Results 1 to 9 of 9

Thread: காதல் பிரசவம்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    19 Mar 2007
    Location
    அபுதாபி
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0

    Smile காதல் பிரசவம்

    பெண்ணவள் சுமக்கும் கருவின்
    வளர்ச்சி...
    எவரது கண்ணிலும் படாமல்
    இருப்பதில்லை....

    நான் சுமக்கும் கருவின்
    வளர்ச்சி...
    உன் கண்களுக்கு கூட
    தெரியவில்லையா?

    இல்லை! நிச்சயமாக இல்லை!

    நீ என்னுள் காதல் கருவாக
    வளர்வதை
    முழுவதும் உணர்ந்தவள்....

    கருவினுள் வளர்ந்து வரும்
    குழந்தைக்கு....
    பிடித்தது! பிடிக்காதது!
    எதுவென அறிந்து உண்ணும்
    அன்னையாய்...
    நான் நடந்து கொண்டதை
    ரசித்தவள் நீ....

    கருவினுள் சுகமாய் இருப்பதை
    என்றாவது ஒருநாள்....
    காலால் உதைத்து உண்ர்த்தும்
    குழந்தையைப் போல்...

    நீ உதிர்க்கும் ஒரிரு
    வார்த்தைக்ள்...
    நீ காணும் இன்பத்தை
    எனக்குணர்த்தும்....

    பத்து திங்கள் கழிந்த பிறகும்....
    வெளியுலகை சந்திக்க பயந்து....
    கருவினிலேயே இருக்க விரும்பியதாம்
    குழந்தை!

    குழந்தையும் உன்னைப் போல்
    அறியவில்லை!...

    தக்க தருணத்தில் வெளி
    வந்தால்தான்...
    தனக்கும் தன்னைச் சுமப்பவளுக்கும்
    நன்மையென....

    தனக்குள் பாதுகாப்பாக சுமக்கும்
    போதே!
    அரவணைத்து, கருவின் உணர்வறிந்து
    நடந்தவளுக்கு....
    கைகளில் வந்ததும் அரவணைக்கும்
    பக்குவம் தெரியுமடி....

    என் காதல் கருவாய்
    இருப்பவளே!

    இதனை உணர்ந்து....

    எப்பொழுது நீயும் எனக்குத் தருவாய்
    பிரசவ வலி?

    என்றும் அன்புடன்
    செல்விபிரகாஷ்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாழ்த்துகள் செல்வி..

    கவிதை வடிப்பதை பிரசவம் என சொல்வது
    கவிஞர் வைரமுத்துவின் வாடிக்கை..

    இங்கே காதலைக் கருவாக்கி
    அது வெளிப்படுவதை பிரசவமாக்கி
    உங்கள் உவமைக்கவிதை!

    கத்தரிக்காய் முத்தினால்
    சந்தைக்கு வந்துவிடும் -
    இது சொலவடை!

    காதல் முத்தினாலும்
    அப்படித்தானாம்..

    தும்மலைக்கூட அடக்கலாம்..
    ஆனால் காதலை?

    தவறான கரு, குறைப்பிரசவம் என 'தவறிய' காதல்களும் உண்டு..


    நல்ல காதல்கள் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று
    வாழ்த்துகிறேன்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அழகான கரு... நன்றாக வளர்ந்துள்ளது...

    பாராட்டுக்கள் சகோதரி.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இன்பமான பிரசவ வலி
    விரைவில் வரட்டும்..
    காதல் குழந்தை....
    அன்போடு தவழட்டும்....

    காதல் வரிகள் அருமை செல்வி..

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அருமை... ரசித்தேன்.. காதலை குழந்தையோடு உருவகப்படுத்தி ரசிக்க வைத்தீர்கள்..

    நான் ரசித்த வரிகள்...

    பத்து திங்கள் கழிந்த பிறகும்....
    வெளியுலகை சந்திக்க பயந்து....
    கருவினிலேயே இருக்க விரும்பியதாம்
    குழந்தை!

    குழந்தையும் உன்னைப் போல்
    அறியவில்லை!...

    தக்க தருணத்தில் வெளி
    வந்தால்தான்...
    தனக்கும் தன்னைச் சுமப்பவளுக்கும்
    நன்மையென....
    இளசுவின் விமர்சனம் அவருக்கே உரித்தான 'நச்'

    தவறான கரு, குறைப்பிரசவம் என 'தவறிய' காதல்களும் உண்டு..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    இளையவர்
    Join Date
    29 Jan 2007
    Location
    colombo,இலங்கை
    Posts
    76
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கருவினுள் சுகமாய் இருப்பதை
    என்றாவது ஒருநாள்....
    காலால் உதைத்து உண்ர்த்தும்
    குழந்தையைப் போல்...

    நீ உதிர்க்கும் ஒரிரு
    வார்த்தைக்ள்...
    நீ காணும் இன்பத்தை
    எனக்குணர்த்தும்....


    மிக நன்றாகவுள்ளது நண்பரே. உருவாகிய தீயை மறைத்தாலும் வெளிவரும் புகை தீயைக் காட்டிக்கொடுத்துவிடும்.அதே போல் மனசில் உள்ள காதலை மறைக்க முயன்றாலும் வாயிலிருந்து வெளிவருகின்ற வார்த்தைகள் அதனைக் காட்டிக்கொடுத்துவிடும்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அக்கா இரவு அல்லது நாளை படித்து விடுகிறேன்.. விமர்சனம் அப்போதே!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    காதலிப்பது செத்துப் பிழைப்பது எங்கிறீர்கள்.

    அதுசரி... அநுபவப்பட்டால்த்தானே உணருவதற்கு..

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    செல்விபிரகாஷ்
    தக்க தருணத்தில் வெளி
    வந்தால்தான்...
    தனக்கும் தன்னைச் சுமப்பவளுக்கும்
    நன்மையென....

    இந்த வரி சுடுகின்றது.....அருமையான வரி ....................
    கோழையாய் இப்படியே கனவு மட்டும் கண்டால் போதுமா??? ஹி ஹி ஹி


    அருமையான கவிதை.
    காதலை தாய்மையுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளீர்கள், பாரட்டுக்கள் செல்வி

    .......................................................................................................

    இளசு
    தும்மலைக்கூட அடக்கலாம்..
    ஆனால் காதலை?
    தவறான கரு,
    குறைப்பிரசவம் என
    'தவறிய' காதல்களும் உண்டு......

    முற்றிலும் உண்மை இளசு.


    காதல் காதல்
    அச்சோ ஒரே காதல் புலம்பல்........
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •