Page 3 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast
Results 25 to 36 of 179

Thread: கவிதை எழுதுவது எப்படி?

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by ooveyan View Post
    அப்ப நீங்கள் எழுதினது கவிதையில்லை கழுதையாக்கும்

    எழியாரை வலியார் கேட்க, வலியாரை தெய்வம் கேட்குமாம்.

    என்னை நக்கலடிக்கிறீர் ஓவியரே, உமக்கு மேலும் உம்மை விட வல்லமை பொருந்தியவன் இருக்கத்தானே வேண்டும். அதுவரைக்கும் பொறுமை காக்கிறேன். தருணம் வரும்போது களத்தில் குதிப்பேன்.
    Last edited by பென்ஸ்; 28-03-2007 at 06:08 PM.

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஜாவா!! நீங்கள் வெற்றியாளர்.... முயற்சி செய்திருக்கிறீர்கள்... தயங்காமல் அந்த கவிதையை இடுங்கள்... நிச்சயமாக நாங்கள் கேலி செய்ய மாட்டோம்... எங்களின் மனம் அப்படிப்பட்டதல்ல...............

    மேலும் தொடர்ந்து பாடம் படியுங்கள்.. நிச்சயம் என்னால் உங்களை கவிஞனாக்க முடியும்...
    .
    உங்களின் ஊக்கத்திற்கு ஆயிரம் நன்றிகள். கூடிய விரைவில் என் திருப்தியுடன் பதிக்கிறேன்.

    பி.கு:- எனது ஆக்கத்தினை (கவிதை என்று சொல்லவே வெக்கமாக இருக்கிறது) படித்து உங்கள் திறமைகளை மழுங்கடிக்க விட்டுவிடாதீர்!

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நண்பர் ஜாவா!!! எல்லோருமே எடுத்த எடுப்பிலே மாபெரும் கவிஞனாக நாமெல்லாம் பாரதியா? சும்மா வுடுங்கப்பா!!! எனக்கு தனிமடலிலாவது அனுப்புங்க.... என்னதான் முயன்றிருக்கிறீங்கன்னு பார்ப்போம்... எனக்கும் பாடம் தொடர்ந்து செல்ல உதவியா இருக்கும்ல...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நண்பர்களே!

    நான் கவிதை எழுதும் முறை...

    சில கவிதைகள் நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும்..
    சில கற்பனையின் அடிப்படையில் இருக்கும்..

    நிஜ சம்பவங்கள் எழுதுவது என்றால் சுனாமி, கும்பகோணத்தீ உதாரணங்கள்..

    சுனாமி...

    சுனாமியின் போது என்னென்ன நடந்தது என்பதை எண்ணிப்பார்த்துக்கொள்வேன்..

    1. கடலோர மக்கள்.
    2. காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள்
    3. அங்கு விளையாடின சிறுவர்கள்
    4. தெருவெங்கும் ஓடினது...

    இப்படியான முக்கியமான கருப்பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்...

    1. கடலோர மக்கள்..

    இதை எப்படி கவிதை நடையில் அமைக்கலாம்..

    கடலோர மக்கள் நம்பியது கடலை...

    சரி!

    கடலோர மக்களுக்கு
    வாழ்வை அளித்தது கடல்..


    இன்றைக்கு என்ன செய்தது.. சுனாமி வந்து உறவுகளை பலர் இழந்திருக்கிறார்கள்..

    கடலோர மக்களின் உயிரை பலிவாங்கியது..

    ஒரு பகுதி கிடைத்துவிட்டது கவிதைக்கு..

    கடலோர மக்களுக்கு
    வாழ்வை அளித்தது கடல்
    கடலோர மக்களின் உயிரை பலிவாங்கியது..


    இது படித்துப் பார்த்தால் கவிதை நடையில் இல்லை.. சரி.. கொஞ்சம் வார்த்தைகளை அலசுவோம்...

    கடலோர மக்களுக்கு வாழ்வை அளித்தது, முதல் வரியில் எங்கெல்லாம் எதுகைகள் (எதுகை என்றால், அம்மா, சும்மா, கிரிக்கெட்டு, தற்கெட்டு, இப்படி அமையும் வார்த்தைகள்! கவிதைக்கு இதானே அழகு... டி,ஆர் இப்படி அமைப்பதில் கில்லாடி) அமையும் என்று பாருங்கள்..

    கடலோர, உடலோர.. வாழ்வை, வால்வை.. அளித்தது, அழித்தது..

    இந்த மூன்றில் அளித்தது, அழித்தது.. மிக பொருந்துகிறது...
    முதலில் கடல் கொடுத்தது.. பின் எடுத்துக்கொண்டது என்று சொல்லாடல் அமைக்க அளித்தது, அழித்தது.. எனபதை பயன்படுத்திக்கொள்ளலாம்..

    கடலோர மக்களுக்கு
    வாழ்வை அளித்தது;
    கடலோர மக்களின்
    வாழ்வையே அழித்தது!


    இதை இன்னும் மெருகூட்டி, காலங்களை சேர்த்துக்கொள்ளலாம்..

    இதுவரை
    கடலோர மக்களுக்கு
    வாழ்வை அளித்தது;
    இன்று
    கடலோர மக்களின்
    வாழ்வையே அழித்தது!


    மிகப்பெரிய பத்தி ஆகிவிட்டது.. நான்கு அடி வரி இருந்தால் படிப்பவருக்கு புரிந்துகொள்ள இலகுவாயிருக்கும்.. ஆறடியிலும் அமைக்கலாம் தேவைப்பட்டால்...

    இதுவரை
    கடலோர மக்களுக்கு
    வாழ்வை அளித்தது;

    இன்று
    கடலோர மக்களின்
    வாழ்வையே அழித்தது!


    இப்படி மூன்று மூன்றாய் பிரித்துக்கொள்ளலாம்..

    இதை இன்னும் கொஞ்சம் வேறுவிதமாய் நீங்கள் கடலைப்பார்த்து கேட்பது போலவும் மாற்றிக்கொள்ளலாம்..

    இதுவரை
    கடலோர மக்களுக்கு
    வாழ்வை அளித்தாய்;

    இன்று
    கடலோர மக்களின்
    வாழ்வையே அழித்தாயே!


    இப்படி...

    இந்த பாடத்தை தொடருகிறேன்.. உங்கள் எண்ணங்களைக் கூறுங்கள்.. புரியும்படி இருந்ததா இல்லையா என்று..
    Last edited by ஷீ-நிசி; 28-03-2007 at 05:50 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கலக்கல் கலக்கல்...... ஆஹா!!! நானும் நிறைய தெரிந்துகொள்ளலாம் போலத் தெரிகிறதே!!!.... எப்படி கருத்தை பிரித்தறியவேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்................... வொண்டர்,..

    நண்பரே! என்னோடு இணைந்ததற்கு மிகவும் நன்றி..... தொடரலாம் நாம் பல பாடங்கள்... (அட இப்படியாவது ஆசிரியர் ஆகலாம் பாருங்க..)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக தொடருகிறேன் ஆதவா.. ஆனால் இந்த திரியை அணைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. உம்மளவு ஒரு கவிஞரோ/கவிஞையோ உருவாகும்வரை...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    என்னைப் போன்றவர்களுக்கு இந்த கவிட்டுரை உதவியாக இருக்கும் .. தொடர்ந்து எழுதுங்க ஆதவா..

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ஷீ-நிசியும் இணைந்து கொடுப்பதில் மகிழ்ச்சி...

    உருவாக போகும் புதுக் கவிஞர்களுக்கு முன்னோடிகள் இங்கு கருத்துக்களை கொடுக்கிறார்கள்...

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    ஆதவா ஷீயின் பாடங்கள் அற்புதம். ஆனால் கவிதை எழுதுவது ஒரு spontaneous activity அல்லவா. திடீரென்று பீறிக் கொண்டு வரும் கவிதை எண்ணங்களை எவ்வாறு வரையறைக்குள் கொண்டு எழுதுவது. ஒருவேளை மனதில் வந்ததை எழுதிய பிறகு அதை மெருகேற்ற வேண்டுமோ?
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    ஆதவா ஷீயின் பாடங்கள் அற்புதம். ஆனால் கவிதை எழுதுவது ஒரு spontaneous activity அல்லவா. திடீரென்று பீறிக் கொண்டு வரும் கவிதை எண்ணங்களை எவ்வாறு வரையறைக்குள் கொண்டு எழுதுவது. ஒருவேளை மனதில் வந்ததை எழுதிய பிறகு அதை மெருகேற்ற வேண்டுமோ?
    நன்றி மோகன்
    திடீரென பீறிக்கொண்டு வருமாயினும் அதை வரையறைக்குள் அடுக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்................ பீறிட்ட எண்ணங்களை சுருக்கமாக அதேசமயம் புரியும்படியும் அடக்கலாம்... மற்றபடி மெருகேற்ற வேண்டியது பீறிட்டு வரும் கவிக்கு அல்ல.. மற்றைய கவிதைகளுக்கு அம்மாதிரி செய்யலாம்.. இது என் அனுபவம் மட்டுமே! எனக்கு பீறிட்டு வந்தால் எதுகையும் மோனையும் இல்லாமல் எழுத முடியாது. நான் பழகியதே மரபுக் கவிதையால்தான். ஆனால் ஒன்று மட்டும்..............
    கவிதையை செதுக்க வேண்டும்......... தேவையானதல்லாதவற்றை நீக்கிவிட்டு தேவையானவற்றைப் போட்டு................
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    என்னைப்பொருத்தவரை பீறிட்டு அதாவது உணர்ச்சிபெருக்கில் வரும் கவிதைகள் மிக எளிதில் எதுகை மோனைக்குள் அடங்கும்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஷீ-நிசியின் அருமையான பங்களிப்பும்
    மோகனின் தூண்டுகோல் கேள்வியை ஒட்டிய அலசலும்...
    இந்தக்கட்டுரையை செழுமைப்படுத்துகின்றன..

    பாராட்டுகள்.. தொடருங்கள்..


    (முடிவில் எல்லா மணிகளையும் கோர்த்து ( தேவையற்றதைக் கத்தரித்து) மாலையாக்குவது
    ஆதவனின் கைவண்ணத்தில் அமைய வேண்டுகோள்..)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 3 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •