Results 1 to 6 of 6

Thread: உரிமையுடன் வம்பிழு - பாகம் 3

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    உரிமையுடன் வம்பிழு - பாகம் 3

    உரிமையுடன் வம்பிழு - பாகம் 3
    =======================
    என்னங்க!
    நம்ம வீட்டு செடியிலே பூத்த பூ
    மட்டும் வாடவே மாட்டேங்குது?

    எப்படிடி வாடும்?
    உன் மூச்சுக் காற்றில் பூத்த பூக்கள் அவை!
    உன் வாசம் கண்டு மலர்ந்த மலர்கள் அவை!

    கொன்ட்றுவேன்! சும்மா இருடா!

    இப்போது தான் நம்புகிறேன்!

    என்னத்தை நம்புரே!

    ஒரு தேவதையால் தான், நான் வதைப் படபோகிறேன்
    என்று ஒரு கிளி ஜோசியக்காரன் சொன்னதை!!

    அய்யோ! இவன்கிட்டே இருந்து என்னைக் காப்பாத்துங்களேன்!

    அடிப்பாவி! நான் கேக்க வேண்டிய கேள்வியை நீ கேக்குறியே!
    இது நியாயமா? நீ தான்டி பிசாசு!

    போடா! நீதான்டா இந்த பிசாசை பிடிச்ச பேய்!

    ஓ! இப்போது தான் புரிகிறது!
    பக்கத்து வீட்டு குழந்தை நம்மை பார்த்ததும்
    அன்று ஏன் அலறியது என்று!
    பேயையும் பிசாசையும் ஒன்றாகப் பார்த்தால்
    அலறாதா பின்னே?

    இப்போது சிரித்தாளே என்னவள்!
    இதயத்தை கொஞ்சம் உரித்தாளே அன்னவள்!
    ------------------------------
    என்னங்க!
    சர்க்கரை தீர்ந்துபோச்சு!
    காஃபியிலே எப்படி இனிப்பு போடுறதுன்னு தெரியலெ?

    அதுனாலென்னடி!
    காஃபி கப்பில் உன் இதழ் பதித்து
    ஒரு சிப் குடித்துவிட்டு கொடு!
    தனியாத இனிப்பு தானாக வரும்!

    (குடித்து விட்டு)

    அய்யோ! உண்மையிலேயே இனிக்குதுடி!
    நீ ஒன்று செய்யலாம்!
    கடல் நீரை குடித்து விட்டு
    மீண்டும் கடலுக்குள் துப்பு!
    எத்தனை நாள் தான் கடல் தண்ணீர்
    உப்பாகவே இருப்பது?

    அய்யோ! திருந்தவே மாட்டியாடா நீ?

    தப்பு செய்யிரவன் தான்டி திருந்தணும்!
    நான் உன்கிட்டே தப்பு செய்யவே பிறந்தவன்!
    நான் ஏன்டி திருந்தணும்?
    -----------------------------
    என்னங்க!
    'தண்ணீர் தேசம்' படிக்க கொடுத்தேனே!
    படிச்சிங்களா?

    எங்கெ! நன்னீர் தேசம் புடிக்கவே நேரம் இல்லை!
    இதுலெ எங்க தண்ணீர் தேசம் படிக்கிறது?

    அது என்ன நன்னீர் தேசம்?

    இந்த காய்ந்த வயலில் தண்ணீர் பாய்ச்சிய
    அந்த நன்னீர் தேசம் நீதானடி!

    "சீ!!! போடா!"

    அய்யோ!
    இப்படி ஒரு கவிதை எப்படிடி
    உன்னால் உடனே எழுத முடிந்தது?

    வான்மறை வள்ளுவனே!
    நீ சரியில்லை!
    இரண்டு வரிகள் எல்லாம் ரொம்ப அதிகம்!
    என்னவளின் இரு வார்த்தைக்கு ஈடாகுமா?
    மொத்த தமிழ் இலக்கியத்தையும் உருக்கி
    இரு வார்த்தைகளால் ஆபரணம் செய்து
    தமிழுக்கு அணிவித்து விட்டாளே, பார்த்தாயா?
    அதனால் தான் உன்னது இன்னும் 'திருக்குறள்'!
    இவளோடது புவி போற்றும் 'புனிதக் குறள்'!
    ----------------------------------
    Last edited by lenram80; 11-03-2007 at 01:32 PM.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    லெனின்

    காதல் உற்சவம்
    அந்நியோன்ய உச்சம்..

    சரியான தருணத்தில்
    சரியான உச்சரிப்பில்
    சரியான முகபாவத்துடன்
    சரியான துணை சொல்லும்
    சீ.. போ...என்ற கவிதை

    உலகத்தின் மிகப் பிரபலமான கவிதை என்பதில் சந்தேகமில்லை..!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் கலந்திருக்கும் காதலை அதன் ஊடலின் வழியாய் வெளிப்படுத்திய விதம் அருமை...
    ஜெயிப்பது நிஜம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கவிதையில் புது பரிணாமம் அற்புதமாக இருக்கிறது..

    தப்பு செய்யிரவன் தான்டி திருந்தணும்!
    நான் உன்கிட்டே தப்பு செய்யவே பிறந்தவன்!
    நான் ஏன்டி திருந்தணும்?
    வார்த்தைகள் ஜாலம் செய்யுதே.. பாராட்டுகள் லெனின்..

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    உன்மை சம்பவம் அருமை கவிதையாய் மாறுவது உன்மையில் இனிக்கிறது வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நன்றி இளசு, மன்மதன், மொக்கச்சாமி & மனோஜ் அலெக்ஸ்
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •