Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 58

Thread: உலகக்கோப்பை 2007 பின் இந்திய அணி

                  
   
   
  1. #25
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஒருநாள் கூட மைதானத்தில் நின்று வெயிலில் கிரிக்கெட் ஆடியிராதவர்கள் வாரியத் தலைவர் ஆனால் எப்படி இந்தியா கிரிக்கெட்டில் முன்னேறும்..

    மேலும் தேர்வு முறையில், வடக்கு தெற்கு பாகுபாடு நிலவுகிறது. தேர்வாளர்களின் சொந்த விருப்பு வெறுப்பின்படி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்..

    10 போட்டிகளில் சொதப்பினால்கூட ஒரு சொத்தை அணிக்கு எதிராக ஐம்பதோ, நூறோ அடித்துவிட்டால் உடனே அவர் இடம் அணியில் உறுதிப்பட்டு விடுகிறது. அதுவே இன்னும் 10 இன்னிங்ஸ்கள் வரையில் பொறுப்பற்ற ஆட்டத்துக்கு வித்திடுகிறது..

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பழைய சாதனைகள் போதும்...
    புது அணி வேண்டும்...
    சரத் பவாரின் அறிக்கை அப்படி நடக்கும் என்பதி சொல்லிகின்றதே.

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ராஜா சொல்வது சரிதான்... பவார் என்ன நடவடிக்கை எடுப்பார் எனப் பார்ப்போம்..

  4. #28
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் தான் மோசன் என்று எப்படி சொல்கிறீர்கள்? 255 ரன்கள் எல்லாம் ஒரு ரன்னா? மூன்று பேர் பத்தாயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்கள், அதிரடிக்கு தோனி, சேவக், உத்தப்பா இருக்கிறார்கள் இதுபோக எப்போதாவது பேட்டிங்கில் கலக்கும் அகர்கர், ஜாஹீர்,, இதெல்லாம் ஒழுங்காக ஆடாமல் பவுலிங்கை குறைசொல்வது நியாயமா?. முதலில் நம் அணிக்கு தலைமை சரியில்லை... கங்குலி தலைமை இருந்திருந்தால் அணி நிச்சயம் வென்றிருக்கும்...
    ஆதவன்
    அந்த மைதானத்தில் 267 ரன்கள்தான் அதிகபட்ச முதல் அணி ஆட்டம் என்று போட்டார்கள். இலங்கை 255 எடுத்த அப்போதே தெரியும் இது ஊத்திக் கொள்ளும் என்று.

    ஆனாலும் நீ சொன்ன மற்ற அனைத்திலும் ஒத்துப் போகிறேன். உணவுக்குத் துரத்தும் சிங்கத்தை விட உயிருக்கு ஓடும் மானுக்குத்தான் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இரையாக வேண்டியதுதான்.

    அன்று இலங்கைச் சிங்கத்திற்கு இந்திய மான் பிரியாணி!
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இதுபற்றி இன்றைய ஜூவியில்
    (நம் மன்றத்தில் கௌரவ உறுப்பினாராய் வந்தவரும், இசாக்கின் நண்பருமான) அப்துல்ஜப்பார் அவர்களின் அலசல் கட்டுரை வந்திருக்கிறதே... படித்தீர்களா?

    இங்கே பதியவா?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    எனக்கு படித்த மாதிரி ஞாபகம்... பதியுங்கள் இளசு அண்ணா! நாங்கள் படிக்கிறோம்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இதோ ஜூவியின் பதிவு..

    இந்திய அணிக்கு ஒரு இரங்கல்
    உடம்பு கூசத்தான் செய்கிறது. தோல்வி என்பது ஜீரணிக்க கடினமானதுதான். ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்தத் தோல்வியை ஓர் அவமானம் என்றே இதயம் கணக்குப் போடுகிறது. உணர்வுபூர்வமாக அல்லாமல் அறிவுபூர்வமாகவே நிலைமைகளை அணுகுபவர்களுக்கே இந்த நிலை என்றால், இந்திய அணி ஏதோ மலையைப் புரட்டி கடலில் தள்ளப் போகிறது என்கிற நினைப்பில் தங்களது பரிபூர்ண ஆதரவையும் அபிமானத்தையும் அதன் மீது அள்ளித் தெளித்த அப்பாவி ஸ்ரீமான் பொதுஜனத்தின் ஆத்திரத்தையும்- ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

    பிற நாட்டு நண்பர்கள்கூட இந்தியா மீது அளப்பறிய காதல் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளங் களிலும் இந்திய அணி இந்த முறை உலகக் கோப்பைப் போட்டியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை துளிர்த்துத்தான் இருந்தது. ஆனால், எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் பொய்யாக்கி விட்டு, இந்திய அணி தோல்வியைத் தழுவி பரிதாபமாக அடுத்த கட்ட போட்டிகளுக்குச் செல்ல முடியாமல் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய மோசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை ஜீரணிக்க முடியாமல்தான், எனது பிற நாட்டு நண்பர்களெல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அணியின் தோல்வி பற்றிப் பேசுவதில்லை என்று. நாகரிகமாக இருக்காது என்றெண்ணிக்கூட அவர்கள் இத்தகைய ஒரு முடிவெடுத்திருக்கலாம். என்னதான் நாகரிகம் கருதி பேசவில்லை என்றாலும், ஒவ்வொருவருக்குள்ளும் பீறிக் கொண்டிருக்கும் ஆற்றாமையை யார் போக்குவது... எப்படிப் போக்குவது என்றுதான் புரியவில்லை. அதனா லேயே நம் கண்களையே ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை என்றாலும் வேறு திக்குகளில் பார்த்து தங்களுக்குள் சிரிக்கிறார்கள் என்கிற உண்மை ஊசிபோல் உடலை குத்தத்தானே செய்கிறது.

