Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 50

Thread: முயற்சிப்போமே..!

                  
   
   
  1. #25
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by என்னவன் விஜய் View Post
    நண்பர் பாரதி
    எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம். ஆங்கில கலைச்சொற்களை தமிழில் மொழிபெயர்த்துதான் பாவிக்கவேண்டும் என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை,ஆனால் சில பொருட்சொற்களை குறிப்பாக நவீன கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இடும் பெயரை நாம் மாற்றத்தான் வேண்டுமா?அதுவும் காலத்துக்கு காலம் மாறுகிறது. உதாரணமாக
    நான் சிறிய வயதில் புகைவண்டி என்றேன்,இன்று தொடர் ஊர்ந்து என்கிறார்கள்,நாளை? ஏன் நாம் அதனை அவர்கள் வைத்த பெயர் ஆனா Rail(train) என்று அழைக்க கூடாது??
    அன்பு விஜய்,

    மாற்றம் என்பது மாறாத தத்துவம். விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் போது அதற்கேற்ப மொழியும் வளர்ச்சி அடைய வேண்டும். பிற நாட்டவர் கண்டுபிடிப்புகளின் பெயரை அப்படியே ஏற்றுக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. உரிய கலைச்சொல் கண்டுபிடிக்கும் வரை வேண்டுமென்றால், தற்காலிகமாக அயற்சொல்லை பயன்படுத்தலாம்.

    நீங்கள் குறிப்பிட்ட படியே முதலில் பயன்பாட்டிற்கு வந்த புகைவண்டி, கரி மற்றும் நிலக்கரியால் இயங்கியது. பின்னர் மண்ணில் இருந்து கிடைக்கும் எண்ணெயை (டீசலுக்கு தமிழில் என்ன?) உபயோகப்படுத்தினார்கள். இப்போது மின்சாரத்திலும், மின்காந்தத்திலும் உபயோகிக்கும் வகையில் புதிய முறைகளை கண்டறிந்து விட்டார்கள். இப்படியாக மாற்றம் அடையும் போது மொழியும் அதற்கேற்ப வளர்ச்சி அடைய வேண்டும்.

    மேலும் வெறும் அடையாளத்திற்கு பெயர் என்பதை விட, பெயரைக்கொண்டே அது என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு உதவுவது போல பெயரிடுவதுதான் சாலச்சிறந்தது.

    புகைவண்டி, தொடர்வண்டி, மின்தொடர்வண்டி - இவை எல்லாமே மிக நன்றாகத்தானே இருக்கின்றன. மேலும் காலம் காலமாக பிழையாக (rail - தண்டவாளத்தைத்தான் குறிக்கிறது, வண்டியை அல்ல) உபயோகித்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக நாம் அறிந்த வகையிலாவது சரியான சொல்லை தேர்ந்தெடுந்து பயன்படுத்துவதில் தவறொன்றுமில்லை.

    மகிழ்வுந்து - பிளசர் கார்
    பேருந்து - பஸ்
    சிற்றுந்து - கார்
    சுமையுந்து - லாரி
    தானி - ஆட்டோ

    (நன்றி : மக்கள் தொலைக்காட்சி!)

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இன்றுதான் இத்திரியைக் கண்டேன். அநேகமாக அடியேனது பதிவுகளில் தட்டச்சுத் தவறு இருக்காது... பொருட்குற்றம் காணப்படலாம்!!

    தப்பும் தவறுமாக பதிவுகளைப் படிக்கும்போது சில சமயம் எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தட்டச்சு கம்பசித்திரம் இல்லை.

    முன்னொரு காலத்தில் தட்டச்சு பயிலும்போது அங்கே எழுதி வைத்திருப்பார்கள்.. "தவறில்லாமல் இருப்பதே எமது குறிக்கோள்".. இதனை நாமும் கொள்ளலாமே!

    ===க*ரிகால*ன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  3. #27
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by karikaalan View Post
    இன்றுதான் இத்திரியைக் கண்டேன். அநேகமாக அடியேனது பதிவுகளில் தட்டச்சுத் தவறு இருக்காது... பொருட்குற்றம் காணப்படலாம்!!

    தப்பும் தவறுமாக பதிவுகளைப் படிக்கும்போது சில சமயம் எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தட்டச்சு கம்பசித்திரம் இல்லை.

    முன்னொரு காலத்தில் தட்டச்சு பயிலும்போது அங்கே எழுதி வைத்திருப்பார்கள்.. "தவறில்லாமல் இருப்பதே எமது குறிக்கோள்".. இதனை நாமும் கொள்ளலாமே!

    ===கரிகாலன்
    அன்பு அண்ணலே, உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் குறிக்கோளை அனைவரும் ஏற்றுக்கொண்டாலே பெரும்பாலான பிழைகள் நீங்க வாய்ப்பு இருக்கிறது.

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    எனவே தயவு செய்து அனைவரும் இயன்ற வரையில் பிழையின்றி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை ஒரு உறுதியாக ஏற்று, நடைமுறைப்படுத்துவது அவசியமானதாகும்.

    மன்றத்தின் பெயரைக் காப்பாற்றுவதற்காவது நாம் அனைவரும் பிழையில்லாத் தமிழை தட்டச்சு செய்ய வேண்டும்; குறைந்த பட்சம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை அன்புடன் உங்கள் முன் வைக்கிறேன்.
    முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்


    பாரதி அவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்துப் பிழையில்லாத் தமிழை தட்டச்சு செய்ய அனைவரும் முயற்சி செய்வோம். தமிழ் மன்றத்தில் அழகு தமிழ் வளர்ப்போம்.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    இதுவரை இந்த திரியை நான் கண்ணுற்றிருக்கவில்லை. அதனால் இது எனது தாமதமான பதிவு. நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழிமுறைப்படி தான் பிழையில்லாமல் பதிவுகள் செய்து கொண்டிருக்கிறேன்.

    ஏற்கெனவே பதிந்ததில் பிழை இருந்தால், அதை கண்டவுடன் திருத்தம் அழுத்தி பிழை நீக்கினால் கூட போதும். ஏனென்றால் ஒரே முறையில் பிழை இல்லாமால் பதிப்பது என்பது எல்லாரோலும் முடியாத செயல்.

    ஆனால் நண்பர்கள் சிலர் பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பழைய பிழைகளை திருத்தும் நேரத்தில் புதிதாக இன்னும் சில பதிவுகள் இடலாமே என்று நினைக்கின்றனர்.

    பிழையில்லாத பதிவுகள் போலவே, நமது மன்றத்தில் இன்னும் சில விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். இதை விதிமுறையாக நினைக்காமல் நமது மனமாற்றமாக இருக்க வேண்டும்.

    1)ஒருவரே ஒரே திரியில் அடுத்தவர் பதியும் முன் பதிக்க நேர்ந்தால் முதலில் பதிந்ததை திருத்தம் செய்து தான் கூடுதல் கருத்து பதிக்க வேண்டும்.

    2)திரியின் தலைப்பு, மையக்கருத்துக்கு துளி கூட சம்பந்தமில்லாமல் திரியில் பதிவுகள் இடுவது (அதாவது வெட்டி அரட்டை) கூடாது.

    3)திரியில் அடுத்தவர் பதிவை மேற்கோள் ஒரு முழம் நீழத்திற்கு காட்டி பின் தனது கருத்தாக ஒரு வரியில் பதில் பதிதல் கூடாது.

    4)தளத்தில் ஒரே பகுதி திரிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் நேரம் கிடைக்கும் போது மற்ற பகுதிகளில் உள்ளவற்றிலும் சென்று பார்த்து சில பதிவுகள் இட்டு திரி (உண்மையிலே சொந்த தட்டச்சில் செய்திருப்பவரை)பதிந்தவரை ஊக்குவிக்க வேண்டும்.
    Last edited by praveen; 15-02-2008 at 03:02 AM.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அனைவரது குறிப்புக்களும் கடைப்பிடிக்க வேண்டியவையே.
    முயற்சிப்போம். செம்மையாவோம்.
    மிக முக்கியமாக,
    எழுத்துப் பிழை, தேவையற்ற மேற்கோள் என்பவற்றைத் தவிர்த்தல்,
    என்பன மன்றத்தை மிகவும் அழகுள்ளதாக்கும்...
    Last edited by அக்னி; 15-02-2008 at 03:18 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #31
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பிரவீனின் கருத்துக்கள்..கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.மிகவும் அவசியமானவை.முக்கியமாக...அவர் சொன்னதைப்போல பதித்த பிறகு பிழையை கண்டால்..உடனே திருத்திவிட வேண்டும்.
    அனவரும் பின்பற்றுவோம்.மன்றத்தின் தரமுயர்த்துவோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ப்ரவீணின் கருத்துகள் பொன்னானவை..

    பதிவாளர்கள் கவனத்துக்கு என்ற கீழ்க்கண்ட திரியில் ப்ரவீண் கருத்துகளையும் இணைக்க என் ஆலோசனை.
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7309
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அருமையான, அவசியமான கருத்துகள் பிரவீண். மிக்க நன்றி.
    அன்பு அண்ணா.. இணைத்தாகிவிட்டது.
    Last edited by அமரன்; 15-02-2008 at 08:19 AM.

  10. #34
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    ம்ம் நல்ல விதிமுறைதான்..
    அனைவரும் கடைப்பிடிப்போம்..
    மிக்க நன்றி
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  11. #35
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Feb 2008
    Posts
    171
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    69
    Uploads
    35
    நானும் என்னால் இயன்றவரையில் இந்த விதிமுறைகளைக் கடைபிடிப்பேன் என்று உளப்பிரமாணம் மேற்கொள்கிறேன்.
    மேலும் என்னால் இவற்றைப் பின்பற்றமுடியாமை என்னும் நிலை வந்தால் மேலாளர்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பி சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.
    யாருடைய மனத்தையும் என்னுடைய பழைய பதிவுகளில் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்தருளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    என்னுடைய பங்களிப்புகள் தொடரும் என்று உத்திரவாதத்தையும் இத்துடன் வைக்கிறேன்.
    நன்றி
    தமிழா தமிழா ஒன்றுபடு!..
    புன்னகையில் மின்சாரம்
    http://www.tamilnenjam.org

  12. #36
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    01 Oct 2008
    Posts
    177
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    குழந்தைகள் ஆடை அணியாதது இயல்பு. பின்னர் வளர வளர ஆடை அணிவதுதான் சிறப்பு.

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •