Page 4 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 179

Thread: கவிதை எழுதுவது எப்படி?

                  
   
   
  1. #37
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஷீநிஷியின் பாடமும் அருமை.
    காதல்க் கவிஞர் ஓவியாக்கா எப்படி எழுதுகின்றார் என்பதை சொல்ல மாட்டாரா?

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி நண்பர்களே! இனி அடுத்து..

    முன்பு எழுதியது முன்னுரையாகக் கொண்டால் இனி எழுதப்போகிற கருத்துக்கள் யாவும் விளக்கவுரையாகக் கொள்ளலாம்.

    முதல் நிலை :

    ஓவியனுக்கும் காவியனுக்கும் முதலில் தேவை
    • கரு
    • நிகழ்வுகளை அப்பட்டமாக படம்பிடிக்கும் தன்மை
    • கற்பனை
    • திறமை
    நமக்குள் இது எதுவுமே இல்லையென்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் வளர்த்திக்கொள்ள வேண்டும். நம் கண்கள் தான் எல்லாவற்றுக்குமே ஆதாரம் ; ஆகாரம்.
    நாம் கண்களை ஒரு பதிவகமாக வைத்துக்கொள்ளவேண்டும்.. அதாவது நாம் என்ன காண்கிறோமோ அதை மனதில் போட்டு அசைத்துக்கொண்டே இருக்கவேண்டும்..
    அதுமட்டும் போதாது. காண்பவற்றிற்கு ஏற்ப சம்பந்தமான பொருள்களையும் மனதில் கொண்டு வரவேண்டும்....

    உதாரணத்திற்கு:
    மழையை காண்கிறோம்... உடனே நம் மனதில் நினைப்பவை என்னவாக இருக்கவேண்டுமென்றால்,

    மேகம், மின்னல், இடி, தூறல், சாரல், துளி, தண்ணீர், குடை, சளி, வானம், மண், மண்வாசனை, சேறு, இருமல், இன்னும் பல...

    இம்மாதிரி நாம் நினைப்பது எப்படி என்றால், ஒன்றிற்கொன்று தொடர்பு வைத்துக்கொண்டே நினைத்தால் தானாகவே வந்துவிடும்.
    உதாரணத்திற்கு (வேறு தருகிறேன்)

    நெருப்பு என்று வைத்துக்கொள்வோம். உடனே தொடர்புடைய வார்த்தை

    நெருப்பை அணைக்க நீர்;
    நெருப்பை பற்றவைக்க தீக்குச்சி
    நெருப்பு பற்றினால் எரியும்
    நெருப்பு எரிந்தால் சாம்பல்
    நெருப்புக்கு இரும்பு இரையாகாது..
    இப்படி பல.....

    இதில் இன்னொன்று விசேசம் என்னவென்றால் மேற்கண்ட நீர், தீக்குச்சி, சாம்பல். இரும்பு போன்றவைகளால் இன்னும் பல வார்த்தைகள் சிக்கும்.........
    சரி.. இது இன்னும் அடுத்த பாகத்தில் விரிவாகக் காணலாம்..

    கவிதை புனைய நாம் இயற்கையை ரசிக்கவேண்டும்.. இயற்கையிலிருந்து கிடைக்கும் கவிதைகள் பலப்பல.... மேலே சொன்ன மழை , நெருப்பு போன்றவைகளும் இயற்கையே!! நாம் உவமை அல்லது உருவகங்கள் சொல்ல கண்டிப்பாக ஒப்பிலா பொருள் தேவை.. அது பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே அமையவேண்டும்.

    நாம் கண்களால் காணுபவை யாவும் இயற்கையே! அதனால் கவிதையில் இயற்கைத்தனத்தை மிகுதியாக இடுவதில் தவறில்லை...
    கற்பனைகள் வளர இதுவொன்றே மிக அருமையான களம்.

    நமக்கு வார்த்தைகள் எப்படி பிடிப்படுகின்றது என்பதைப் பார்த்தோம்.. ஒரு கவிதைக்கு கரு கிடைத்ததும் அதை அலங்காரப்படுத்த வார்த்தைகளால் மட்டுமே முடியும்.. வார்த்தைகளை வலிமைப் படுத்த நாம் பல கவிதைகள் இயற்றி , கருவை சொன்ன விதத்தைச் சுருக்க வேண்டும்... அது இரண்டாம் நிலை.. அது பின்பு பார்க்கலாம்.

    சரி தற்போது வரை பார்த்தவரை நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..
    நீங்கள் கண்களை மூடுகிறீர்கள். ஏதாவது ஒரு இயற்கையைச் சார்ந்த பொருள்களை நினைக்கிறீர்கள். அதை அப்படியே எழுதுகிறீர்கள்...

    இனி அதைவைத்து என்ன செய்யலாம்.?

    நான் சொல்லும் இந்த பாடங்கள் யாவும் முதலில் காதலை மையமாக வைத்தே செல்லும்.. அதுதான் மிகவும் எளிது. சமூகக் கருத்துள்ள கவிதைகளுக்கு சற்று வலிமையான வார்த்தைகள் தேவை...

    இயற்கை பற்றிய உங்கள் நினைப்பு + காதல் + பொய் = அழகிய கவிதை...

    உதாரணத்திற்கு :

    மேகத்தைவிடவும் மென்மை
    உன் கூந்தல்
    மின்னலை விடவும் கூர்மை
    உன் கண்கள்..

    இதில் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் மென்மை, கூர்மை.... குணங்களைப் பற்றி நாம் சொல்ல இருக்கிறோம்........... அல்லது இப்படி க்கூட எழுதலாம்.

    மேகம் போன்ற கூந்தல்
    மின்னல் போன்ற கண்கள்

    அது எப்படி மேகம் போன்ற கூந்தல்? மேகத்திற்கும் கூந்தலுக்கு என்ன சம்பந்தம் என்று கேள்விகள் எழலாம்... அங்கேதான் பொய் விளையாடுகிறது...
    என்ன என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்...

    தொடரும்..
    Last edited by ஆதவா; 29-03-2007 at 07:32 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நல்ல திரி. சுவராஸ்யமாக இருந்தது.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #40
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அடுத்த பாகத்தை(யும்) மிக வலுவாகக் கொடுத்த ஆதவனுக்குப் பாராட்டுகள்.

    தொடர்புபடுத்தல், சங்கிலியாய் நினைவுப் பெட்டகத்தில் இருந்து சொற்கோர்வைகளை அள்ளல்,
    இயற்கை அன்னையிடமிருந்து சலிக்காமல் உவமைகளை இரவல் வாங்கல் என
    கவிதையை வடித்து, அலங்கரிப்பதற்கான அடிப்படைக் கூறுகளை சொன்ன விதம் பாந்தம்!

    காதலிக்காமல் கூட இருந்துவிடுங்கள்..
    காதல் கவிதை எழுதாமல் இருக்காதீர்கள்..

    ஆதவன் பார்வையால் வெளிச்சப்பார்வை பரவட்டும்..

    பாராட்டுகள் ஆதவா.. தொடர்க இளவலே!
    Last edited by இளசு; 29-03-2007 at 08:17 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அருமை ஆதவா.. நெருப்பை வைத்து எப்படி வார்த்தை அமைக்கலாம்..
    மேகம், மின்னல்.. என உதாரணங்களுடம் பாடம் பிரமாதம்...

    இன்னும் நிறைய எழுதி.. புத்தகமாக தொகுத்து வெளியிடலாம்.

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இரண்டாம் பகுதியும் நன்றாக செல்கிறது ஆதவரே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #43
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கலக்கல் ஆதவா

  8. #44
    புதியவர் பண்பட்டவர் திராவிடன்'s Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    அபுதாபி
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க அருமையான ஒரு திரி.அனைவரையும் கவிஞர்களாக மாற்றும் என்னமோ.வளர்க தங்களின் முயற்சி,

  9. #45
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by benjaminv View Post

    எப்படி ராசா.. உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது...
    சும்மாவே மன்றத்தில் வலம் வரும் மக்கள் காதல் கவிஞர்கள் ஆயிடுறாங்க...




    Quote Originally Posted by benjaminv View Post
    இளசு, கவிதா, நண்பன், ப்ரியன், பிரியன் , பூ, பாரதி, ஷீ, ஓவி என்று எல்லோரும் கண்டிபாக தங்கள் கருத்துகளை பதிக்க வேண்டிகொள்கிறேன்.
    பெஞ்சு,
    நேரம் இரூப்பின் அவசியம் செய்வேன் குருவே!!!
    மன்னிக்கவும். தற்ப்பொழுது கொஞ்சம் பிசி.
    Last edited by ஓவியா; 30-03-2007 at 10:54 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #46
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மல்லி மன்றத்தை மாமல்லி மன்றமாக இந்த ஒரு சிறந்த பதிவு போதும். (தொடர்ந்தால் ஹி ஹி ஹி)


    ஆதவாவின் பாடம் கண்டு அசந்துப் போனேன். ஆதாவின் கவிதை நுணுக்கம் அப்பாடா....சபாஷ் ஆதவா

    இளசு வா கொ.... என்பது போல் சூப்பரான பதிவு. பாராட்டுக்கள் தல.

    ஷி-நிஷியின் பதிவும் சும்மா தூள்தான். எப்படிதான் .....பலே ஷி

    பாரதியண்ணா, பூ, லெனின், மதுரகன், டாக்டர் ஆனந்த், நரேன், மோகன், பெஞ்சமீனின் பதிவுகளை அடியேன் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன்.
    (எப்படி கவிதை எழுதுவது என்று)


    பாராட்டுக்கள் ஆதவரே.
    Last edited by ஓவியா; 30-03-2007 at 11:10 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #47
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by நரன் View Post
    ஷீநிஷியின் பாடமும் அருமை.
    காதல்க் கவிஞர் ஓவியாக்கா எப்படி எழுதுகின்றார் என்பதை சொல்ல மாட்டாரா?
    நன்றி.

    அவசியம் எழுதுகிறேன் நரேன். கொஞ்சம் அவகாசம் தாருங்கள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  12. #48
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி நண்பர்களே!

    ஏதோ எழுதவேண்டுமே என்று எழுதியது.... உங்களின் பதில்களைக் கண்டு மீண்டும் மீண்டும் எழுதத் தோணுகிறது...
    சரி.. அடுத்த பகுதி...


    இந்த பகுதியில் நாம் காண இருப்பது..
    • குணங்கள்
    • பொய்
    ஒரு பொருளின் குணத்தினால் நாம் ஒப்பிடும்போது கவிதையின் கனமும் அழகும் கூடும். அதை பொய் கலந்து மட்டுமே
    சொல்ல முடியும்.. இனி இதைப்பற்றி காண்போம்

    குணங்கள்

    முந்தைய பதிவில் நாம் இன்ன பொருளை நினைக்கவேண்டும் என்பது பற்றி அறிந்தோம். தற்போது அதை எப்படி
    கோர்ப்பது என்பது பற்றி தெளிவாக காணலாம்..
    உதாரணத்தோடு செல்வோம்...


    நம் கண்களின் வழியே காண இருப்பது ஒரு மரம்.

    மரத்தை நினைக்கையில் நமக்கு உடனே நினைவுக்கு வருவது வேர், மரம், கிளை, இலை, பூ, பூவின் உதிர்வு அல்லது
    இலையின் உதிர்வு, காற்றால் மரம் அசைவது போன்றவைகள்..
    இதன் குணம் என்னென்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.. கவிதையில் முக்கியமாக நாம் எடுத்துக்கொள்ள

    இருப்பது ஒரு பொருளின் குணம்.... மேகம் மென்மையாக இருக்கிறது என்பதால் அதை " மேகத்தைப் போல கூந்தல் "
    என்று கவிதை சொல்லுகிறோம். பொருத்தமில்லாமல் எழுதினால் அதில் அர்த்தமில்லை அல்லவா? உதாரணத்திற்கு "
    இடியைப் போல கூந்தல் "

    இதுபோல மரத்தின் குணம் பற்றி அறிவது...

    உறுதியானது வேர்
    நிலையானது மரம்
    பொருளுக்கேற்ப கிளையின் பொருத்தம் மாறும்..
    மென்மையானது பூ
    பூவின்உதிர்வு என்பது ஒரு இழப்பைக் குறிக்கிறது.


    இம்மாதிரி பல.

    " வேர் போல உறுதியானது நம் காதல் "
    " மரம் போல நிலையாக நிற்கிறாய் நீ "
    " உன் இதயம் பூ போல மென்மையானது "
    " என்னிடமிருந்து ஒரு பூவின் உதிரலாய் சென்றுவிட்டாய் "
    " பூவின் உதிர்தல் கண்டு மரம் அழுகிறது. "


    எப்படிங்க இந்த மாதிரி யோசிக்கிறது என்று கேட்பது தெரிகிறது.,,,
    கடைசி பாராவை படியுங்கள்..


    நாம் காண்பவற்றின் குணங்களால் மட்டுமே நாம் உவமைகளைப் பொருத்த முடியும். சிலவற்றிற்கு விதிவிலக்கும் உண்டு,,,

    பொய்:

    நம் அன்றாட வார்த்தைகள் பல பொய்யாகவே சொல்லிவருகிறோம்.. இங்கே கற்பனை கலந்த பொய்களை அள்ளி
    வீசவேண்டும்.. நம் பொய்கள் எல்லாமே நிஜமாகத் தோன்றுவதுதான் கவிதையின் சிறப்பு.. எந்த ஒரு இடத்திலும் இதை
    பயன்படுத்தலாம். நாம் எழுதும் பொய்கள் பொருத்தமாக இருந்தாலே போதுமானது..........
    " நீ நிலவைப் போல அழகு " என்றால் அது பொய்தானே! உண்மையில் நிலவுக்கு என்று அழகு ஏது? இம்மாதிரி சில

    கற்பனைகளை கலந்து விட்டால் பொய் நிஜமாகிவிடும்.

    " மான்களின் கண்கள் உனக்கு " மானின் கண்களை நாம் அவ்வளவாக கண்டிருக்க மாட்டோம்.. இருப்பினும் பொய்
    இங்கே விளையாடுவது பாருங்கள்..
    " தேன் போன்ற இனிமையான பற்கள்" தேனுக்கும் பற்களுக்கும் என்ன சம்பந்தம்? சும்மா போட்டு விடுவதுதான்.... பற்கள்

    உங்களுக்கு பிடிக்கவில்லையா? சொற்கள் என்று மாற்றிவிடலாம்....

    காதல் எந்த உவமைக்கும் பொருந்தும். சரி இப்போது நான் உதாரணம் கொடுக்கப் போவதில்லை. நீங்களாகவே
    வார்த்தைகளை வைத்து கவிதை அமையுங்கள்..

    நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.........

    காதலியை வர்ணிக்கிறீர்கள்... நீங்கள் கண்ட ஒரு இயற்கைப் பொருளை வைத்து................... அதன் குணத்தை வைத்து,,,
    (கவிதை கற்கும் நண்பர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.)


    ------------------------------------------------------------------------------------

    ஒரு பொருளைக் கண்டால் அதைப் பற்றி நன்கு சிந்திப்பது ஒன்றே கவிதையை அழகாக எழுதும் வழி.. ஒரு இலையை
    காண்கிறீர்கள்...

    அது மெல்லியதாக இருக்கிறது..
    பச்சையாக இருக்கிறது
    அதில் இலையின் நரம்புகள் இருக்கிறது
    காம்பு இருக்கிறது
    சற்றே இதய வடிவில் இருக்கிறது. அல்லது நீளமான வடிவில் இருக்கிறது
    காகிதம் போல கிழிந்துவிடும்
    இலையின் உதிர்வுக்குப் பின் அதன் காலம் குறைவு
    இலைதான் பின் சருகாக மாறும்
    சருகாக மாறியபின் பொடிப்பொடியாக போய்விடும்


    இம்மாதிரி ஒவ்வொரு பொருளையும் ஆராய்ச்சி செய்யவேண்டும்................ இது நிச்சயம் சாத்தியமே!! இதை எப்படி
    ஒப்பிடுவது என்பது பிறகுதான்.. முதலில் நமக்கு வார்த்தைகள் அமையவேண்டும். கருவுக்கு சம்பந்தமே
    இல்லையென்றாலும் அந்த வார்தைகளை நாம் சம்பந்தப்படுத்திவிடலாம்.............

    நினையுங்கள்.. கவிதை எழுதுங்கள்...

    சில கவிதைகள் உங்களிடமிருந்து வந்தபின் அடுத்த பாகத்தைத் தொடருவேன்.....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 4 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •