மரணத்திற்கும் ஜனனத்திற்கும்
மத்தியில்...
உன் குரல் கேட்டவளின்
கண்ணீர்த்துளி...
உனக்குணர்த்தும் உன் ஜனனத்தின்
மதிப்பை!
மரணத்திற்கும் ஜனனத்திற்கும்
மத்தியில்...
உன் குரல் கேட்டவளின்
கண்ணீர்த்துளி...
உனக்குணர்த்தும் உன் ஜனனத்தின்
மதிப்பை!
Last edited by அமரன்; 18-03-2008 at 10:26 AM.
அருமை அருமை... நான்கு வரிகளில் நச்.... தொடருங்கள் உங்கள் கவிகளை..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நல்ல கவிதை செல்வி....
ஆனால் கவிதை முடிவடாதது போல் ஒரு உணர்வு...
பிறக்கும் குழந்தையிடம் சொல்லுவது போல் இருக்கு...
சொல்லுவது, அந்த நிகழ்வுக்கான வலிகளையும், கண்ணீரையும்...
கவிதை முழுவதுமாக முடியவில்லையோ என்று ஒரு உணர்வு....
தொடருங்கள்...
Last edited by அமரன்; 18-03-2008 at 10:26 AM.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
ஆதவா மற்றும் பெஞ்சமின் அவர்களுக்கு எனது நன்றிகள்.
ஒரு தாயால் மட்டுமே உணரக்கூடிய
உன்னதக் கணத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்..
'செத்துப் பிழைப்பது' என்பது அக்காலத்தில்
பிரசவப்பிதற்கு சொல்லப்படுவது..
அதீத வலியின் உச்சியில்
குழந்தையின் அழுகைக்குரல் கேட்டு
அளவில்லா ஆனந்தம் தாக்க
அப்போது துளிர்க்கும் கண்ணீர்..!
எடைபோட முடியாத அளவு உயர்வானதுதான் அந்த ஒரு துளி..
பாராட்டுகள் செல்வி..
Last edited by அமரன்; 18-03-2008 at 10:27 AM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
மிக்க நன்றி இளசு, ஒவ்வொருவரின் விமர்சனமும் என்னை அதிகம் எழுத தூண்டுவதாக உள்ளது. நன்றி நண்பர்களே
தாய்மையின் அன்பை உனர்த்தும் அருமை கவிதை நன்று
தொடருங்கள் உங்கள் கவிதைகளை...
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
இது தாய்மையின் சிறப்பை உயர்த்தினாலும் அடுத்த வரிகளை இன்றைய உலகில் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் வாழும் வாழ்க்கையின் வேதனைகளையும் எனக்கு நினைவூட்டுகின்றது. நன்றி கலந்த வாழ்த்துகள்.மரணத்திற்கும் ஜனனத்திற்கும்
மத்தியில்
அருமையான கவிதை..
பல நேரங்களில் அறுபதைத் தொட்டாலும் அந்தத் தாயின் அருமை புரிவதில்லை பல ஜென்மங்களுக்கு!
அன்னை மட்டுமே அறிய கூடிய அந்த ___________ நீங்கள் நான்கு வரிகளில் சொல்லியது மிக அருமை...
உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மிக சிறந்த கவிதை சகோதரி... நான்கு வரிகளில் கவிதை ஒளிர்கிறது...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks