Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: தாத்தாவின் பார்வை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    தாத்தாவின் பார்வை

    கோளத்தின் அலையாய்
    முகம் தெரியும் மழைக் காலத்தில்
    நடைபாதை கழிவுகளை
    ஒதுக்கிவிட்டு
    நனைக்காமல் இருக்க
    குடையோடு தவழ்ந்துகொண்டிருந்தேன்


    கண்கள் கண்டவரை
    யாவரும் குடையுடன்
    தலை காக்கின்றனர்
    மழையின் அழுகையை
    கண்களிலிருந்து வீசிவிடுகின்றனர்


    ஒரு சிறு இடைவெளியில்
    தள்ளுவண்டியுடன்
    நிற்கும் அந்த தாத்தாவைக் கண்டதும்
    மழைக்குக் கூட
    இரக்கமின்றி போனது.
    என் கைகள்
    குடை பொத்தானைத் தழுவுகிறது.


    எடுத்துச் சென்று கொடுக்க
    யாவருக்கும் மனமில்லை
    ஒரு முதியவரைக் காக்க
    மழைக்கும் துணிவில்லை
    விதிவிலக்காக நான்.


    மழையின் ஆக்ரோசத்தை
    மனம் தழுவிய அதேவேளையில்
    உடல் நனைந்தது.
    பிந்தைய நாளில்
    என் மொழிகள்
    வேறானது.


    பகல் பொழுதுகளில்
    இரக்கமற்ற அதே இடத்தில்
    நடக்கையில்
    தாத்தாவின் அருகே என் குடை
    நிழற்குடையாய்.


    நிறம் மாறும் மனிதர்கள்
    குணம் கரையும் மழை
    தாத்தாவின் பார்வை மட்டும்
    நிதர்சனமாய் நிற்கிறது.

    நன்றி ஓவி.. கவிதைக்கருவிற்க்கு..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    உதவி செய்யக்கூடிய உள்ளங்கள்
    இன்னும் பெருகவேண்டும்...

    தாத்தாவின் பார்வையில் வரிகள்.. அருமை......ஆதவா..

    எங்கிருந்து ஓவியாவின் கருவை பிடித்தீர்கள்..

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இந்த இடத்திலிருந்துதான் அறிஞரே!!

    நன்றிகள் கோடி...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    சம்பவம் சொன்னவுடன் கவிதையாக்கிவிட்டீர்.. சும்மா சொல்லவில்லை.. கவிதை அழகாகவே வந்துள்ளது.. வாழ்த்துக்கள்...

    ஒரு திரி ஆரம்பிக்கலாம் போல..

    ஒற்றை வரியில் ஒரு சம்பவம் சொல்லவேண்டும். அதற்கு கவிதை எழுதிட வேண்டும்... எப்படி இருக்கும் ஆதவா!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    பாராட்டுக்கள் ஆதவன்.

    இறுதி பத்தியில் - நிறம் மாறும் மனிதர்கள் என குறிப்பிட்டது கொஞ்சம் வேறுமாதிரியும் யோசிக்க வைக்கிறது...ஆனால் அங்கே தாத்தாவின் பார்வையை சுட்டவே அது குறிப்பிடப் பட்டிருப்பதால் நம் நாயகனை அப்படியே விட்டுவிடலாம்..

    இன்னும் நிறைய எழுதுங்கள்!



  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    குடை - கொடையின் உருவகம்..

    இரண்டையும் இணைத்த ஆதவனுக்கு வந்தனம்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி அண்ணா!... முதலில் ஓவி அக்காவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.. கவிதைக் கரு அவர்களுடையது...

    உங்கள் நிழல் பட்டதாலேயே இன்னும் வாழும் சில நாட்கள் இந்த கவிதைகள்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    உங்கள் நிழல் பட்டதாலேயே இன்னும் வாழும் சில நாட்கள் இந்த கவிதைகள்...

    ஆதவா

    ஏற்புரையின் சொல்லழகு சொக்கவைக்கிறது..
    உள்ள அர்த்தம் கொஞ்சம் வெட்கவைக்கிறது..

    வாழ்க நீ!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    ஆதவா

    ஏற்புரையின் சொல்லழகு சொக்கவைக்கிறது..
    உள்ள அர்த்தம் கொஞ்சம் வெட்கவைக்கிறது..

    வாழ்க நீ!
    ஆஹா!!! அண்ணா இப்படி சொல்லிவிட்டீர்களே!! நான் கவிதை எழுதி முடித்ததும் படிப்பவர்கள் யார் யார் என்று பார்ப்பேன். இளசு என்ற பெயர் பார்த்ததும் மனதுக்குள் ஆனந்தம். அவர் படித்துவிட்டார் என்று... நீங்கள் வந்துபோனாலே போதும்...

    அதிலும் இரண்டர்த்த வார்த்தையான நிழலை நான் இட்டது தவறென நினைக்கிறேன்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post

    அதிலும் இரண்டர்த்த வார்த்தையான நிழலை நான் இட்டது தவறென நினைக்கிறேன்...

    தவறா???? ஆஹ்ஹாஹ்ஹா!

    குடை பற்றிய கவிதையை ஒட்டி வந்த
    சொல்லழகு உச்சம் அது.... பாராட்டுகள் மீண்டும் மீண்டும்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கவிதை அருமை. தமிழர்களுக்கு இரக்க குணம் உள்ள அளவு தமிழ்நாடு செழித்துக்கொண்டேயிருக்கும்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அருமையான கவிதை.

    புள்ளி வைத்துவிட கோலம் போட்டதாக கூறினீர்கள். உங்கள் திறமையும் அபாரமே.

    வாழ்த்துக்கள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •