கைகளை
தொன்னையாக்கி
பயபக்தியோடு
அள்ளி நீட்டுகிறேன்..
நீயோ...கானல் நீரை
சுட்டுகிறாய்..
உனக்குத் தடையில்லை
உன்
தாகத் தீரலை
தள்ளிப்போடுவதற்கு..
துளித்துளியாய்
வழிந்து
வற்றிக் கொண்டிருக்குமென்
ஈரங்களை என்சொல்லி
தேற்றுவதென்று
தவிக்கிறேன் நான்..
கச்சேரி நுழையும்முன்
கவசத்தில் முழுவதுமாய்
புதைந்துபோகத்
தயங்குவதாலேயே
நானெய்தும் நிஜங்களெல்லாம்
உந்தன் அழகான
கற்பனைத் தேரிலேறி
காணாமல் போகிறது...
உண்மைகள்
உரைக்கப்படுவது
கடுகளவில்..
உணரப்படுவதில்லை
மலையளவில்..
இனியொரு விலக்கென்ன..
இங்கே
உன்னை என்னை
பழித்தலைவிடவும்
நோகிறேன்....
நிதர்சனம் தொலைக்கும்
வழிதம்மை!!
Bookmarks