Page 15 of 15 FirstFirst ... 5 11 12 13 14 15
Results 169 to 179 of 179

Thread: கவிதை எழுதுவது எப்படி?

                  
   
   
  1. #169
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    காட்சிபடுத்தும் கவிதைகள் : இரண்டாம் வகை.

    இந்த பதிவு எழுதுவதற்கு முன்னர் அலுவலகத்தில் மின்சாரமில்லை. அது இரவு நேரம். ஒரே புழுக்கமாக இருந்தது... உடனே எனக்குத் தோன்றிய எண்ணம்..

    இரவு நேரத்தில் மின்சாரத் தடை
    இருக்கும் இடத்தில்
    ஒரே புழுக்கம்
    அதனால் வியர்வை.


    இதுதான் செய்தி. இங்கே "இருக்கும் இடத்தில்" தேவையில்லை. ஏனெனில் நாம் இருக்கும் இடத்தில் தான் மின்சாரத்தடை என்பதால் அந்த வார்த்தைகள் தேவையில்லை. படிப்பவர் நெஞ்சில் தானாகவே அந்த வரி அமைந்துவிடும்.. அடுத்து, புழுக்கத்தால்தான் வியர்வை வரும். ஆகவே புழுக்கம் என்ற வார்த்தையும் கட்.

    இரவு நேரத்தில் மின்சாரத் தடை
    அதனால் வியர்வை.


    இன்னும் கவிதை வடிவம் வரவில்லை. "வியர்வை வழிகிறது" என்று இடுவோமா?

    இரவு நேரத்தில்
    மின்சாரத்தடை
    வியர்வை வழிகிறது.


    வியர்வை வழிகிறது என்ற வார்த்தை அதிக உபயோக வார்த்தையாக இருக்கலாம். சற்றே மாற்றினால் வடிகிறது என்று வரும்.. இல்லையா?, அதேசமயம் மேற்கண்ட கவிதை சற்றே வார்த்தைகள் ஒட்டாமல் இருக்கின்றன. ஆகவே இறுதியாக மாற்றியமைத்தபடி,

    இரவு நேர மின்சாரத் தடையால்
    வடிகிறது
    வியர்வை.


    அவ்வளவுதான்... இதில் நீங்கள் பல்வேறு அர்த்தங்கள் பொருத்திக் கொள்ளமுடியும். அதுசரி, இதெல்லாம் ஒரு கவிதையா என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.. ஒரே கருத்தை எழுதிக் கொண்டிருப்பதைவிட சற்று வித்தியாசமாக சிந்திப்போம். உலகம் வித்தியாசப்படுபவர்களை மட்டுமே நோக்கும். உங்கள் சிந்தனை வித்தியாசமாக இருக்கவேண்டும். மேற்படி மூன்று வரிக் கவிதை பிற்பாடு நீங்கள் உபயோகித்துப் பழகலாம்..

    என்னிடம் வந்த ஒரு மாணவனிடம் ஆங்கிலம் பற்றி சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவன் சொன்னான்,

    Please come
    The office
    Meet him
    Go fast


    போன்ற சிறு சிறு வார்த்தைகளை விடுத்து பெரிய வார்த்தை சொல்லிக் கொடுங்கள் என்றான்... நீங்கள் யோசித்துப் பாருங்கள்.. இந்த சிறு வார்த்தைகள் இல்லாவிடில் எந்த பெரிய வார்த்தைகளும் அமைக்கமுடியாது,... சிறு சிறு வார்த்தைகள் சேர்ந்ததுதான் ஒரு மொழியே!! இல்லையா?

    சிறு சிறு கவிதைகள் மூலமும் பெரிய கவிதை எழுதி வாருங்கள். வெற்றி நிச்சயம்..


    கண்ணயரா இரவில்
    ஒழிந்தோடும்
    ஓடையாய் வியர்வை..
    ................................
    மின்னலென மின்வெட்டோ..

    மாலை மட்டுமா
    இரவிலும் கண்ணாமூச்சு
    விளையாட்டு
    வழிந்தோடும் வியர்வையோடு
    மின்சாரத்தோடு..

  2. #170
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஜெயாஸ்தா View Post
    உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தது போலிருந்தது
    உடனடியாய் ஒரு கவிதை வேண்டுமாம்....
    உயிரைக் கேட்டால்கூட தருவேனே என்னுயிரே
    உடனடி கவிதை கேட்டால் எப்படியடி?

    தேமாவும் தெரியாது புளிமாவும் தெரியாது
    எதுகையும் தெரியாது மோனையும் தெரியாது
    தீபகற்பத்தை தீபாகற்பம் என்றெழுதி...
    வகுப்பறைக்கு வெளியே முட்டியிட்டவன் நான்...!

    சொந்தமாய் ஒரு கவிதை தந்தால்தால்தான்
    பந்தமாவாய் என்னோடு என்றாயே....
    கவிதை தராவிட்டால் கவிழ்ந்திடுமோ
    நம் டைட்டானிக் காதல்....?

    இரவு முழுவதும் முயற்சித்தேன்...
    தூக்கம் துறவு கொண்டது!
    பேனா பீரங்கியிலிருந்து காகிதகுண்டுகள்
    என் அறைமுழுவதும் சிதறியது..!

    எழுதுகோலால் நெற்றிதாக்கி யோசித்தபோது
    என்னுள்ளே ஒரு ஞாபகமின்னல்...!
    தமிழ்மன்றம்-கவிப்பட்டறை சென்று
    கவியெழுதுவது எப்படி என்று பயின்றால் என்ன?

    தண்ணியடித்தேன், டீக்குடித்தேன், புகைவிட்டேன்
    கவிதை வரவில்லை, கடுமையான வாந்திதான் வந்தது...!
    ஒன்றும் உதவவில்லை... ஒரு வரிகூட வரவில்லை
    கவிதையெழுத என்னால் முடியவில்லை

    கல்லூரிவரை காப்பியடித்தே தேறியவன்,
    காதலுக்கு ஒரு கவிதை காப்பியடிக்க
    மனசாட்சி தடுக்குதடீ... தோழீ- அந்த
    மானங்கெட்ட கவிதை நமக்கு தேவையாடி?


    கவியெழுதி தந்தால்தான் காதலென்றால்
    காதலிக்க தகுந்தவர்கள் ஆதவனும், ஷீநிசியும்தான்...!
    எனக்கு வேண்டாம் அந்த காதல்... போடி...
    நான் தேடப்போறேன் வேறு ஜோடி....!



    இந்தக் கவிதை எப்படி இருக்கிறது?
    சிலுசிலுத்த சிற்றோடை நடையில்
    எளிய எழுத்துக்களில் அழகிய
    எண்ணப் பின்னல்கள்.

  3. #171
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    கவிதை சொல்லப்போய் தமிழாசிரியரிடம் வாங்கிக்கட்டிகொண்டது

    படிக்கும் காலத்தில் (...ம் எங்கே படித்தோம் !!!) தமிழாசிரியர் ஒவொருவராக குறுங்கவிதை ஒன்று சொல்லச்சொன்னார். அதற்கு சற்று முன்புதான் அவர் கண்ண பிரானின் தோற்றதைப் "கூந்தல் கார்மேகம் ", 'நெற்றி வெண்மதி","கண்கள் கருமை","உடல் கருநீலம்" மற்ற, மற்ற ..... என்று வர்ணித்திருந்தார்.கவிதை சொல்லும் ஆசை யாரைத்தான் விட்டது . நானும் எழுந்து நின்று "ஐயா! "பல கடவுள்களை போற்றும் உலகில் கண்ணா பிரான் ஒரு "Multi colour Modern god " என்றேன். பாராட்டுவார் என்று நினைத்தேன். வரச்சொன்னார் ஆசிரியர் அறைக்கு.பாராட்டுவதற்கு இல்லை.
    Last edited by jayanth; 02-02-2012 at 12:26 PM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #172
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    மின்சாரம் இருந்தால் சுடுதண்ணியில் குளிக்கிறோம் வியர்க்கிறது..
    இல்லாட்டி வியர்வையிலேயே குளிக்க வேண்டியாதாகிறது..
    நம்ம வாழ்க்கையோட சாரமாகவே மின்சாரம் ஆகிடுச்சி...


    குளித்து வியர்த்தேன்
    வியர்த்துக் குளித்தேன்
    மின் - சாரம்!

    இப்படிக் கூட எழுதலாமில்ல ஆதவா!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #173
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    மின்சாரம் இருந்தால் சுடுதண்ணியில் குளிக்கிறோம் வியர்க்கிறது..
    இல்லாட்டி வியர்வையிலேயே குளிக்க வேண்டியாதாகிறது..
    நம்ம வாழ்க்கையோட சாரமாகவே மின்சாரம் ஆகிடுச்சி...


    குளித்து வியர்த்தேன்
    வியர்த்துக் குளித்தேன்
    மின் - சாரம்!

    இப்படிக் கூட எழுதலாமில்ல ஆதவா!!!


    இதெல்லாம் இன்னுமா படிச்சுட்டு இருக்கீங்க....??

    மின்சாரம்,
    தமிழ்நாட்டில்
    சட்டசபையின் எதிர்கட்சியென.

    வெளியே(ற்)றுகிறது
    இருட்டிலிருந்து ஒளியை
    உடலிலிருந்து வியர்வை

    இருட்டு குளித்ததில்
    வெளிச்சம் கரைந்தது
    பவர் சோப்!!

    நைட்டு ஃபுல்லா பவரு கட்டு
    ஒடம்பு ஃபுல்லா ஸ்வெட்டு!!
    ஒய் திஸ் கொலவெறி........

    நீ ஒளி
    நான் இருள்
    அவன் உடல்
    அது வியர்வை!

    இருள்
    கண்களை மாற்றியமைக்கிறது
    சிலநேரங்களில்
    மனதையும்!!

    தமிழ்நாடே ”இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது” - விஜயகாந்த் ஆ’வேசம்’, - தலைவரூ சரக்கடிச்சாலும் கவிதையாத்தான் ஒளருவாரு!
    இருளில் மூழ்குதல்!!! ஒரு அழகான கவித்துவம் மிகுந்த மென்மையான வரி இல்லையா? ஆனால் சூழ்நிலையோடு சேர்ந்து அது கண்டிக்கிறது!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #174
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    18 Nov 2011
    Location
    சென்னை
    Age
    45
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    10,384
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் திரி சுவை தருகிறது
    சுவர் தருகிறது
    சுறுசுறுப்பு தருகிறது
    சுகம் தருகிறது
    ஏன் சுவாசமான தமிழுக்கு
    அணிகலன் பூட்டியதுக்கு
    நன்றி

    ===> தமிழ்கவிநேசன் <===

  7. #175
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    ஆதவா,
    இத்தொடரில் பயனுள்ள பகுதிகளைப் பயன்படுத்திக்கொண்டேன். நன்றி..!

  8. #176
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0
    உங்களின் இந்த பதிவு தெளிவு பெற வைத்திருகிறது என் கவிதை எழுதும் தரத்தை.
    நன்றி நண்பரே ......

  9. #177
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    02 Sep 2011
    Location
    talegaon
    Age
    69
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    32,902
    Downloads
    64
    Uploads
    0

    naan ..mudhalili

    ணான் முதலில்

    சின்ன வயது விலயாட்டு
    னான் தான் முதலில்
    முதுமையிலும் விலயாட்டு
    னி தான் முதலில்
    ஆன் என்ட்ரால்
    குன்ஙுமம் இல்லாத
    உன் முகக்ட்தை நான்
    கடசி நாலிலும்
    பார்க்க விரும்பலை..
    என் கன்னெ

    அன்புடன்
    குலன்டை வெல் .மு

  10. #178
    புதியவர்
    Join Date
    29 Jan 2014
    Location
    Living in 77 Forest Brook Drive, Markham, Ontario, Canada. L6B 0G2
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    693
    Downloads
    0
    Uploads
    0
    தமிழும் கலையும் தலைசிறந் தோங்குமெம்
    திமிதிமி தாளமும் திரைகடற் கப்பாலும்
    அமிர்தமாய் இனித்திடும் அன்பரே உம்பணி
    இமயமாய் வளர்ந்திட ஏற்றினேன் வாழி!

    கன்னித் தமிழின் களிப்பாம் சுவையெலாம்
    உன்னிப் பார்ப்பின் உள்ளது மரபிலே!
    பின்னிடப் பயிற்றுக பிழையற! எழுத்து
    நன்னசை சீரடி நாலொடு தளைதொடை
    என்பன தெளிவுற! இனிதுற வாழி!
    அருட்கவி

  11. #179
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    மிக மிக அருமையான கருத்துக்கள்.

Page 15 of 15 FirstFirst ... 5 11 12 13 14 15

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •