன் கவிஞன். வார்த்தைகளாக்குபவன் தன்னால் எழுத முடியாதென்கிறான்..

    எனவே ஒருவிடயம் பற்றி ஈடுபாட்டுடன் சிந்திக்கும்போது உங்கள் மனதில் பிறப்பும் வார்த்தைகளை எழுதிப்பாருங்கள் கவிதையாக பிறந்திருக்கும்...

    ஒன்று கவனியுங்கள் கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று உட்கார்ந்து எழுதும் கவதைகளை விட அவ்வப்போது உங்கள் மனதை உந்திக்கொண்டு புறப்படும் வார்த்தைகளே உன்னதமானவை...

    புதுக்கவிதையின் பிறப்பே எண்ணங்களில் தான் ஆரம்பிக்கின்றது...

    உங்கள் ஒவ்வொரு செயற்பாட்டிலும் கூடுபாடு அவசியம் கூடுபாடின்றி எழுதினால் நிச்சயம் ஓர் போலித்தனம் காணப்படும்...

    "எங்களுடைய மூடி வைக்கப்பட்ட ஒவ்வொரு
    மெளனங்களும் வெடித்து கவிதைகள் பிரசவிக்கப்படுகின்றன"

    மதுரகன்


    எனது அனுபங்களும் தொடரும்....
    Last edited by மதுரகன்; 31-03-2007 at 06:41 PM.
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  2. #50
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by java View Post
    எழியாரை வலியார் கேட்க, வலியாரை தெய்வம் கேட்குமாம்.

    என்னை நக்கலடிக்கிறீர் ஓவியரே, உமக்கு மேலும் உம்மை விட வல்லமை பொருந்தியவன் இருக்கத்தானே வேண்டும். அதுவரைக்கும் பொறுமை காக்கிறேன். தருணம் வரும்போது களத்தில் குதிப்பேன்.
    என்ன யாவா!

    ஒரு பேச்சுக்குச் சொன்னா இப்படி கோவிச்சுக்கிறீங்களே!



    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #51
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    ஆதவா அவர்களே! கவிதை அனுப்பும் வழிமுறையை எனக்கு கூறவும்.

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by murthykmd View Post
    ஆதவா அவர்களே! கவிதை அனுப்பும் வழிமுறையை எனக்கு கூறவும்.
    வணக்கம் மூர்த்தி! உங்களை நீங்கள் கீழ் கண்ட இடத்தில் அறிமுகம் செய்துகொள்ளலாமே!

    http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

    அப்படியே விதிமுறைகளையும் படியுங்களேன்...

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133
    ---------------------------------------------------

    இப்போது எப்படி எனக்கு பதில் எழுதினீர்களோ அதேமாதிரிதான்.... உங்கள் கவிதையை தயங்காமல் அனுப்புங்கள்.. தவறில்லை.....

    நன்றி...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #53
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கற்றலில் நான்கு நிலைகள் உண்டு.


    முதல் நிலை:

    என்ன அறியாதிருக்கிறோம் என்பதையே அறியாதிருப்பது.

    கருவில் இருக்கும் குழந்தை நிலை..

    எனக்கு ஆஸ்திரேலியப்பழங்குடியினர் என்று ஒரு இனம் இருப்பதே தெரியாது என வைத்துக்கொள்ளலாம்.
    பின் அவர்கள் என்ன மொழி பேசுவார்கள் எனத் தெரியுமா??

    என்ன எனக்குத் தெரியாது என்பதையே தெரியா நிலை இது.

    உலகில் 99 சதத்துக்கும் மேலான அறிவுப்புதையல் இந்த கட்டத்துக்குள் அடங்கும்.



    இரண்டாம் நிலை:

    என்னென்ன எனக்குத் தெரியவில்லை என தெரிந்துகொள்ளும் நிலை..

    விழிகளும், செவிகளும் மனதுக்குச் சாளரங்களாகி செய்திகள் அனுப்பும் நிலை -
    அடடா..இதெல்லாம் எனக்குத் தெரியவில்லையே என ஏங்கும் நிலை..

    கற்கத்தொடங்கும் மாணவன் ஆசானைப் பார்த்து வியக்கும் நிலை..

    புதிதாய் வயலின் வகுப்பில் சேர்ந்தால், வித்வானான குருவைப்பார்த்து ,
    அவர் விரல் விளையாட்டுகளைப் பார்த்து வருமே
    அந்த அழகான மலைப்பு நிலை..

    (கவிதை எழுதலாம் என எண்ணம் வந்து, ஆதவா, பூ, ராம்பால், நண்பன், ஷீ-நிசி, லெனின், ஓவியா...............................
    இவர்கள் கவிதைகளை வாசிக்கும் வாசக-ரசிகனுக்கு வரும் நிலை..)


    மூன்றாம் நிலை:

    அறிவு விழித்திருந்து, அணு அணுவாய் வழிநடத்த புதிய செயலை -ஆற்றலை நாம் புதிதாய்க் கற்று -கைகொள்ளும் நிலை..

    பக்கத்தில் சொல்லித்தருபவர் இருக்க, கொஞ்சம் பிரேக் இளக்கி, கொஞ்சம் வேகம் முடுக்கி,
    அழுந்தப்பற்றிய கையால் திசை திருப்பி கார் பழகும் அந்த நிலை..

    ஏறும் மூங்கில் ஏணியின் ஒவ்வொரு கணுவும் -
    கண் பார்க்க, கால் சரியாய்ப் பதிய, கை பிடித்துக்கொள்ள செயல்படும் கற்றல் நிலை..

    நடைவண்டி விட்டு முதல் முதலாய் தளர்நடை போடும் , பெற்றவரையும் மற்றவரையும்
    ஓரப்பார்வையால் பார்த்து அங்கீகாரம் வேண்டும் பாப்பா நிலை..


    நான்காம் நிலை:

    இது தன்னை மறந்து, (பீறிட்டு ) சிக்கலான செயல்களையும் அநாயசமாய் சிறப்பாய் செய்துவிட்டு
    போய்க்கொண்டே இருக்கும் நிலை..

    நரேன் கார்த்திக் காரோட்டும் நிலை..

    பாலா பாடும் நிலை..

    கார்ல் லூயிஸ் ஓடும் நிலை..

    திறனர் நிலை...


    ------------------------------------------

    நான்காம் நிலையில் உள்ளவர் ஆசான் பொறுப்பேற்கும்போது
    அவர் நான்காம் நிலையில் இருந்து, மூன்றாம் நிலைக்கு
    மிகவும் முயன்று, மனக்குவிப்பால் மீள்நடை நடந்து வந்தால்மட்டுமே..

    இரண்டாம் நிலையில் வரும் மாணவனுக்குப் பாடம் சொல்ல முடியும்..

    எல்லா திறனரும் நல்ல ஆசிரியர் ஆகிவிட முடியாது.
    அவர்களால் செய்ய முடியும்...
    (ஒரு மின்விளக்காய் அவர்கள் ஒளிவீச முடியும்..

    ஆனால் இன்னொரு தீபத்தை ஏற்ற முடியுமா?)

    ஆதவன் நமக்காக ஒரு நிலை இறங்கி வந்து இங்கே சொன்ன பாடங்கள்.....

    ஆசிரிய இலக்கண வேதங்கள்...

    ஆதவனால் இது முடியும்..
    ஏனெனில் ஆதவன் ஒரு தீபம்..
    Last edited by இளசு; 02-04-2007 at 09:07 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    அபிமான ஆதவா அவர்களுக்கும் என் அருமை இளசு அண்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி. நானும் விரைவில் உங்களால் கவிஞன் ஆயிடுவேன், இப்ப இரண்டாவது நிலையில் இருக்கேன் அண்ணா

  7. #55
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இளசு அண்ணாவின் பதிவை நேற்றே பதிக்கும் போதே கண்டுவிட்டேன். இருந்தாலும் நான் கிட்டத்தட்ட நாலைந்து முறை படித்துப் பார்த்தேன்..... உண்மையில் என்னுள் இதயம் சிலிர்த்தது.. இளசு அண்ணாவின் பாசமழையில் சலதோசமின்றி நனைகிறேன். என்ன கைமாறு செய்யமுடியும்!

    நிலைப்பாடுகளை சரியான முறையில் அழகாய் விளக்கி எழுதி ஆச்சரியப்படுத்த இளசு அண்ணாவால் மட்டுமே முடியும்... எனக்குள் பல தெளிவுகள் உண்டாகி இருக்கிறது. அதேசமயம் பயமும்..... நான் எதிர்பார்க்கும் அளவிற்கு கொடுப்பேனா என்று பயம்... இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறது இளசு என்ற செந்நிற வர்ண வடிவில்..

    கூடவே ஒட்டியாக மாற்றப்பட்டிருப்பது இன்னும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்...அதற்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லக் கடமமப்படுகிறேன்.
    நண்பர்கள் ஒத்துழைக்கும் பஷத்தில் நாம் சிறந்த கவிஞர்கள் ஆவோம்..... நம்பிக்கை என்றுமே வாழ்க்கையில் மூன்றாம் கை...

    மதுரகன் அனுபவங்களும் அருமையாக இருக்கிறது/ இன்னும் தொடருங்கள் நண்பரே! நாம் மட்டும் எழுதினால் போதுமா என்ன? மற்றவர்களின் வார்த்தைப் பிரயோகம் பார்த்தபின்னரே நான் எழுதும் கவிதைகளுக்கெல்லாம் அர்த்தமிருக்கும்.........

    பார்த்திபன் அவர்களே! முன்னம் எழுதிய கவிதைகள் கண்டேன்... எமக்குத் தெரிந்த விஷயங்களை எழுதுகிறே இங்கே... உமக்கு அதில் எடுத்துக்கொள்ள விடயமிருந்தால் நிச்சயம் நான் பெருமையும் பயனும் கொள்வேன்... விரைவில் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறேன்...
    ---------------------------------------------------------------
    நண்பர்களே! இதுவரை நாங்கள் சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு கவிதை எழுதி இருப்பின் தயவு செய்து பதியுங்கள்... நாங்கள் செல்லும் பாதை சரிதானா என்று சோதித்துக்கொள்ள உதவும்... தயக்கம் மட்டும் வேண்டாம்... இங்கே கேலியாக யாரும் பார்க்க மாட்டார்கள். பென்சிலின் முனை முதலில் மரத்தூள் மூடியவாறு பட்டையாக இருக்கும்... கூர்படுத்த படுத்த முனை எவ்வளவு அழகாய் தெரியும் பார்த்தீர்களா? அதுபோலத்தான்.... ஒருவேளை இங்கே பதிக்க விருப்பமில்ல்லை என்றால் எங்களுக்கு தனிமடலாவது அனுப்புங்கள்...
    உங்கள் எண்ணம் மட்டும்தான்... அதில் என்ன தவறு என்ன சரி என்பதை நாங்கள் சொல்லுவோம்...... அவ்வளவுதான்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #56
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    பார்த்திபன் அவர்களே! முன்னம் எழுதிய கவிதைகள் கண்டேன்... எமக்குத் தெரிந்த விஷயங்களை எழுதுகிறே இங்கே... உமக்கு அதில் எடுத்துக்கொள்ள விடயமிருந்தால் நிச்சயம் நான் பெருமையும் பயனும் கொள்வேன்... விரைவில் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறேன்...
    ...

    நிச்சயம் எழுதுகிறேன் என் அபிமான ஆதவா அவர்களே

  9. #57
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நண்பர்களே! ஏதோ இரு கவிகள் எழுதுங்கள்.. எனது அடுத்த பாகத்திற்கு வசதியாக இருக்கும்........
    ---------------------------------------------------------------
    கவிஞர்களே! உங்கள் அனுபவத்தை இங்கே நான் மீண்டும் வேண்டுகிறேன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #58
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    கவிதை எழுதுவதில் என்னைப் பொருத்தவரை 4 நிலைகள் உள்ளன.
    1.வர்ணனை
    2.பிரச்சனைகளைக் கையாளுதல்
    3.சிறுகதை
    4.கதை

    1. வர்ணனை
    இது கவிதை எழுதுவதின் முதல் நிலை. ஏதாவது ஒரு கருவை எடுத்துக் கொண்டு, அதைப் பற்றி விதம் விதமாய் சிந்திப்பது.
    கரு என்பது ஒரு பொருளாக, செயலாக, நிகழ்வாக இருக்கலாம்.
    உதாரணமாக, 'மழை" என்று எடுத்துக் கொண்டால்,

    மேகக் குடையில் யார் ஓட்டை போட்டது?
    இந்த பூமித் தலையில் நீர் அப்படியே வழிகிறதே!

    ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல்
    பூமியின் தலையிலேயே எச்சில் துப்பும் மேகங்கள்!

    இதில் கொஞ்சம் காமெடி/சமூக அவலம் / சமூக நடப்புகளையும் சேர்க்கலாம்.

    காமெடி

    என்ன மேகமே! நிலவை 'சைட்' அடிக்கிறாயா?
    ஜொள்ளில் பூமியை நனைக்கிறாயே!

    சமூக அவலம்

    என்ன மேகமே? உங்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு கிடையாதா?
    தண்ணீர் குழந்தைகளை 'மளமள'வென்று பெத்துக் கொண்டேயிருக்கிறீர்களே!

    சமூக நடப்பு

    மேகமே! ஜாதிச் சண்டையா அங்கேயும்?
    இவ்வளவு வெண்ரத்தம் எங்கள் மேல் கொட்டுகிறதே!

    வர்ணனைகளில் வசதி என்னவென்றால், எதை வேண்டுமானாலும் நாம் நினைத்து அதை வைத்து எழுதலாம். எதை வேண்டுமானலும் ஒன்றாக இதில் கலக்கலாம். அறிவியல், இலக்கியம், வரலாறு போன்ற மூன்றையும் இங்கே ஒன்றாக கலக்கி எழுதலாம்.

    வள்ளுவனின் நெறிமுறைகள்!
    கம்பனின் கற்பனைகள்!
    ரவி வர்மாவின் ஓவியங்கள்!
    பாரதியின் கவிதைகள்!
    காந்தியின் அஹிம்சா!
    மழலையின் சிரிப்பு!
    பூக்களின் அழகு!
    மான்களின் துள்ளல்!
    குயிலின் குரல்!
    கொஞ்சம் நுனி மூக்கு கோபம்!
    சொன்னவை அனைத்தையும்
    சோதனைக் குழாயில் போட்டு
    சொர்க்கத்தில் வைத்து
    98.6 F-ல் ஆராய்ந்த போது
    அவதரித்தவளே!

    இந்த நிலைதான் கவிதை எழுதுவதன் முதல் நிலை. புதியவர்கள் இந்த நிலையில் ஆரம்பிக்கலாம்.

    2.பிரச்சனைகளைக் கையாளுதல்
    இந்த நிலையில் சின்ன பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு, அதன் தாக்கம், அதன் விளைவு, அதற்கு தீர்வு என்ற முறையில் எழுதுவது.
    இதை திரைப்படத்துறையில் 'குறும்படங்'களோடு ஒப்பிடலாம்.
    பிரச்சனைகளைக் கையாளுதல் = வர்ணனை + அதன் தாக்கம/ அதன் விளைவ / அதற்கு தீர்வு

    உதாரணமாக காதல் தோல்வி, தண்ணீர் பஞ்சம், பூகம்பம் .... இவற்றை சொல்லலாம்.

    குஜராத் பூகம்பம்
    ==========

    (ஜனவரி 26, 2001-ல் குஜராத் பூக்கம்பத்தை உலுக்கியது ஒரு பூகம்பம்.
    அந்த பூகம்பம் பறித்த பூக்களுக்கு, இக்கவிதை சமர்ப்பணம்.)

    கும்பாபிஷேகம் நாளை என்று
    குஷியாய் இருந்த கோவில்கள் எத்தனையோ!

    மணநாள் நாளை என்று மயக்கத்திலிருந்து
    பிணமாய் போன மனங்கள் எத்தனையோ!

    எதைக் கண்டு சிலிர்த்தாய் பூமித்தாயே!

    மனிதனை உண்ணவா, உன் மேல் தாடையை அசைத்தாய்?
    இல்லை,
    கட்டிடங்கள் விழவா நீ கரகாட்டம் ஆடினாய்?

    வரலாறு எழுதவா நீ தகராறு செய்தாய்?
    சரித்திரத்தில் இடம் பெறவா இந்த தரித்திர வேலை செய்தாய்?

    குடியரசு அன்று கும்மாளம் அடிக்கலாம் என்றிருந்து
    கூழாகிப் போன குழந்தைகள் எத்தனையோ!

    ஒரு வேளை பசிக்கு, ஊரையே அழித்தவளே!
    என் பூமித்தாயே,
    "தாய் மண்ணே வணக்கம்" என்றால் இனி மணக்குமா?

    அன்னையே நீயும் அனைத்துண்ணி என்று சொல்லவா
    அத்தனையையும் தின்றாய்?

    அகழ்வாரைத் தாங்கும் நிலமா நீ?
    அநியாயமாய் அத்தனை பேரையும்
    அரை நொடியில் அழித்து விட்ட பிறகும் கூட,
    வள்ளுவா! என்ன தாமதம்?
    குறளை மாற்றி எழுது!

    அணுகுண்டை உன் மேல் போட்ட போது
    அமைதி காத்து விட்டு - நாங்கள் அமைதியாய் இருந்த போது
    ஆடித் தொலைத்து விட்டாயே!

    உன் முகத்தின் பருவாய் வீடு போட்டோம்!
    உன் கரத்தின் ரேகையாய் ரோடு போட்டோம்!
    வேறு என்ன பாவம் செய்தோம்?

    உன் பொன்னை தோண்டி எடுத்து
    எங்கள் பெண்கள் அணிவதால்
    சண்டைக்கு வந்த சண்டாளியா நீ?

    அத்தனை பேரும் உன்னை மிதிப்பதால்
    ஆத்திரப்பட்டுத் தான் ஆடித் தொலைத்தாயோ?

    எங்கள் மழலைகளின் மயக்கும் மந்திரப் புன்னகையை
    ரசிக்கும் ரசனை கூட இல்லாத ராட்சசியா நீ?

    உன் குழந்தைகளை நீயே அழுக்கும் நீ
    எங்களுக்கெல்லாம் தாயா? அல்லது
    தாய் என்று ஏமாற்றி வந்த பேயா?

    பூமியே! நிச்சயம் உனக்கு அழிவு உண்டு!
    இத்தனை பேரை கொன்று விட்டு
    தண்டனை கிடைக்காமல் போனால் அது தவறு!
    தவறு செய்தவன் தண்டிக்கப் படவேண்டும்!
    இது இயற்கையின் நியதி!
    அதாவது, நீயே உனக்கு விதித்துக் கொண்ட விதி!

    3. சிறுகதை:
    இதை திரைப்படத்துறையில் 'திரைப்படங்'களோடு ஒப்பிடலாம். பாத்திரங்களை படைத்து, பிரச்சனைக் கூறி, முடிவு சொல்லல்.
    இதற்கு வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்" சொல்லலாம்.

    4. கதை:
    இதை திரைப்படத்துறையில் 'திரைப்பட விழா"க்களோடு ஒப்பிடலாம். உதாரணம் "கம்ப ராமாயணம்".


    என்னைப் பொறுத்த வரையில், வர்ணனை & பிரச்சனைகளைக் கையாளுதல் - இதை எடுத்துக் கொண்டாலே பெரும்பாலான கவிதைகளை
    இதில் அடைக்கலாம்.
    கவிதை எழுத ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள்!!!!
    Last edited by lenram80; 05-04-2007 at 12:17 PM.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  11. #59
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அருமை ராம்... இதான்பா... புடிச்சிக்கோன்னு எளிமையாக அள்ளி வீசியிருக்கிறீர்கள்....
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  12. #60
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமை ராம்!!! பூ சொன்னபிறகு நான் என்ன சொல்ல?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 5 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •