தோல்வியினால் துவண்டு
கிடக்கும் என் மனம்
சிதறிக் கிடக்கும் கண்ணாடித்
துண்டுபோல் என்னைக்
கீறுகின்றது...
பிறப்பின் நோக்கம் முடிவதற்கு
முன்னே...
வாடிப் போகும் மலர்போல்
கவிழ்ந்து கிடக்கும்
என்னை..
மண்ணைத்துளைத்துக்
கொண்டு வெளிவரத்
துடிக்கும் துளிர்போல்
கிழித்துக் கொண்டு
வருவது யாரென தேடிப்
பார்க்கிறேன்..
இருள் சூழ்ந்த மனதினுள்
இருந்து வருவது
வேறு யாருமல்ல..
முடியும் என்ற நம்பிக்கையுடன்
எழுந்து வரும்
தன்னம்பிக்கை தான்!
Bookmarks