    நாமெல்லாம் இப்படியரு நிலைக்கு தள்ளப் படுவோம் என்று எதிர்பார்க்கவில்லைதான். சரி, அதற்கு இந்திய அணி என்ன செய்யும் என்றால், அந்தக் கேள்விக்கு விடை சொல்ல முடியாதுதான். மொத்தத்தில், நடந்துவிட்ட அனைத்துக்கும் தவறு அவர்களுடையதுதான் என்று வீரர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது சரியாக இருக்காதுதான். ஆனால், ஒன்று மட்டும் உண்மை. நாம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இந்திய அணியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி ஆர்ப்பாட்டம் செய்து விட்டோம் என்பதுதான். அதாவது அவர்கள்மீது அளவுக்கும் கூடுதலாகவே பிரயாசைப்பட்டு விட்டோம்.
    அச்சு - மின்னணு என்கிற சகல ஊடகங்களிலும் நாமடித்தக் கூத்து அந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை போலும்.

    போட்டித் துவங்குவதற்கு முன்பு வெளியிடப்பட்ட &- ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்கள் பிற நாட்டவர்க்கு எவ்வளவு முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியதோ அதைவிட மோசமான எரிச்சலும் கோபமும் இதே விளம்பரங்கள் தோற்ற பின்பும் அதே பாணியில் ஒளிபரப்பப்பட்ட போதும் நமக்கு ஏற்படுத்தியது உண்மை தானே!

    Aspire for what you deserve என்பதைப் போல அருகதைப் பட்டதற்கு மட்டுமே ஆசைப்படு! என்பதை நாம் முற்றாகவே மறந்து போனோமா என்கிற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.
    உற்சாகப்படுத்துகிறோம்,- ஊக்கமூட்டுகிறோம் என்கிற பெயரில் நாம் ஏற்படுத்திய இமாலய எதிர்பார்ப்பு உளவியல் ரீதியாக அவர்களுக்கு பெருத்த மன அழுத்தத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி அவர்களை இயல்பாக செயல்பட முடியாத அளவுக்கு முடக்கிப் போட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு வகை சிந்தை முடக்கம் (Mental Block) கூட நம் வீரர்களையெல்லாம் பெரிய அளவில் பாதித்திருக்கலாம். இதைத் தவிர, தோல்விக்கு வேறு நியாயமான காரணங்கள் இருக்க முடியும் என்று நம்பவில்லை. அப்படி எதுவும் நம் கண்களுக்கும் புலப்படவில்லை.

    பங்களாதேஷடனான போட்டியின்போது நம் வீரர்களின் விளையாட்டு அணுகுமுறை அதைத்தான் தெளிவாகச் சொல்லிற்று. நாற்பது ஓவர்கள் நிறைவு பெற்றபோது 166 பந்துகளை தொடாமலேயே விட்டிருந்தார்கள் (Dot-balls) இதுபோக ஆறு ஓவர்கள் மெயிடன்களாக அமைந்தன. அப்படியானால் மொத்தம் ஐம்பது ஓவர்களில் மூன்றில் இருபகுதி ஓவர்களை ஆடாமலேயே விட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, குறைந்தது ஐந்து கேட்ச்சுகளை தவற விட்டிருக்கிறார்கள். அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ஆடாமல், எதையோ நினைத்து தவிர்த்தார்கள். தவிர்க்க வேண்டிய பந்துகளை அடித்தார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், உலகக் கோப்பை போட்டியில் இந்திய கதாநாயகனாக பவனி வருவார் என்று பலரும் கணித்து வைத்திருந்த டோனி அவுட்டான விதம் இதற்கு சரியான உதாரணம்.

    எடுத்த எடுப்பிலேயே, தோற்று விடக்கூடாது என்று நினைப்பது ஒருவித பய உணர்வா அல்லது ஜாக்கிரதை உணர்வா என்பதை தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல. இதன் இன்னொரு பிரதிபலிப்புதான் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்றும் அவர்களை மட்டை பிடிக்க கேட்டுக் கொண்ட தொடை-நடுங்கித்தனம் (knee-jerk re-action)!போட்டி நடைபெற்ற ட்ரினிடாடில் ஆடுகளம் சமீபத்தில்தான் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நடைபெற்ற பத்து போட்டிகளில் இலக்கை நிர்ணயித்த அணி ஏழு முறையும், இலக்கை விரட்டிச்சென்ற அணி மூன்று முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன என்கிற உண்மை சுவர்மேல் எழுத்தாக இருந்தும் அதனை நீர்மேல் எழுத்தாக ட்ராவிட் நினைத்துச் செயல்பட்டது பரிதாபத்துக்குரிய விஷயம்தான். இலக்கை நிர்ணயிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைத் தவற விட்டதைத்தான் இங்கே தவறாக எடுத்துக் கொண்டு அலச வேண்டியதாகி விட்டது. கடந்த காலம் இப்படி இருக்கிறது என்பதற்காக, டிராவிட் சுதந்திரமாக ஒரு முடிவெடுத்து செயல்பட்டிருக்கலாமா கூடாதா என்றால், அந்த உரிமைக்குள் யாரும் தலைநுழைக்க முடியாதுதான். நாம் சொல்வது போலவே டிராவிட் செயல்பட்டிருந்து அப்போதும் தோல்வி கிடைத்திருந்தால், அதற்கும் விடை சொல்ல முடியாது.

    ஆனால், ஒன்றை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட முடியும்... கடந்த முறை நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே அணுகுமுறையில் தோல்வி கண்டிருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டித்தானே ஆக வேண்டும். அதாவது, முட்டிய பின்னும் நாம் குனியவில்லை என்பதுதான் சோகம். அதனால்தானோ என்னவோ, இந்தியாவுக்குத் தலைகுனிவு தொடர்கிறது. தவறுகளை தலையில் வைத்துக்கட்ட சில பலி கிடாக்கள் (scape-goats) தேடப்படும். கடும் நடவடிக்கைகள் என்கிற பெயரில் சில தலைகள் இங்கே உருட்டப்படும். அதில் ட்ராவிடின் தலையும் ஒன்றாக இருக்குமானால், ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், பாகிஸ்தானைப்போல் இங்கே நம் இந்தியத் தேர்வுக்குழு பதவி விலகாது. ஏனெனில் தார்மீகப் பொறுப்பேற்பது என்பது இன்று வரையில் இங்கே கெட்ட வார்த்தையாக இருப்பதுதான்.

    சச்சின் டென்டுல்கர் நிறைய எதிர் பார்க்கப்பட்டவர், இப்படியரு சொதப்பல் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு அவர் உடனடியாக ஓய்வு பெற்றுவிடுவது நல்லது. அதுதான் அவர் நம் நாட்டின் மீதும் கிரிக்கெட் விளையாட்டின் மீதும் பற்று வைத்திருக்கும் கோடிக்கணக்கான உள்ளங்களுக்கு அளிக்கும் மரியாதையாக இருக்கும். இலங்கைக்கு எதிராக அவர் ஆட்டம் இழந்ததைப் போல் திருவல்லிக்கேணி தெருவில் ஆடும் பையன் கூடச் செய்திருக்க மாட்டான்.

    இந்திய அணி வீரர்களே, நீங்கள் (உங்களுக்காகவே) செய்து கொண்ட சாதனைகளுக்கும், இந்திய அணிக்கு செய்த மாபெரும் தொண்டுக்கும் போடுகிறோம், சல்யூட். இனியாவது மானத்தைக் காப்பற்ற வேண்டும். அதனால், நீங்களாகவே ஒதுங்கிக் கொள்ளுங்கள். 1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் கிரிக்கெட் பெற்ற இமாலய செல்வாக்கு, இந்தப் படுதோல்விக்குப் பிறகு அதல பாதாளத்துக்குப் போயிருக்கிறது. அது மீண்டும் சமதளத்துக்கு வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது யாருக்குத் தெரியும்.
    ---& சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

    நன்றி - ஜுனியர் விகடன்
    Last edited by அறிஞர்; 28-03-2007 at 11:27 PM.

  8. #32
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    "கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு. தொழில் அல்ல" என்று ரசிகர்களும் வீரர்களும் உணர்ந்துகொண்டால் கிரிகெட்டிலும் சரி, நாட்டின் பொருளாதாரத்திலும் சரி இந்தியாவுக்கு வெற்றிதான்.

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by murthykmd View Post
    "கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு. தொழில் அல்ல" என்று ரசிகர்களும் வீரர்களும் உணர்ந்துகொண்டால் கிரிகெட்டிலும் சரி, நாட்டின் பொருளாதாரத்திலும் சரி இந்தியாவுக்கு வெற்றிதான்.

    ரசிகர்கள் விளையாட்டாகவே நினைக்கிறார்கள், ஆனால் கிரிக்கெட் வீரர்கள் இதை ஒரு தொழிலாகத்தானே நினைக்கிறார்கள். அதிகமாக பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    உலகக்கோப்பைக்குபின் முதல் பலி: கிரெக் சாப்பல். தன்னுடைய காண்டிராக்டை முடித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

    போர்டு இவரை தள்ளுவதற்கு முன் தாமாகவே விலகிவிட்டார்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சாப்பல் விலகியதே நன்று... அப்படியே சீனியர் வீரர்களும் செய்தால் பரவாயில்லை..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இந்த திரியினை மேலே தூக்குகிறேன், இந்த திரியினை மீள மேலே கொண்டுவரும் தருணம் இதுதான் என்பதால்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •